Don't Miss!
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'காக்க காக்க' வந்து 10 வருஷமாச்சாம்!
சென்னை: சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க படம் வந்து 10 வருடமாகியுள்ளது.
அன்புச் செல்வன் என்ற போலீஸ் கேரக்டரில் வந்து அதகளம் செய்திருந்தார் சூர்யா இந்தப் படத்தில்.
இப்படம் நேற்றுதான் வெளியானது போல உள்ளது. ஆனால் அதற்குள் 10 வருடங்களைத் தொட்டு விட்டது காக்க காக்க.
சூர்யாவுக்கு பெரும் பெயர்
காக்க காக்க படத்தில் சூர்யாவுக்கு மிகச் சிறப்பான பாத்திரம் அமைந்தது. இதனால் அவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
அன்புச்செல்வன் ஐபிஎஸ்
இப்படத்தில் அன்புச்செல்வன் என்ற போலீஸ் அதிகாரியாக வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தார் சூர்யா.
பாந்தமான ஜோதிகா
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி போட்டிருந்தார் ஜோதிகா. பாந்தமான டீச்சர் கேரக்டரில் கலக்கியிருப்பார். அந்த சேலைக்கட்டும், லுக்கும், நிதானமான நடிப்பும் அப்படியே அள்ளிக் கொண்டு போனது.
ஹாரிஸ் ஜெயராஜின் தாலாட்டிய இசை
இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட். எல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் புண்ணியம்.
வித்தியாசமான ஜீவன்
படத்தின் வில்லனாக வந்த ஜீவன், ஹீரோவாகநடித்துக் கொண்டிருந்த போது இந்தப் படத்துக்காக கொடூரமான வில்லனாக வந்திருந்தார். நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார் ஜீவன்.
நேர்த்தியான இயக்கம்
கெளதம் வாசுதேவ மேனனின் நேர்த்தியான இயக்கம், திரில்லான காட்சிகள், திட்டமிட்ட காட்சியமைப்பு என அனைத்துமே பிரமாதமாக இருந்தது.
போலீஸ் அதிகாரிகளின் பாராட்டு
இந்தப் படம் காவல்துறையினரையும் வெகுவாக கவர்ந்தது. பல போலீஸ் அதிகாரிகள் சூர்யாவையும், கெளதம் மேனனையும் வாய் விட்டுப் பாராட்டினர்.