Don't Miss!
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
மகளா என்னை வளர்க்கிறீங்க-குஷ்பு உருக்கம்!
கலைஞர் நகரம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு குஷ்பு பேசுகையில், சென்னை வந்த ஆரம்ப காலங்களில் நான் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன். சினிமா கலைஞர்களுக்கு வீடு கிடைப்பதில் அவ்வளவு சிரமம் இருக்கிறது.
ரொம்ப காலம் கழித்துதான் சொந்த வீடு வாங்கினேன். நான் சென்னை வந்து முதல் வீடு வாங்கிய போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். அந்த வீட்டில் தரையில் முகம் வைத்து படுத்தேன். அப்படியொரு நிம்மதியான தூக்கம் வந்தது. அது மாதிரி நிம்மதியான தூக்கம் எப்பவும் வந்தது இல்லை.
எங்களை கதாநாயகன் -நாயகி என்கிறார்கள். பால் அபிஷேகம் பண்றாங்க, கோயில் கட்டுறாங்க. உண்மையில் நாங்கள் கதாநாயகிகள் அல்ல. படப்பிடிப்பில் ஐந்து மணிக்கே டீ கொடுத்து குடை பிடிச்சி லைட் போடுறாங்களே அவங்கதான் கதாநாயகர்கள்.
அவர்களிடம் சாப்பீட்டிங்களா என்று கேட்கும் போது முகத்தில் தெரியும் சந்தோஷத்தை பார்க்க வேண்டும் அப்படி சந்தோஷம்.
இனி நீங்கள் யாரும் வீடு இல்லை என்று கஷ்டப்பட வேண்டியது இல்லை. யார் கிட்டயும் கை நீட்ட வேண்டாம். உங்களுக்கு சொந்தமா வீடு வரப்போகுது இந்த உதவி செய்த கலைஞருக்கு நன்றி சொல்றேன்.
நாமெல்லாம் ஒரே குடும்பம். சினிமாவில்தான் எந்த சாதி எந்த மதம்னு கேட்க மாட்டாங்க நான் 24 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். உங்க மகளா என்னை வளர்க்கிறீங்க எல்லோருக்கும் நன்றி என்றார்.