Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மகளா என்னை வளர்க்கிறீங்க-குஷ்பு உருக்கம்!
கலைஞர் நகரம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு குஷ்பு பேசுகையில், சென்னை வந்த ஆரம்ப காலங்களில் நான் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன். சினிமா கலைஞர்களுக்கு வீடு கிடைப்பதில் அவ்வளவு சிரமம் இருக்கிறது.
ரொம்ப காலம் கழித்துதான் சொந்த வீடு வாங்கினேன். நான் சென்னை வந்து முதல் வீடு வாங்கிய போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். அந்த வீட்டில் தரையில் முகம் வைத்து படுத்தேன். அப்படியொரு நிம்மதியான தூக்கம் வந்தது. அது மாதிரி நிம்மதியான தூக்கம் எப்பவும் வந்தது இல்லை.
எங்களை கதாநாயகன் -நாயகி என்கிறார்கள். பால் அபிஷேகம் பண்றாங்க, கோயில் கட்டுறாங்க. உண்மையில் நாங்கள் கதாநாயகிகள் அல்ல. படப்பிடிப்பில் ஐந்து மணிக்கே டீ கொடுத்து குடை பிடிச்சி லைட் போடுறாங்களே அவங்கதான் கதாநாயகர்கள்.
அவர்களிடம் சாப்பீட்டிங்களா என்று கேட்கும் போது முகத்தில் தெரியும் சந்தோஷத்தை பார்க்க வேண்டும் அப்படி சந்தோஷம்.
இனி நீங்கள் யாரும் வீடு இல்லை என்று கஷ்டப்பட வேண்டியது இல்லை. யார் கிட்டயும் கை நீட்ட வேண்டாம். உங்களுக்கு சொந்தமா வீடு வரப்போகுது இந்த உதவி செய்த கலைஞருக்கு நன்றி சொல்றேன்.
நாமெல்லாம் ஒரே குடும்பம். சினிமாவில்தான் எந்த சாதி எந்த மதம்னு கேட்க மாட்டாங்க நான் 24 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். உங்க மகளா என்னை வளர்க்கிறீங்க எல்லோருக்கும் நன்றி என்றார்.