உறவுக்காரப் பெண் சரண்யாவை மணந்தார் இயக்குனர் சற்குணம்

களவாணி படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சற்குணம். அவருக்கும், அவரது உறவுக்காரப் பெண்ணான சரண்யாவுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் திருமணம் நிச்சயி்த்தபடி நேற்று (15-ம் தேதி) தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தேத்தாடிக் கொல்லை, ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் நடந்தது.
வேத விற்பன்னர்கள் மந்திரம் சொல்ல சற்குணம் மணமகள் சரண்யா கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டினார். அவர்களை பெரியோர்கள் அட்சதைத் தூவி வாழ்த்தினார்கள்.
இந்த திருமணத்திற்கு நடிகர் விமல் தனது மனைவியுடன் வந்திருந்தார். மேலும் நடிகர்-இயக்குனர் பாக்கியராஜ், பூர்ணிமா பாக்கியராஜ், நடிகை சரண்யா பொன்வண்ணன், அவரது கணவர் பொன்வண்ணன் உள்பட பலர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மணமகள் சரண்யா எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். சற்குணத்தின் அடுத்த படம் வாகை சூடவா வரும் 23-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











