twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலக்கும் கல்யாணி.. சின்னப் பொண்ணான கல்யாணி ரொம்ப பெரிய பொண்ணாக இருப்பார் போலிருக்கிறது.இப்போது நடித்து வரும் இரு படங்களிலும் கிளாமரில் களேபரம் செய்து கொண்டிருக்கிறார்.தனது பெயரை விரைவில் பூர்ணிதா என்று மாற்றிக் கொள்ள போகிறாராம். கல்யாணி என்பது ரொம்பகர்நாடகமாக இருப்பதால் பேரை மாத்திக் கொள்ள திட்டமாம். (உடம்பு குண்டக்க மண்டக்க குண்டு போட்டுவருவதைப் பார்த்தால் பேரை பூர்ணிதா என்ன.. பூசணிக்கா என்றே மாத்தலாம் போலிருக்கே)சண்டே 9 டூ 10.30 என்ற படத்திலும் நாலாம் பக்கம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் கல்யாணி. இதில் நாலாம்பக்கம் படத்தின் கதை ரொம்ப விவகாரமாக இருக்கிறது. ஜெயேந்திரர் கைதையும் போலீஸ் அழகி ஜெயலட்சுமி கதையையும் ஒன்றாகப் போட்டு கலக்கி பிலிம் ரோலில்பூசப் போகிறார்களாம். இந்தப் படத்தை இயக்குவது புகுமுக இயக்குனரான மனோகர்.எதுக்கு பாஸ் இப்படி ஒரு விவகாரமான கதையைப் புடிச்சீங்க என்று கேட்டால்,உண்மைச் சம்பவங்களைச் சொல்லி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாமேனு தான்.. என்று இழுக்கும்மனோகர், ஆனால், படத்தில் யாருடைய கேரக்டரும் நேரடியாக யாரையும் குறிக்காத மாதிரி தான்எடுத்திருக்கோம் என்கிறார். குட்டி அர்ஜூன் என்பவர் ஹீரோவாக நடிக்க, இதில் கல்யாணி தான் ஹீரோயின். பெங்களூர்,மும்பை...பாட்டுக்காக வெளிநாடு என்று போய் வந்திருக்கிறார்கள்.சண்டே 9 டூ 10.30 படத்தில் கல்யாணிக்கு கவர்ச்சியை காய்ச்சி பாயாசமாய் ஊற்றும் கேரக்டராம். இந்தப்படத்தை இயக்குவது பாராதிராஜாவின் அசிஸ்டெண்ட் ஆன அன்பு.ஒவ்வொரு சண்டேயும் இளைஞன், இளைஞர்களுக்கு மிக ஜாலியானது, அதை அவர்கள் அனுபவிக்கும் விதமேமிக அலாதியானது. அப்படி ஊர் சுற்றும்போது நடக்கும் ஒரு சம்பவத்தால் பெண் மற்றும் பையனின் வாழ்வில்ஏற்படும் மாற்றம் தான் கதையாம்.படத்தில் அருவியில் குளியல்.. பாடல் காட்சிகளில் கல்யாணி உடைகளுக்குத் துறவறம் தந்துகலக்கியிருக்கிறாராம்.

    By Staff
    |

    சின்னப் பொண்ணான கல்யாணி ரொம்ப பெரிய பொண்ணாக இருப்பார் போலிருக்கிறது.

    இப்போது நடித்து வரும் இரு படங்களிலும் கிளாமரில் களேபரம் செய்து கொண்டிருக்கிறார்.

    தனது பெயரை விரைவில் பூர்ணிதா என்று மாற்றிக் கொள்ள போகிறாராம். கல்யாணி என்பது ரொம்பகர்நாடகமாக இருப்பதால் பேரை மாத்திக் கொள்ள திட்டமாம். (உடம்பு குண்டக்க மண்டக்க குண்டு போட்டுவருவதைப் பார்த்தால் பேரை பூர்ணிதா என்ன.. பூசணிக்கா என்றே மாத்தலாம் போலிருக்கே)

    சண்டே 9 டூ 10.30 என்ற படத்திலும் நாலாம் பக்கம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் கல்யாணி. இதில் நாலாம்பக்கம் படத்தின் கதை ரொம்ப விவகாரமாக இருக்கிறது.


    ஜெயேந்திரர் கைதையும் போலீஸ் அழகி ஜெயலட்சுமி கதையையும் ஒன்றாகப் போட்டு கலக்கி பிலிம் ரோலில்பூசப் போகிறார்களாம். இந்தப் படத்தை இயக்குவது புகுமுக இயக்குனரான மனோகர்.

    எதுக்கு பாஸ் இப்படி ஒரு விவகாரமான கதையைப் புடிச்சீங்க என்று கேட்டால்,

    உண்மைச் சம்பவங்களைச் சொல்லி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாமேனு தான்.. என்று இழுக்கும்மனோகர், ஆனால், படத்தில் யாருடைய கேரக்டரும் நேரடியாக யாரையும் குறிக்காத மாதிரி தான்எடுத்திருக்கோம் என்கிறார்.


    குட்டி அர்ஜூன் என்பவர் ஹீரோவாக நடிக்க, இதில் கல்யாணி தான் ஹீரோயின். பெங்களூர்,மும்பை...பாட்டுக்காக வெளிநாடு என்று போய் வந்திருக்கிறார்கள்.

    சண்டே 9 டூ 10.30 படத்தில் கல்யாணிக்கு கவர்ச்சியை காய்ச்சி பாயாசமாய் ஊற்றும் கேரக்டராம். இந்தப்படத்தை இயக்குவது பாராதிராஜாவின் அசிஸ்டெண்ட் ஆன அன்பு.

    ஒவ்வொரு சண்டேயும் இளைஞன், இளைஞர்களுக்கு மிக ஜாலியானது, அதை அவர்கள் அனுபவிக்கும் விதமேமிக அலாதியானது. அப்படி ஊர் சுற்றும்போது நடக்கும் ஒரு சம்பவத்தால் பெண் மற்றும் பையனின் வாழ்வில்ஏற்படும் மாற்றம் தான் கதையாம்.

    படத்தில் அருவியில் குளியல்.. பாடல் காட்சிகளில் கல்யாணி உடைகளுக்குத் துறவறம் தந்துகலக்கியிருக்கிறாராம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X