twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரீஸில் அமிதாப் கவிதை பாடும் நிகழ்ச்சி-கமல் பங்கேற்பு

    By Sudha
    |

    Amitabh and Kamal Haasan
    பாரீஸில் நடைபெறவுள்ள தனது கவிதை பாடும் நிகழ்ச்சிக்கு வருமாறு கமல்ஹாசனுக்கு அமிதாப் பச்சன் அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்ற கமலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

    இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி...

    கமல்ஹாசன் பாரீஸில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். எனக்கு செய்தி அனுப்பினார். நான் எனது கவிதை பாடும் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

    பாரீஸில் உள்ள தியேட்டர் டி சாம்ப்ஸ் எல்சியில் தனது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனின் கவிதைளை பாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் அமிதாப். அதற்குத்தான் கமலை அழைத்துள்ளார்.

    கமல்ஹாசன் தற்போது மன்மதன் அம்பு பட ஷூட்டிங்குக்காக பாரீஸில் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X