Don't Miss!
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கெளதமி நடிக்கும் டிவி சீரியல்... கமல் தொடங்கி வைத்தார்!
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மெகாமாலில் இதன் துவக்க விழா இன்று நடந்தது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
திங்கள் முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதையை எழுதியிருப்பவர் நடிகை குட்டிபத்மினியின் மகள்.
இதுபற்றி கெளதமி கூறுகையில், "நிறைய பேர் என்னை மீண்டும் நடிக்கச் சொல்லிக் கேட்டார்கள். ஆனால் அப்போதல்லாம் மறுத்து வந்த நான், இந்தக் கதையைக் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். கிட்டத்தட்ட 8 மாதங்கள் இதற்காக என்னைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் குட்டிபத்மின். அவருக்கு நன்றி" என்றார்.
அபிராமி ராமநாதன் பேசுகையில், "ஆரம்பத்தில் சில சீரியல்கள் தயாரித்தேன். இப்போது மீண்டும் அதை தொடங்கியுள்ளேன். இந்த முறை மிக விரிவாக செய்யப் போகிறோம். இப்போது கலைஞர் தொலைக்காட்சிக்கு ஒரு சீரியல் தயாரிக்கும் நாங்கள், அடுத்து எல்லா டிவிக்கும் தொடர்கள் செய்யத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இந்தத் தொடரில் கெளதமி அணியும் ஆடைகளை நல்லி குப்புசாமி நிறுவனமும், ரூ 50 லட்சம் மதிப்புள்ள நகைகளை என்ஏசி ஜுவல்லரியும் ஸ்பான்சர் செய்துள்ளன.
முதல் காட்சி படமாக கேமராவை கமல்ஹாஸன் துவக்கி வைக்க, ராமநாராயணன் க்ளாப் அடித்தார்.
விழாவில் குஷ்பு, கஸ்தூரி ராஜா, கல்பனா, கேஆர்ஜி, கலைப்புலி தாணு, கலைப்புலி சேகரன், விசி குகநாதன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.