Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கமலுடே 'கதா'!
Click here for more images |
கலைஞானி கமல்ஹாசனின் மகாநதி மற்றும் ஹே ராம் ஆகிய இரு படங்களின் திரைக் கதைகளும், மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
கமல்ஹாசனின் முத்திரைப் படங்களில் ஹே ராமுக்கும், மகாநதிக்கும் தனி இடம் உண்டு. இந்த இரு படங்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற படங்கள். இப்போது இந்தப் படங்களின் திரைக்கதைகள் தனி நூல்களாக மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
திருவனந்தபுரத்தில் இதுதொடர்பான விழா நடந்தது. அங்கு நடந்து வரும் உலக புத்தக விழாவில் நடந்த இந்த விழாவில் இரு நூல்களும் வெளியிடப்பட்டன.
'கமல்ஹாசண்ட ரண்டு திரக்கதகள்' என இந்த நூல்களுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. டிசி புக்ஸ் இதை வெளியிட்டுள்ளது. மலையாளத்தில் விஸ்வநாதன் மொழிபெயர்த்துள்ளார். மலையாளத்தில் முன்னணி எழுத்தாளரான டி.பத்மநாபன் நூலை வெளியிட்டார்.
புத்தகங்களை வெளியிட்ட பின்னர் கமல்ஹாசன் பேசுகையில், இந்த நாள் எனக்கு மிகப் பெரிய நாள். கேரள அறிவுஜீவிகள், எனது திரைக்கதைகளை அவர்களின் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது என்னைக் கவர்ந்து விட்டது.
எனது தசாவதாரம் திரைக்கதையையும் மலையாளத்தில் வெளியிட வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர்.
நான் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. எனது திரைக்கதை நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கும் நாளும் வரும் என்றார்.
நிகழ்ச்சியில் ஆசியாநெட் டிவி தலைவர் கே.பி.மோகன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.