Don't Miss!
- News முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
- Sports தலையே வெடிச்சிடும் போல இருக்கு.. அவ்வுளவு தவறு நடக்குது.. டி20 யே மாறிவிட்டது..RCB கேப்டன் டுபிளசிஸ்
- Automobiles இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!
- Lifestyle மீன ராசியில் உதயமாகும் புதன்: இன்னும் 4 நாட்களில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கப்போகுது...
- Finance சிங்கம் களமிறங்கிடுச்சு.. அலாவுதீன் அற்புத விளக்கை கொண்டு வரும் முகேஷ் அம்பானி..!!
- Technology ரூ.10,000 போன் ரூ.6,000-க்கு.. Amazon-ன் Summer Sale-ல்.. செம்ம டிமாண்ட் ஆகும் Itel போன்.. 12GB ரேம் வேற!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
நடிகை கனகா Vs ஆவி அமுதா வழக்கு தள்ளி வைப்பு!
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் ஆவி அமுதா. இவர், இறந்தவர்களின் ஆவியுடன், சம்பந்தப்பட்ட உறவினர்கள் பேசுவதாகக் கூறி, அதற்கென மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
தனது தாயார் தேவிகாவின் ஆவியுடன் பேசுவதற்காக ஆவிஅமுதாவை நடிகை கனகா தொடர்பு கொண்டுள்ளார். அப்போது இருவரும் நெருங்கிப் பழகினர்.
இந்நிலையில் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் முத்துக்குமார் என்பவருக்கும், கனகாவுக்கும் ரகசிய திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் முத்துக்குமார், கனகாவை விட்டு மாயமாகிவிட்டார்.
ஆவிஅமுதாதான் முத்துக்குமாரை தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாக கனகா குற்றம் சாட்டினார்.
தனது மீது அவதூறு செய்தியை பரப்பி, பெயருக்கு களங்கம் விளைவித்த கனகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் ஆவிஅமுதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நேற்று நடந்தது. கனகா மற்றும் ஆவிஅமுதா இருவரும் நேற்று சைதை நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 27ம்தேதிக்கு தள்ளி வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.