திருட்டு விசிடி-மாட்டிவிட்ட கரண் கொக்கி படத்தின் திருட்டு விசிடிகளை விற்ற திரைப்பட உதவி இயக்குனர் உள்ளிட்ட2 பேரை அப்படத்தின் நாயகன் கரண் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார்.நடிகர் கரண், சஞ்சனா நடிப்பில் வெளியான கொக்கி வெற்றிப் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் திருட்டு விசிடியை ஒருவர் வட பழனி 100 அடிசாலையில் வீட்டில் வைத்து விற்று வருவதாக கரணுக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து கரணும், தயாரிப்பாளர் சக்திகுமாரும் அந்த இடத்திற்கு விரைந்தனர்.காரில் அமர்ந்தபடி சம்பந்தப்பட்ட நபரை அவர்கள் கண்காணித்தனர்.அப்போது அந்த நபர் கொக்கி பட திருட்டு விசிடியை பகிரங்கமாக விற்றார்.இதையடுத்து தங்களுடன் வந்த ஒருவரை அந்த நபரிடம் அனுப்பி கொக்கி படதிருட்டு விசிடியை வாங்குமாறு கூறினார்.அவரும் சென்று கொக்கி பட திருட்டு விசிடியை விலைக்குக் கேட்டார். பணத்தைக்கொடுத்த பின்னர் திருட்டு விசிடியை கரண் அனுப்பிய நபரிடம் விசிடி வியாபாரிகொடுத்தார்.அதற்குள் போலீஸாருக்கு கரண் செல்போன் மூலம் தகவல் தந்ததால் போலீஸார்விரைந்து வந்து திருட்டு விசிடியை விற்ற நபரை மடக்கிப் பிடித்தனர்.போலீஸ் விசாரணையில் திருட்டு விசிடியை விற்றவர் சரவணன் என்பதும் அவருக்குஉதவி இயக்குனர் அன்பு என்பவர் உடந்தையாக இருப்பதும் தெரிய வந்தது.இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்துத 500க்கும் மேற்பட்டதிருட்டு விசிடிக்கள் சிக்கின.
நடிகர் கரண், சஞ்சனா நடிப்பில் வெளியான கொக்கி வெற்றிப் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் திருட்டு விசிடியை ஒருவர் வட பழனி 100 அடிசாலையில் வீட்டில் வைத்து விற்று வருவதாக கரணுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கரணும், தயாரிப்பாளர் சக்திகுமாரும் அந்த இடத்திற்கு விரைந்தனர்.காரில் அமர்ந்தபடி சம்பந்தப்பட்ட நபரை அவர்கள் கண்காணித்தனர்.
அவரும் சென்று கொக்கி பட திருட்டு விசிடியை விலைக்குக் கேட்டார். பணத்தைக்கொடுத்த பின்னர் திருட்டு விசிடியை கரண் அனுப்பிய நபரிடம் விசிடி வியாபாரிகொடுத்தார்.
அதற்குள் போலீஸாருக்கு கரண் செல்போன் மூலம் தகவல் தந்ததால் போலீஸார்விரைந்து வந்து திருட்டு விசிடியை விற்ற நபரை மடக்கிப் பிடித்தனர்.
இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்துத 500க்கும் மேற்பட்டதிருட்டு விசிடிக்கள் சிக்கின.
Comments


Click it and Unblock the Notifications