கார்த்தி - அனுஷ்கா நடிக்கும் புதிய படம்... 11-11-11-ல் தொடங்கியது!

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்ட 11-11-11அன்று தொடங்கியது.
பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தி - அனுஷ்காவுடன், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கார்த்தியும் சந்தானமும் இணைந்த சிறுத்தை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து சகுனியிலும் கார்த்தியுடன் இணைந்துள்ளார் சந்தானம்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்காக மரத்தால் ஆன பிரமாண்டமான பங்களா செட் அமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் பிரபாகர்.
சாலக்குடியில் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications