Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கண்ணதாசன் தயாரிப்பில் "வானம்பாடி" படத்தில் நடிகை தேவிகாவை ஓவியமாக தீட்டிய கவியரசு! ரீவைண்ட் ஸ்பெஷல்!
சென்னை: தென்னிந்தியா திரைப்பட நடிகை 'தேவிகா' மணமகன் தேவை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர்.
இவர் அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம்ஜிஆர்,சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன் ஆகியோருடன் நடித்திருக்கிறார்.
'வானம்பாடி' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மற்றும் வெற்றிக்கான காரணங்களை இந்த தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பத்திரிகையாளர் சுறா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சில சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.
வாரிசு, துணிவு படத்துடன் மோதும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' ஐமேக்ஸ்-3-D படம்..அயோத்தியில் டீசர் வெளியீடு
வானம்பாடி திரைக்காவியத்தில் பல கலைஞர்கள்
கவியரசு கண்ணதாசன் தயாரிப்பில் வானம்பாடி திரைப்படம் 1963 ல் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி அடைந்தது. இந்தப் படத்தின் கதாநாயகனாக லட்சிய நடிகன் 'எஸ்.எஸ் ராஜேந்திரன்' கதாநாயகியாக 'தேவிகா' இரண்டாம் கதாநாயகனாக ஆர் முத்துராமன் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியவர் 'ஜி.ஆர் நாதன்'இசையமைத்தவர் கே.வி மகாதேவன்.
அணைத்து பாடல்களையும் எழுதியுள்ள கவியரசு
இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பார், இப்படமானது பாடல்களுக்காகவே திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடின; குறிப்பாக 'கங்கைக் கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே' மற்றும் 'தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே' போன்ற பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது.
பாடல்களின் காட்சி அமைப்பு
"கங்கைக் கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே" என்ற பாடலுக்காகவே 60-களில் மக்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. இந்தப் பாடலில் 'தேவிகா' அமர்ந்திருக்கும் நிலையிலே படம்பிடிக்கப்பட்டிருக்கும்,ஜி.ஆர் நாதனின் ஒளிப்பதிவில் தேவிகாவின் முகத்தை ஓவியமாக தீட்டினால் முகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் இந்த பாடல் காட்சிகளில், தேவிகாவின் லீப் மூவ்மெண்ட் இந்தப் பாடல்களுடன் அவ்வளவு சிறப்பாக பொருந்தியிருக்கும்.
"தூக்கணாங்குருவி கூடு" பாடலின் சிறப்பம்சம்
இந்த படத்தில்'தேவிகா' பின்னணி பாடகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், பின்னணி பாடகி ஆன பின்பு "தூக்கணாங்குருவி கூடு" என்ற முழு பாடளை ஒளிப்பதிவு கூடத்தில், எப்படி பதிவு செய்கிறார்கள் என்பதனை 1963-லயே படம் பிடித்து காண்பித்து இருப்பார்கள்; இது போன்ற பாடல்களுக்காகவே சினிமா ரசிகர்கள் 60-களில் திரும்பத் திரும்ப இந்த படத்தை பார்த்திருக்கிறார்கள் என்பது இப்படத்தின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.