twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குஷ்புவுக்கு புது எதிர்ப்பு! பெரியாரின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் மணியம்மை வேடத்தில் குஷ்புநடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இயக்குனர் ஞானராஜசேகரன் குழம்பிப்போயுள்ளார்.சத்யராஜ் பெரியார் வேடத்தில் நடிக்க பெரியார் என்ற பெயரில் படம் ஒன்றைஇயக்கவுள்ளார் ஞான ராஜசேகரன். ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜசேகரன் ஏற்கனவேபாரதி படத்தை இயக்கியவர்.தற்போது பெரியாரின் வாழ்ககையை படமாக்க உள்ளார்.இதில் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்புவையும், நாகம்மைவேடத்தில் நடிக்க மலையாள நடிகை கீது மோகன்தாஸையும் பேசி வைத்துள்ளார்ஞான ராஜசேகரன்.விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் புதிய சிக்கல் ஒன்றுஎழுந்துள்ளதாம்.அதாவது மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பதற்கு திராவிடர் கழகத்தைச்சேர்ந்தவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனராம்.கல்யாணத்திற்கு முன்பே எல்லாம் செய்யலாம் என்ற புரட்சிக் கலாச்சாரத்துக்கு உரியவரானகற்பு புகழ் குஷ்பு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர். இதனால் அவரைப் போய்மணியம்மை வேடத்தில் நடிக்க வைப்பதா என்று ஞான ராஜசேகரனுக்கு அவர்கள்கடிதம் எழுதியுள்ளனராம்.குஷ்புவை மணியம்மை வேடத்தில் நடிக்க வைத்தால் அது மணியம்மையைஇழிவுபடுத்தும் செயல் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.இதனால் குழம்பியுள்ள ஞான ராஜசேகரன் பேசாமல் குஷ்புவை மாற்றி விடலாம்என்ற எண்ணத்திற்கு வந்துள்ளாராம்.முதலில் இந்த வேடத்தில் நடிக்க வைக்க ஸ்னேகாவைத்தான் அணுகினார் ஞானராஜசேகரன். ஆனால் புதுப்பேட்டையில் தாசியாக நடித்ததால், இந்த வேடத்தில்நடித்தால் சர்ச்சைகள் எழலாம் என்று யூகித்த ஸ்னேகா, தானாகவே டீசண்டாக நடிக்கமறுத்து விட்டார்.இதனால்தான் குஷ்புவை அணுகினார் ராஜசேகரன். தேவையில்லாமல் வாயைத்திறக்கப் போய் படம் எதுவும் இல்லாமல் வீட்டோடு கிடந்த குஷ்பு, இந்தப் படத்தில்நடிப்பதன் மூலம் தன் மீதான கற்பு சர்ச்சையிலிருந்து எஸ்கேப் ஆகி விடலாம் என்றுநினைத்து உடனடியாக ஓ.கே . சொன்னார்.இப்போது அதிலும் மண் விழுந்து விடும் போலிருக்கிறது.

    By Staff
    |
    பெரியாரின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் மணியம்மை வேடத்தில் குஷ்புநடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இயக்குனர் ஞானராஜசேகரன் குழம்பிப்போயுள்ளார்.

    சத்யராஜ் பெரியார் வேடத்தில் நடிக்க பெரியார் என்ற பெயரில் படம் ஒன்றைஇயக்கவுள்ளார் ஞான ராஜசேகரன். ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜசேகரன் ஏற்கனவேபாரதி படத்தை இயக்கியவர்.

    தற்போது பெரியாரின் வாழ்ககையை படமாக்க உள்ளார்.

    இதில் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்புவையும், நாகம்மைவேடத்தில் நடிக்க மலையாள நடிகை கீது மோகன்தாஸையும் பேசி வைத்துள்ளார்ஞான ராஜசேகரன்.

    விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் புதிய சிக்கல் ஒன்றுஎழுந்துள்ளதாம்.

    அதாவது மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பதற்கு திராவிடர் கழகத்தைச்சேர்ந்தவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனராம்.

    கல்யாணத்திற்கு முன்பே எல்லாம் செய்யலாம் என்ற புரட்சிக் கலாச்சாரத்துக்கு உரியவரானகற்பு புகழ் குஷ்பு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர். இதனால் அவரைப் போய்மணியம்மை வேடத்தில் நடிக்க வைப்பதா என்று ஞான ராஜசேகரனுக்கு அவர்கள்கடிதம் எழுதியுள்ளனராம்.

    குஷ்புவை மணியம்மை வேடத்தில் நடிக்க வைத்தால் அது மணியம்மையைஇழிவுபடுத்தும் செயல் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.

    இதனால் குழம்பியுள்ள ஞான ராஜசேகரன் பேசாமல் குஷ்புவை மாற்றி விடலாம்என்ற எண்ணத்திற்கு வந்துள்ளாராம்.

    முதலில் இந்த வேடத்தில் நடிக்க வைக்க ஸ்னேகாவைத்தான் அணுகினார் ஞானராஜசேகரன். ஆனால் புதுப்பேட்டையில் தாசியாக நடித்ததால், இந்த வேடத்தில்நடித்தால் சர்ச்சைகள் எழலாம் என்று யூகித்த ஸ்னேகா, தானாகவே டீசண்டாக நடிக்கமறுத்து விட்டார்.

    இதனால்தான் குஷ்புவை அணுகினார் ராஜசேகரன். தேவையில்லாமல் வாயைத்திறக்கப் போய் படம் எதுவும் இல்லாமல் வீட்டோடு கிடந்த குஷ்பு, இந்தப் படத்தில்நடிப்பதன் மூலம் தன் மீதான கற்பு சர்ச்சையிலிருந்து எஸ்கேப் ஆகி விடலாம் என்றுநினைத்து உடனடியாக ஓ.கே . சொன்னார்.

    இப்போது அதிலும் மண் விழுந்து விடும் போலிருக்கிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X