ஹீரோயின் தான்.. லைலா இனிமேல் நான் எனது வீட்டுக்காரருக்குப் பிடிக்கும் கதைகளை மட்டுமே தேர்வுசெய்து நடிக்கப் போகிறேன் என்று அட்டாக் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் மிஸஸ்லைலா.அசமஞ்சமாக ஆரம்பித்து பார்த்தேன் ரசித்தேன் படத்தின் மூலம் ஓவர்நைட்டில் சூப்பர்ஹீரோயினாக மாறிய லைலா, பிதாமகனில் விஸ்வரூபம் எடுத்தார்.இனிமேல் லைலாவின் ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கப் போகிறது என்று எல்லோரும்எதிர்பார்த்த வேளையில், திடீரென்று அட்ரஸ் இல்லாமல் போனார் லைலா.மும்பைக்குப் போய் விட்ட லைலா தமிழ்ப் படம் எதிலும் புக் ஆகவில்லை.திடீரென்று பிரகாஷ் ராஜின் கண்ட நாள் முதல் மூலம் மீண்டும் வந்தார். இந்தப் படம்சூப்பர் ஹிட் ஆகவே, லைலா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்ற எண்ணம்ஏற்பட்டது.இதை உறுதி செய்வது போல அஜீத்துடன் பரமசிவனில் ஜோடி சேர்ந்தார் லைலா.ஆனால் படம் முடிவதற்கு முன்பே காதலரைத் திருமணம் செய்து கொண்டுதேனிலவுக்குப் போய் விட்டார் லைலா. இனிமேல் அவர் நடிப்பாரா, இல்லையாஎன்ற கேள்வி கோலிவுட்டில் சூடாக கிளம்பிய நிலையில் தேனிலவை முடித்து விட்டுதித்திப்பாக ஊர் திரும்பியுள்ளார் லைலா.முன்பை விட கூடுதல் பளபளப்புடன், சந்தோஷத்துடன் இருக்கிறார் லைலா. மீண்டும்நடிக்க வருவீர்களா லைலா என்று கேட்டால், நான் எப்போதுமே சினிமாவை விட்டுவிலகப் போவதாக சொன்னதே இல்லை.எனது கணவருடன் சினிமாவில் தொடருவேன். அவருடன் கதை குறித்துஆலோசிப்பேன், அவருக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ஓ.கேதான் என்கிறார்லைலா.திருமணத்தையும், தேனிலவையும் முடித்து விட்டுத் திரும்பியுள்ள லைலா இப்போதுமோகன்லாலுடன், மகாசத்திரம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் பாதி முடிந்து விட்டதாம். இதை முடித்து விட்டு தமிழில் தீவிர கவனம்செலுத்தப் போகிறாராம் லைலா.அவருடன் படப்பிடிப்புக்குத் துணையாக வருவாராம் மிஸ்டர் லைலா!திருணமாகி விட்டதால் ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் வரும் என்றுஎதிர்பார்க்கிறீர்களா லைலா என்று கட்டால் சட்டென்று கோபம் வருகிறதுலைலாவுக்கு.என்ன கேள்வி இது ,கல்யாணமானால் என்ன? ஹீரோயினாக நடிக்கக் கூடாது. அக்கா,அண்ணி, அம்மா வேடத்திலா நான் நடிக்க முடியும்? எனக்கு அவ்வளவு வயதாகிவிட்டதா? என்னிடம் இளமை மிச்சமிருக்கும் வரை ஹீரோயினாகத்தான் நடிப்பேன்என்றார்.லைலா இப்படி வீராவேசமாக பேசினாலும், நம்ம ஊர் இயக்குனர்களுக்கு வேறுமாதிரியான எண்ணம்தானே வரும். சுஹாசினியையே கமலுக்கு அம்மாவாக நடிக்கவர முடியுமா என்று கேட்டவர்கள்தானே கோலிவுட்காரர்கள்.இதை லைலாவிடம் எடுத்துச் சொன்னால், லூசாப்பா நீ... என்பாரே...
இனிமேல் நான் எனது வீட்டுக்காரருக்குப் பிடிக்கும் கதைகளை மட்டுமே தேர்வுசெய்து நடிக்கப் போகிறேன் என்று அட்டாக் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் மிஸஸ்லைலா.
அசமஞ்சமாக ஆரம்பித்து பார்த்தேன் ரசித்தேன் படத்தின் மூலம் ஓவர்நைட்டில் சூப்பர்ஹீரோயினாக மாறிய லைலா, பிதாமகனில் விஸ்வரூபம் எடுத்தார்.
இனிமேல் லைலாவின் ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கப் போகிறது என்று எல்லோரும்எதிர்பார்த்த வேளையில், திடீரென்று அட்ரஸ் இல்லாமல் போனார் லைலா.
மும்பைக்குப் போய் விட்ட லைலா தமிழ்ப் படம் எதிலும் புக் ஆகவில்லை.திடீரென்று பிரகாஷ் ராஜின் கண்ட நாள் முதல் மூலம் மீண்டும் வந்தார். இந்தப் படம்சூப்பர் ஹிட் ஆகவே, லைலா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்ற எண்ணம்ஏற்பட்டது.
இதை உறுதி செய்வது போல அஜீத்துடன் பரமசிவனில் ஜோடி சேர்ந்தார் லைலா.
ஆனால் படம் முடிவதற்கு முன்பே காதலரைத் திருமணம் செய்து கொண்டுதேனிலவுக்குப் போய் விட்டார் லைலா. இனிமேல் அவர் நடிப்பாரா, இல்லையாஎன்ற கேள்வி கோலிவுட்டில் சூடாக கிளம்பிய நிலையில் தேனிலவை முடித்து விட்டுதித்திப்பாக ஊர் திரும்பியுள்ளார் லைலா.
முன்பை விட கூடுதல் பளபளப்புடன், சந்தோஷத்துடன் இருக்கிறார் லைலா. மீண்டும்நடிக்க வருவீர்களா லைலா என்று கேட்டால், நான் எப்போதுமே சினிமாவை விட்டுவிலகப் போவதாக சொன்னதே இல்லை.
எனது கணவருடன் சினிமாவில் தொடருவேன். அவருடன் கதை குறித்துஆலோசிப்பேன், அவருக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ஓ.கேதான் என்கிறார்லைலா.
திருமணத்தையும், தேனிலவையும் முடித்து விட்டுத் திரும்பியுள்ள லைலா இப்போதுமோகன்லாலுடன், மகாசத்திரம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் பாதி முடிந்து விட்டதாம். இதை முடித்து விட்டு தமிழில் தீவிர கவனம்செலுத்தப் போகிறாராம் லைலா.
அவருடன் படப்பிடிப்புக்குத் துணையாக வருவாராம் மிஸ்டர் லைலா!
திருணமாகி விட்டதால் ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் வரும் என்றுஎதிர்பார்க்கிறீர்களா லைலா என்று கட்டால் சட்டென்று கோபம் வருகிறதுலைலாவுக்கு.
என்ன கேள்வி இது ,கல்யாணமானால் என்ன? ஹீரோயினாக நடிக்கக் கூடாது. அக்கா,அண்ணி, அம்மா வேடத்திலா நான் நடிக்க முடியும்? எனக்கு அவ்வளவு வயதாகிவிட்டதா? என்னிடம் இளமை மிச்சமிருக்கும் வரை ஹீரோயினாகத்தான் நடிப்பேன்என்றார்.
லைலா இப்படி வீராவேசமாக பேசினாலும், நம்ம ஊர் இயக்குனர்களுக்கு வேறுமாதிரியான எண்ணம்தானே வரும். சுஹாசினியையே கமலுக்கு அம்மாவாக நடிக்கவர முடியுமா என்று கேட்டவர்கள்தானே கோலிவுட்காரர்கள்.
இதை லைலாவிடம் எடுத்துச் சொன்னால், லூசாப்பா நீ... என்பாரே...


Click it and Unblock the Notifications