twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிரஞ்சனிடம் லட்சுமி ராய் மாட்டியது எப்படி?

    By Staff
    |

    தனது புகழைக் கெடுக்க சிலர் முயல்வதாகவும், புரோக்கர் மாமா நிரஞ்சனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நடிகை லட்சுமி ராய்கூறியுள்ள நிலையில், ராய் குறித்த பல பின்னணி தகவல்களை போலீசில் புட்டு புட்டு வைத்து வருகிறார் நிரஞ்சன்.

    சென்னை வடபழனியில் விபசார தடுப்பு பிரிவு போலீஸாரிடம் சிக்கிய தெலுங்கு உதவி டைரக்டரும் விபசார புரோக்கருமான நிரஞ்சனிடம்இருந்தும், அவரது வீட்டிலிருந்தும் நடிகைகளின் ஆல்பம் கிடைத்தது. நடிகைகள், அவர்களது ரேட் என மெனு கார்ட் போட்டு மாமா வேலைபார்த்து வந்துள்ளார் நிரஞ்சன்.

    இதில் 3 முக்கிய தெலுங்கு நடிகைகள் போட்டோக்களுடன் லட்சுமி ராயும் இடம் பிடித்திருந்தார்.

    ஆனால், தான் மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தனக்கு இந்த மாதிரி பிஸினஸ் செய்து பணம் சம்பாதிக்க வே வேண்டியஅவசியமில்லை என்றும் கூறியிருந்தார் ராய்.

    ஆனால், ஆல்பத்தில் லட்சுமி ராய் படம் இடம் பெற்றது குறித்து புரோக்கர் நிரஞ்சன் போலீசாரிசம் கூறுகையில்,

    நான் நடிகனாகும் ஆசையில் சினிமாவுக்கு வந்தவன். ஆனால் எடுபிடி வேலையே கிடைத்தது. சில டைரக்டரிடம் பழக்கம் ஏற்பட்டு உதவிடைரக்டராக சேர்ந்தபோது சரியான வருமானம் இல்லாததால் சில துணை நடிகைகளை வைத்து விபசாரம் நடத்தினேன்.

    இதே போல சினிமாவில் நடிக்க தேடிவரும் பெண்களிடமிருந்து போட்டோவை பெற்றுக் கொண்டு வாய்ப்பு தருவதாக கூறுவேன். அந்தபோட்டோக்களை வைத்துக் கொண்டு சில பார்ட்டிகளிடம் பேசுவேன். அந்த பார்ட்டிக்கு பெண்ணை பிடித்திருந்தால், தயாரிப்பாளர் கூப்பிடுகிறார்,கொஞ்சம் அட்ஜஸ் செய் என்று சொல்லி அனுப்பி வைப்பேன். அதில் நல்ல காசு கிடைத்தது.

    இப்படி சினிமா வாய்ப்பு தேடி வந்த பல பெண்களை விபச்சாரத்தில் இறக்கிவிட்டுள்ளேன்.

    இதே போலத்தான் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டு தன் தாயுடன் வந்தார் லட்சுமி ராய். அவரைதொடர்புக் கொள்ள செல்போன் எண்ணும், தன் போட்டோவையும் கொடுத்தார்.

    சினிமா வாய்ப்பு இல்லாததால் அவரை வைத்து லட்சக் கணக்கில் சம்பாதிக்க திட்டமிட்டு அவரை சிலருக்கு விருந்தாக்கி பணம் சம்பாத்தித்தேன்.இதற்கிடையில் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதன் பின்னர் என்னுடன் தொடர்புக் கொள்வதை நிறுத்திக்கொண்டார். மிகப் பெரிய பார்ட்டிகள் வந்தால் மட்டுமே அவர் செல்வார் என்று கூறியுள்ளார் நிரஞ்சன்.

    கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பல தமிழ், தெலுங்குபடங்களில் நடித்துவிட்ட இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் பெல்காம். மிஸ் பெல்காம் பட்டம் எல்லாம் பெற்றவர்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X