Don't Miss!
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஷோபனா மீது பெண் டாக்டர் பரபரப்பு புகார்
எனக்குள் ஒருவன் படத்தில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் ஷோபனா. மறைந்த நடிகை நாட்டியப் பேரொளி பத்மினியின் உறவினர். சிறந்த நடனக்கலைஞரான ஷோபனா சமீப காலமாக நடிப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டார். முழுக்க முழுக்க நாட்டியத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் நெஹ்ரா என்பவருடன், ஷோபனாவுக்கு காதல் மலர்ந்திருப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. முதலில் இதை மறுத்தார் ஷோபனா. ஆனால் பிறகு கப்சிப் ஆகி விட்டார்.
சென்னையில் உள்ள ஷோபனாவின் வீட்டில்தான் ராகுலும் தற்போது தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராகுலின் மனைவி ஷாலினி தனது இரு குழந்தைகள் மற்றும் தந்தையுடன் சென்னைக்கு வந்து முகாமிட்டுள்ளார். ஷோபனா, தனது கணவரைப் பறித்துக் கொண்டு விட்டதாக கண்ணீர் மல்க கூறுகிறார்.
ஷாலினி ஒரு பல் டாக்டர் ஆவார். ஷோபனாவின் செயல் குறித்து அவர் கூறுகையில், எனது கணவர் கடந்த ஒரு வருடமாக வீட்டுக்கே வருவதில்லை. எனக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஷோபனாதான் இத்தனைப் பிரச்சினைக்கும் காரணம். தற்போது எனது கணவரை தனது வீட்டுக்கே அழைத்துப் போய் விட்டார் ஷோபனா. எனது கணவரைப் பார்க்க விடாமல் தடுக்கிறார்.
தயவு செய்து எனது கணவரை ஷோபனா விட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் எனது இரு குழந்தைகளுடன் அவரது வீட்டின் முன்பு மறியல் நடத்துவேன் என்று கூறியுள்ளார் ஷாலினி.
அதேசமயம், ராகுல் நெஹ்ராவின் தந்தையோ, ஷாலினி மீது குற்றம் சாட்டுகிறார். அவர் கூறுகையில், என்னை வீட்டை விட்டே வெளியேற்றியவர் ஷாலினி. என்னையும், எனது மகனையும் பிரித்தார். ஆனால் மகனுக்காக அதைப் பொறுத்துக் கொண்டேன்.
எங்கள் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்டு குடும்பத்தையே சீர்குலைத்தார். இப்போது தனது கணவர் மீது பாசம் கொண்டவர் போல நாடகமாடுகிறார் என்று கூறியுள்ளார்.
அதேசமயம், நடிகை ஷோபனா தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்ற அவசியம் தனக்கு இல்லை என்றும், ஷாலினி சட்டப்படியான நடவடிக்கையை தாராளமாக மேற்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
ஷோபனா, ராகுல் நெஹ்ரா, ஷாலினி விவகாரத்தால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!