twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யோசிக்கும் மதுமிதா நாளை படம் கொடுத்த எதிர்பாராத பிரேக்கால் மதுமிதாவுக்கு 2 புதிய படங்கள்வந்துள்ளதாம்.பார்த்திபனின் மஜா கண்டுபிடிப்பான மதுமிதா குடைக்குள் மழையில் தனது நடிப்புத்திறமையைக் காட்டினார். ஆனாலும் மதுமிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள்குவியவில்லை.அப்படியும் இப்படியுமாக நடித்து வந்த மதுமிதா தெலுங்கிலும் தனது அதிர்ஷ்டத்தைப்பரீட்சித்துப் பார்த்தார். ஆனால் தாயகமான தெலுங்கும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.இதனால் தமிழில் மீண்டும் முயற்சி செய்து நாளை பட வாய்ப்பைப் பெற்றார். இதில்தனது நடிப்பால் அசத்திய மதுமிதாவுக்கு இப்போது புதிதாக 2 படங்கள்கிடைத்துள்ளன.இதுதவிர விக்ராந்த நடிக்கும் பட்டாசு படத்தில், இந்து என்ற கேரத்டரில் நடித்து வருகிறார். இது யூத் புல்லானபடமாம். இதில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் மதுமிதா.இதைத் தொடர்ந்து ஹார்ட் பீட் என்ற படத்திலும் புக் ஆகியிருக்கிறார். பஸ்ட் இமேஜ் என்ற புதிய பட நிறுவனம்தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெயந்த் என்பவர் நடிக்கிறார். இவர் நிழல் கூத்து என்ற ஆர்ட் பிலிமில் ஏற்கனவேநடித்திருப்பவர் தான்.அடுத்தடுத்து படங்கள் கிடைத்திருப்பதால் சந்தோஷமாகியுள்ள மதுமிதா, நடிப்புக்குமரியாதை கிடைக்கும் இடம் தமிழ் மட்டுமே. நான் காத்திருந்தது வீணாகவில்லை.தொடர்ந்து எல்லை தாண்டாத கிளாமருடன் நடிப்பேன் என்கிறார் மதுமிதா.அதே நேரத்தில் தனது சம்பளத்தை ரூ. 5 லட்சமாக உயர்த்தியிருக்கிறார்.இதனால் ஒரு பட வாய்ப்பையே இழந்தும் இருக்கிறார். சமீபத்தல் மதுமிதாவை தேடி வந்த தமிழ்படதயாரிப்பாளரிடம் ரூ. 5 லட்சத்தை மது கேட்க, அவரோ 2 விரலைக் காட்டிப் பேச, சல்லிக் காசு குறைக்கமாட்டேன் என்று மதுமிதா அடம்பிடிக்க, இதனால் வேறொரு ஹீரோயினுக்கு அந்த வாய்ப்பு போய்விட்டதாம்.இதற்கிடையே மலையாளத்திலிருந்தும் சில தயாரிப்பாளர்கள் மதுமிதாவை வந்துபார்த்துப் போயுள்ளனர். ஆனால் அவை கொஞ்சம் கொக்குமாக்கு கதைகளாம். அதில்கிளாமரை கொட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறியதால் யோசித்துக்கொண்டிருக்கிறாராம் மது.

    By Staff
    |
    நாளை படம் கொடுத்த எதிர்பாராத பிரேக்கால் மதுமிதாவுக்கு 2 புதிய படங்கள்வந்துள்ளதாம்.

    பார்த்திபனின் மஜா கண்டுபிடிப்பான மதுமிதா குடைக்குள் மழையில் தனது நடிப்புத்திறமையைக் காட்டினார். ஆனாலும் மதுமிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள்குவியவில்லை.

    அப்படியும் இப்படியுமாக நடித்து வந்த மதுமிதா தெலுங்கிலும் தனது அதிர்ஷ்டத்தைப்பரீட்சித்துப் பார்த்தார். ஆனால் தாயகமான தெலுங்கும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

    இதனால் தமிழில் மீண்டும் முயற்சி செய்து நாளை பட வாய்ப்பைப் பெற்றார். இதில்தனது நடிப்பால் அசத்திய மதுமிதாவுக்கு இப்போது புதிதாக 2 படங்கள்கிடைத்துள்ளன.

    இதுதவிர விக்ராந்த நடிக்கும் பட்டாசு படத்தில், இந்து என்ற கேரத்டரில் நடித்து வருகிறார். இது யூத் புல்லானபடமாம். இதில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் மதுமிதா.

    இதைத் தொடர்ந்து ஹார்ட் பீட் என்ற படத்திலும் புக் ஆகியிருக்கிறார். பஸ்ட் இமேஜ் என்ற புதிய பட நிறுவனம்தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெயந்த் என்பவர் நடிக்கிறார். இவர் நிழல் கூத்து என்ற ஆர்ட் பிலிமில் ஏற்கனவேநடித்திருப்பவர் தான்.

    அடுத்தடுத்து படங்கள் கிடைத்திருப்பதால் சந்தோஷமாகியுள்ள மதுமிதா, நடிப்புக்குமரியாதை கிடைக்கும் இடம் தமிழ் மட்டுமே. நான் காத்திருந்தது வீணாகவில்லை.தொடர்ந்து எல்லை தாண்டாத கிளாமருடன் நடிப்பேன் என்கிறார் மதுமிதா.

    அதே நேரத்தில் தனது சம்பளத்தை ரூ. 5 லட்சமாக உயர்த்தியிருக்கிறார்.

    இதனால் ஒரு பட வாய்ப்பையே இழந்தும் இருக்கிறார். சமீபத்தல் மதுமிதாவை தேடி வந்த தமிழ்படதயாரிப்பாளரிடம் ரூ. 5 லட்சத்தை மது கேட்க, அவரோ 2 விரலைக் காட்டிப் பேச, சல்லிக் காசு குறைக்கமாட்டேன் என்று மதுமிதா அடம்பிடிக்க, இதனால் வேறொரு ஹீரோயினுக்கு அந்த வாய்ப்பு போய்விட்டதாம்.

    இதற்கிடையே மலையாளத்திலிருந்தும் சில தயாரிப்பாளர்கள் மதுமிதாவை வந்துபார்த்துப் போயுள்ளனர். ஆனால் அவை கொஞ்சம் கொக்குமாக்கு கதைகளாம். அதில்கிளாமரை கொட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறியதால் யோசித்துக்கொண்டிருக்கிறாராம் மது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X