twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே... 10 உதவி இயக்குநர்களின் புதிய முயற்சி!

    By Staff
    |

    Malaipozhuthin mayakkathile
    உலகத் தமிழர்களின் காதுகள் இன்னும் இன்னும் என கேட்க ஏங்கும் இனிய பாடல் சுசீலாவின் குரலில் ஒலித்த மாலைப் பொழுதின் மயக்கத்திலே.

    அந்தப் பாடலின் முதல் வரியையே 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே...' என தலைப்பாக்கி படமெடுக்கிறது ஒரு இளைஞர் பட்டாளம். மொத்தம் 10 இளைஞர்கள். இவர்கள் அனைவருமே முன்பு உதவி இயக்குநர்களாய் பணியாற்றி, இப்போது தயாரிப்பாளராய் மாறியிருக்கிறார்கள்.

    தங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு டீம் ஏடி புரொடக்ஷன்ஸ் (டீம் அஸிஸ்டன்ட் டைரக்டர்ஸ்) என பெயர் சூட்டியுள்ளனர்.

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தை இயக்குபவர் நாராயணன். இவர் இயக்குநர் மிஷ்கினிடம் அஞ்சாதே, நந்தலாலா படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

    பிரபல மலையாள இசையமைப்பாளர் அச்சு முதல்முறையாக இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இவர் பொல்லாதவன் தெலுங்கு ரீமேக்கான குர்ராடு, ஷாஜி கைலாஷின் ரகுபதி ராகவ ராஜாராம், நேனு மீக்கு தெலுசா (என்னைத் தெரியுமா -தெலுங்கு பதிப்பு) படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    பாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத்தின் உதவியாளர் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

    பிப்ரவரி முதல்வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் ஒரே ஷெட்யூலில் படமாக்கப்படுகிறது.

    "இப்படி ஒரு முயற்சி தமிழ் சினிமா வரலாற்றிலேயே ரொம்பப் புதுசு. பொதுவாக உதவி இயக்குநர்கள் தயாரிப்பாளர்களைத் தேடுவார்கள். ஆனால் இந்த உதவி இயக்குநர்களோ, தாங்களே தயாரிப்பாளர்களாய் மாறி, இன்னொரு உதவி இயக்குநருக்கு படம் பண்ண வாய்ப்புத் தந்திருக்கிறார்கள்.

    இந்தப் படம் ஜெயித்தால், 10 உதவி இயக்குநர்கள் புதிய பரிமாணம் பெறுவார்கள், 10 புதிய படைப்புகள் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும்..." என்கிறார் நாராயணன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X