Don't Miss!
- News தப்பி தவறி கூட.. இந்த டைம்ல வெளியே போகாதீங்க.. தமிழ்நாட்டிலும் வெப்ப அலை.. முக்கிய அறிவுரை!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மாலைப் பொழுதின் மயக்கத்திலே... 10 உதவி இயக்குநர்களின் புதிய முயற்சி!
அந்தப் பாடலின் முதல் வரியையே 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே...' என தலைப்பாக்கி படமெடுக்கிறது ஒரு இளைஞர் பட்டாளம். மொத்தம் 10 இளைஞர்கள். இவர்கள் அனைவருமே முன்பு உதவி இயக்குநர்களாய் பணியாற்றி, இப்போது தயாரிப்பாளராய் மாறியிருக்கிறார்கள்.
தங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு டீம் ஏடி புரொடக்ஷன்ஸ் (டீம் அஸிஸ்டன்ட் டைரக்டர்ஸ்) என பெயர் சூட்டியுள்ளனர்.
மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தை இயக்குபவர் நாராயணன். இவர் இயக்குநர் மிஷ்கினிடம் அஞ்சாதே, நந்தலாலா படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
பிரபல மலையாள இசையமைப்பாளர் அச்சு முதல்முறையாக இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இவர் பொல்லாதவன் தெலுங்கு ரீமேக்கான குர்ராடு, ஷாஜி கைலாஷின் ரகுபதி ராகவ ராஜாராம், நேனு மீக்கு தெலுசா (என்னைத் தெரியுமா -தெலுங்கு பதிப்பு) படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத்தின் உதவியாளர் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிப்ரவரி முதல்வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் ஒரே ஷெட்யூலில் படமாக்கப்படுகிறது.
"இப்படி ஒரு முயற்சி தமிழ் சினிமா வரலாற்றிலேயே ரொம்பப் புதுசு. பொதுவாக உதவி இயக்குநர்கள் தயாரிப்பாளர்களைத் தேடுவார்கள். ஆனால் இந்த உதவி இயக்குநர்களோ, தாங்களே தயாரிப்பாளர்களாய் மாறி, இன்னொரு உதவி இயக்குநருக்கு படம் பண்ண வாய்ப்புத் தந்திருக்கிறார்கள்.
இந்தப் படம் ஜெயித்தால், 10 உதவி இயக்குநர்கள் புதிய பரிமாணம் பெறுவார்கள், 10 புதிய படைப்புகள் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும்..." என்கிறார் நாராயணன்.