Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிக்குன்குனியா பிடியில் மல்லுவுட்!
மலையாளத் திரையுலகம் சிக்குன்குனியாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறதாம். இதனால் ஷூட்டிங்குகளை முறையாக நடத்த முடியாமல் மலையாளத் திரையுலகம் தவித்துக் கொண்டிருக்கிறது.
மலையாளப் படவுலகை சமீபத்தில் ஆட்டிப் படைத்த மாக்டா ஸ்டிரைக் முடிவுக்கு வந்து விட்டது. ஆனாலும் இன்னும் படப்பிடிப்புகள் சீராகவில்லையாம். இப்போதைய குழப்பத்திற்கு சிக்குன்குனியாதான் காரணமாம்.கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளுக்கு சிக்குன்குனியா வந்துள்ளதாம். இதனால் வீட்டோடு முடங்கிப் போயுள்ளனராம்.
மெகா ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலையும் கூட சிக்குன்குனியா விடவில்லையாம். நான்கு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்களாம்.
அதேபோல, மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவன் போன்ற நடிகைகளும் கூட சிக்குன்குனியா பிடியில் சிக்கித் தவிக்கிறார்களாம். சிக்குன்குனியாவால் பல படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம்.
மலையாளப் படவுலகில் முக்கிய நடிகர் நடிகைகளுக்கு இப்படி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள்.
பேசாமல், வைரஸ் கூட யாராவது பேச்சுவார்த்தை நடத்தினால் தேவலாம்!