Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வைரமுத்து எழுதியப் பாடலைப் பாடினார் இசைஞானி இளையராஜா
தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சகாப்தம் உருவாக்கப்படும். அப்படி உருவான ஒரு சகாப்தம்தான் இளையராஜா. அவரது இசையிப் பட்டுத் தெறிந்தத பாடல் வரிகள் என்றுமே சோடை போனதில்லை. அதில் முக்கியமானவர் வைரமுத்து.
ராஜாவும், வைரமுத்துவும் இணைந்து கொடுத்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை. இன்று வரை இதயங்களை குளிர்வித்து, குஷிப்படுத்துபவை. ஆனால் அதெல்லாம் ஒரு காலம் என்றாகி விட்டது.
பிரிந்து போன அந்த பிரம்மாக்கள் இணையும் வழியைக் காணோம். இடையில் இருவரும் இணையப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. அது, ராஜாவின் குரலில் வைரமுத்துவின் பாடல். இந்த அதிசயத்தை நடத்தியிருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.
அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்தில் வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். இந்த்ப பாடல்தான் படத்தின் ஹைலைட் பாடலாக இருக்குமாம்.
இந்தப் பாடலை தனது தந்தையே பாடினால்தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்த யுவன், இளையராஜாவிடம் சொல்ல, சற்றும் மறுப்புச் சொல்லாமல் ஏற்றுக் கொண்டு பாடிக் கொடுத்துள்ளாராம் ராஜா.
பேனாவும், ராஜாவின் குரலும் இணைந்தது போல இருவரும் நேரடியாக இணைந்து முடங்கிப் போன அந்த பூங்காற்றை மீண்டும் விடுவித்து, புழுங்கிப் போன மனங்களுக்குப் புத்துயிர் கொடுப்பார்களா.