Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
வைரமுத்து எழுதியப் பாடலைப் பாடினார் இசைஞானி இளையராஜா
தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சகாப்தம் உருவாக்கப்படும். அப்படி உருவான ஒரு சகாப்தம்தான் இளையராஜா. அவரது இசையிப் பட்டுத் தெறிந்தத பாடல் வரிகள் என்றுமே சோடை போனதில்லை. அதில் முக்கியமானவர் வைரமுத்து.
ராஜாவும், வைரமுத்துவும் இணைந்து கொடுத்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை. இன்று வரை இதயங்களை குளிர்வித்து, குஷிப்படுத்துபவை. ஆனால் அதெல்லாம் ஒரு காலம் என்றாகி விட்டது.
பிரிந்து போன அந்த பிரம்மாக்கள் இணையும் வழியைக் காணோம். இடையில் இருவரும் இணையப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. அது, ராஜாவின் குரலில் வைரமுத்துவின் பாடல். இந்த அதிசயத்தை நடத்தியிருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.
அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்தில் வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். இந்த்ப பாடல்தான் படத்தின் ஹைலைட் பாடலாக இருக்குமாம்.
இந்தப் பாடலை தனது தந்தையே பாடினால்தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்த யுவன், இளையராஜாவிடம் சொல்ல, சற்றும் மறுப்புச் சொல்லாமல் ஏற்றுக் கொண்டு பாடிக் கொடுத்துள்ளாராம் ராஜா.
பேனாவும், ராஜாவின் குரலும் இணைந்தது போல இருவரும் நேரடியாக இணைந்து முடங்கிப் போன அந்த பூங்காற்றை மீண்டும் விடுவித்து, புழுங்கிப் போன மனங்களுக்குப் புத்துயிர் கொடுப்பார்களா.