Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வைரமுத்து எழுதியப் பாடலைப் பாடினார் இசைஞானி இளையராஜா
தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சகாப்தம் உருவாக்கப்படும். அப்படி உருவான ஒரு சகாப்தம்தான் இளையராஜா. அவரது இசையிப் பட்டுத் தெறிந்தத பாடல் வரிகள் என்றுமே சோடை போனதில்லை. அதில் முக்கியமானவர் வைரமுத்து.
ராஜாவும், வைரமுத்துவும் இணைந்து கொடுத்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை. இன்று வரை இதயங்களை குளிர்வித்து, குஷிப்படுத்துபவை. ஆனால் அதெல்லாம் ஒரு காலம் என்றாகி விட்டது.
பிரிந்து போன அந்த பிரம்மாக்கள் இணையும் வழியைக் காணோம். இடையில் இருவரும் இணையப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. அது, ராஜாவின் குரலில் வைரமுத்துவின் பாடல். இந்த அதிசயத்தை நடத்தியிருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.
அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்தில் வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். இந்த்ப பாடல்தான் படத்தின் ஹைலைட் பாடலாக இருக்குமாம்.
இந்தப் பாடலை தனது தந்தையே பாடினால்தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்த யுவன், இளையராஜாவிடம் சொல்ல, சற்றும் மறுப்புச் சொல்லாமல் ஏற்றுக் கொண்டு பாடிக் கொடுத்துள்ளாராம் ராஜா.
பேனாவும், ராஜாவின் குரலும் இணைந்தது போல இருவரும் நேரடியாக இணைந்து முடங்கிப் போன அந்த பூங்காற்றை மீண்டும் விடுவித்து, புழுங்கிப் போன மனங்களுக்குப் புத்துயிர் கொடுப்பார்களா.