மணி டைரக்ஷன்: பிரபாகரன் சொன்ன கரெக்ஷன்! இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிலகாட்சிகளை தவறு என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்சொல்லியதாக இயக்குனர் சிகரம் பாரதிராஜா கூறியுள்ளார். பாரதிராஜா சமீபத்தில் திடுதிப்பென்று இலங்கைக்கு பயணமானார். படு ரகசியமாகநடந்த இந்த பயணத்தின்போது விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனை பார்த்து விட்டுத் திரும்பியுள்ளார்.மிகவும் உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தை தனக்கு நெருக்கமானவர்களிடம்நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார் பாரதிராஜா. பிரபாகரனை பாரதிராஜாபார்த்தபோது, தமிழர்கள் குறித்து மட்டுமல்லாமல், தமிழ் சினிமா குறித்தும்பேசியுள்ளார்.மணிரதினம் இயக்கத்தில் பாரதிராஜா அடாவடி அரசியல்வாதியாக நடித்து அசத்தியஆயுத எழுத்து படம் குறித்தும் பிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். மிகப் பெரியஇயக்குனரான நீங்கள் அப்படிப்பட்ட பாத்திரத்தில் நடித்திருக்கக் கூடாது என்றாராம்பிரபாகரன்.அப்புறம், கன்னத்தில் முத்தமிட்டால் படம் குறித்தும் பாரதிராஜாவிடம் சிலகருத்துக்களை தெரிவித்தாராம் பிரபாகரன். அப்படத்தில் இலங்கையைச்சேர்ந்தவராக வரும் பிரகாஷ் ராஜ், திடுதிப்பென போராளிகள் குழு இருக்கும்பகுதிக்குள் நுழைவது போன்ற காட்சியைத் தவறானது, நிஜத்தில் இதற்கு வாய்ப்பேஇல்லை என்றும் பிரபாகரன் கூறினாராம்.தொடர்ந்து மணிரத்னம் படங்களாக பிரபாகரன் பேசி வருவதைப் பார்த்த பாரதிராஜா,நீங்கள் சொல்வது புரிகிறது. உங்களை நான் இப்போது நேரில், நெருக்கத்தில்பார்க்கிறேன். உங்களது வாழ்க்கைமுறை, உங்களது உலகத்தை என்னால் இப்போதுநன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.இதேபோன்ற வாய்ப்பு மணிரத்னத்திற்கும் கிடைத்திருந்தால், நிச்சயம் அதுபோன்றகாட்சிகளை எடுத்திருக்க மாட்டார். காரணம், அவர் மிகச் சிறந்த இயக்குனர் என்றுமணிக்கு வக்காலத்து வாங்கினாராம் பாரதிராஜா.சக இயக்குனரை விட்டுக் கொடுக்காமல் பேசிய பாரதிராஜாவை சிரித்தபடியேபாராட்டவும் தவறவில்லையாம் பிரபாகரன்.

By Staff

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிலகாட்சிகளை தவறு என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்சொல்லியதாக இயக்குனர் சிகரம் பாரதிராஜா கூறியுள்ளார்.

பாரதிராஜா சமீபத்தில் திடுதிப்பென்று இலங்கைக்கு பயணமானார். படு ரகசியமாகநடந்த இந்த பயணத்தின்போது விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனை பார்த்து விட்டுத் திரும்பியுள்ளார்.

மிகவும் உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தை தனக்கு நெருக்கமானவர்களிடம்நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார் பாரதிராஜா. பிரபாகரனை பாரதிராஜாபார்த்தபோது, தமிழர்கள் குறித்து மட்டுமல்லாமல், தமிழ் சினிமா குறித்தும்பேசியுள்ளார்.

மணிரதினம் இயக்கத்தில் பாரதிராஜா அடாவடி அரசியல்வாதியாக நடித்து அசத்தியஆயுத எழுத்து படம் குறித்தும் பிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். மிகப் பெரியஇயக்குனரான நீங்கள் அப்படிப்பட்ட பாத்திரத்தில் நடித்திருக்கக் கூடாது என்றாராம்பிரபாகரன்.

அப்புறம், கன்னத்தில் முத்தமிட்டால் படம் குறித்தும் பாரதிராஜாவிடம் சிலகருத்துக்களை தெரிவித்தாராம் பிரபாகரன். அப்படத்தில் இலங்கையைச்சேர்ந்தவராக வரும் பிரகாஷ் ராஜ், திடுதிப்பென போராளிகள் குழு இருக்கும்பகுதிக்குள் நுழைவது போன்ற காட்சியைத் தவறானது, நிஜத்தில் இதற்கு வாய்ப்பேஇல்லை என்றும் பிரபாகரன் கூறினாராம்.

தொடர்ந்து மணிரத்னம் படங்களாக பிரபாகரன் பேசி வருவதைப் பார்த்த பாரதிராஜா,நீங்கள் சொல்வது புரிகிறது. உங்களை நான் இப்போது நேரில், நெருக்கத்தில்பார்க்கிறேன். உங்களது வாழ்க்கைமுறை, உங்களது உலகத்தை என்னால் இப்போதுநன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

இதேபோன்ற வாய்ப்பு மணிரத்னத்திற்கும் கிடைத்திருந்தால், நிச்சயம் அதுபோன்றகாட்சிகளை எடுத்திருக்க மாட்டார். காரணம், அவர் மிகச் சிறந்த இயக்குனர் என்றுமணிக்கு வக்காலத்து வாங்கினாராம் பாரதிராஜா.

சக இயக்குனரை விட்டுக் கொடுக்காமல் பேசிய பாரதிராஜாவை சிரித்தபடியேபாராட்டவும் தவறவில்லையாம் பிரபாகரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X