Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மணிவண்ணன் மகன் திருமணம் - சத்யராஜ், விவேக் வாழ்த்து
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.
நடிகர் சத்யராஜ் முன் நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். திரையுலகைச் சேர்ந்த விவேக், ஆர் கே செல்வமணி போன்றவர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
மணிவண்ணன் உயிரோடு இருந்த போதே, கடந்த மார்ச் முதல் வாரத்தில் ரகுவண்ணன் - அபி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அமைதிப் படை 2 வெளியான பிறகு ஜூன் மாதத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அந்த ஜூன் மாதத்தில்தான் மணிவண்ணன் அகால மரணமடைந்தார். அவர் மரணமடைந்த சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார்.
இதனால் ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரகுவண்ணன் - அபி திருமணம் சென்னையில் நடந்தது.
நடிகர் சத்யராஜ் முன்நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். நடிகர் விவேக், ஆர்கே செல்வமணி உள்ளிட்டோர் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினர்.