பிகினி: சர்ச்சையில் பாக் அழகி மதக் கொள்கைகளை படு தீவிரமாக கடைப்பிடிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த மரியாமோடன் என்ற அழகி, நீச்சலுடை போட்டியில் கலந்து கொண்டு புதிய சர்ச்சையைஏற்படுத்தியுள்ளார். சர்வதேச அளவில் நடைபெறும் அழகிப் போட்டிகளில் எந்த நாட்டு அழகிகள் கலந்துகொண்டாலும், பாகிஸ்தானிலிருந்து ஒருவரும் பங்கேற்க மாட்டார்கள். இஸ்லாமியாநாடான பாகிஸதானில், மத சட்டங்கள் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதேஇதற்குக் காரணம்.ஆனால் இந்த தடைகளை மீறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாகிஸ்தானில் பிறந்துஅமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட மரியா மோடன் என்ற பாகிஸ்தான் பெண்.கராச்சி நகரில் பிறந்த மரியா மோடனுக்கு வயது 22. சிறு வயதிலேயே பெற்றோருடன்அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருககு இடம் பெயர்ந்துவிட்டார். அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்த மோடன் தற்போது ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல்நிர்வாகம் குறித்த பட்டப் படிப்பை படித்து வருகிறார்.ஆகஸ்ட் 28ம் தேதி சீனாவின் பீஹய் நகரில் நடந்த அழகிப் பாட்டியில் பாகிஸ்தான்சார்பாக மரியா மோடன் பங்கேற்றார். நீச்சல் அழகிககளுக்கான போட்டி இது. இதில்மோடனுக்கு, பார்வையாளர்களால் அதிகம் கவரப்பட்ட அழகி எனற படடம்கிடைத்தது.போடடி முழுவதும் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட, பேட்டி காணப்படட அழகிஎனற வகையில் இந்தப் பட்டம் கிடைத்தது.இப்பட்டத்தை வாங்கியதன் மூலம் சர்வதேச அழகிகள் அரங்கில் பாகிஸ்தானுக்கு ஒருஅறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் மோடன்.இப்போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் மோடன் உலகளவிலும் பிரபலமாகிவிட்டார். அவரது பேட்டியை பிரசுரிக்கவும், புகைப்படங்களை பிரசுரிக்கவும் பல்வேறுபத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போட்டி போடுகின்றன.சீனா டெய்லி இதழுக்கு மோடன் கொடுத்துள்ள பேட்டியில், நீச்சலுடைப் போட்டியில்பாகிஸ்தான் நாட்டு அழகி பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இதுவரை அதுசாத்தியமில்லாமல் இருந்தது.ஆனால் அதை நான் முதல் முறையாக தகர்த்துள்ளேன். எனது பெற்றோர்கள் நான்போட்டியில் பங்கேற்பதற்கு பேராதரவு கொடுத்தார்கள். இப்போது இதுபோன்றஅழகிப் போட்டிகளில் பாகிஸ்தான் அழகிகள் நிறையப் பேர் கலந்து கொள்ள நான்ஊக்கமாக அமைந்துள்ளேன்.இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வெறும் உடல் அழகுக்காக மட்டும்வெற்றியைப் பெறவில்லை. புத்திசாலித்தனம், திறமை உளளிட்டவையுமஅவர்களிடம் உள்ளது. உலக அறிவும் அவர்களுக்கு நிறைய உளளது.இந்தப் போட்டி எனக்கு தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது.மேலும் நிறைய மனிதர்கள் முன் நான் பேசியதும் இதுவே முதல்முறை.போட்டியில் வெற்றி பெறாதது குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் நான்கற்றுக் கொண்ட விஷயங்கள் பல வெற்றிகளுக்கு சமம்.இனிமேல் பாகிஸ்தான் சார்பில் நான் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வேன்.என்னைப் போன்ற அழகுப் பெண்களுக்கு நான் சொலல விரும்புவது ஒன்றுதான்.உங்கள் கனவை உயிர்ப்புடனேயே வைத்திருங்கள் என்கிறார் மோடன்.மோடன் பெறும் 2வது அழகி பட்டமாம் இது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் மிஸ்டூரிசம் அழகிப் போட்டியில் அவருக்கு மிஸ். சாரிட்டி பட்டம் கிடைத்ததாம்.இதற்கிடையே மரியா மோடன் பாகிஸ்தானின் பிரதிநிதியாக எந்த அழகிப்போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவர் எங்கள் நாட்டுப் பிரதிநிதியும் அல்ல,நீச்சலுடையில் வெளியில் தோன்றிய அவரை எங்கள் நாட்டினராக கருதவும் இல்லைஎன்று கூறிவிட்டது பாகிஸ்தான் அரசு.இதனால் இனிமேல் போட்டிகளில் பாகிஸ்தானின் பெயரைச் சொல்லிக் கொண்டுமோடன் களமிறங்குவதற்கு சிக்கல் உருவாகியுள்ளது.

By Staff

மதக் கொள்கைகளை படு தீவிரமாக கடைப்பிடிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த மரியாமோடன் என்ற அழகி, நீச்சலுடை போட்டியில் கலந்து கொண்டு புதிய சர்ச்சையைஏற்படுத்தியுள்ளார்.

சர்வதேச அளவில் நடைபெறும் அழகிப் போட்டிகளில் எந்த நாட்டு அழகிகள் கலந்துகொண்டாலும், பாகிஸ்தானிலிருந்து ஒருவரும் பங்கேற்க மாட்டார்கள். இஸ்லாமியாநாடான பாகிஸதானில், மத சட்டங்கள் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதேஇதற்குக் காரணம்.

ஆனால் இந்த தடைகளை மீறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாகிஸ்தானில் பிறந்துஅமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட மரியா மோடன் என்ற பாகிஸ்தான் பெண்.

கராச்சி நகரில் பிறந்த மரியா மோடனுக்கு வயது 22. சிறு வயதிலேயே பெற்றோருடன்அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருககு இடம் பெயர்ந்துவிட்டார். அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்த மோடன் தற்போது ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல்நிர்வாகம் குறித்த பட்டப் படிப்பை படித்து வருகிறார்.

ஆகஸ்ட் 28ம் தேதி சீனாவின் பீஹய் நகரில் நடந்த அழகிப் பாட்டியில் பாகிஸ்தான்சார்பாக மரியா மோடன் பங்கேற்றார். நீச்சல் அழகிககளுக்கான போட்டி இது. இதில்மோடனுக்கு, பார்வையாளர்களால் அதிகம் கவரப்பட்ட அழகி எனற படடம்கிடைத்தது.

போடடி முழுவதும் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட, பேட்டி காணப்படட அழகிஎனற வகையில் இந்தப் பட்டம் கிடைத்தது.

இப்பட்டத்தை வாங்கியதன் மூலம் சர்வதேச அழகிகள் அரங்கில் பாகிஸ்தானுக்கு ஒருஅறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் மோடன்.

இப்போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் மோடன் உலகளவிலும் பிரபலமாகிவிட்டார். அவரது பேட்டியை பிரசுரிக்கவும், புகைப்படங்களை பிரசுரிக்கவும் பல்வேறுபத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போட்டி போடுகின்றன.

சீனா டெய்லி இதழுக்கு மோடன் கொடுத்துள்ள பேட்டியில், நீச்சலுடைப் போட்டியில்பாகிஸ்தான் நாட்டு அழகி பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இதுவரை அதுசாத்தியமில்லாமல் இருந்தது.

ஆனால் அதை நான் முதல் முறையாக தகர்த்துள்ளேன். எனது பெற்றோர்கள் நான்போட்டியில் பங்கேற்பதற்கு பேராதரவு கொடுத்தார்கள். இப்போது இதுபோன்றஅழகிப் போட்டிகளில் பாகிஸ்தான் அழகிகள் நிறையப் பேர் கலந்து கொள்ள நான்ஊக்கமாக அமைந்துள்ளேன்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வெறும் உடல் அழகுக்காக மட்டும்வெற்றியைப் பெறவில்லை. புத்திசாலித்தனம், திறமை உளளிட்டவையுமஅவர்களிடம் உள்ளது. உலக அறிவும் அவர்களுக்கு நிறைய உளளது.

இந்தப் போட்டி எனக்கு தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது.மேலும் நிறைய மனிதர்கள் முன் நான் பேசியதும் இதுவே முதல்முறை.

போட்டியில் வெற்றி பெறாதது குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் நான்கற்றுக் கொண்ட விஷயங்கள் பல வெற்றிகளுக்கு சமம்.

இனிமேல் பாகிஸ்தான் சார்பில் நான் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வேன்.என்னைப் போன்ற அழகுப் பெண்களுக்கு நான் சொலல விரும்புவது ஒன்றுதான்.உங்கள் கனவை உயிர்ப்புடனேயே வைத்திருங்கள்

என்கிறார் மோடன்.

மோடன் பெறும் 2வது அழகி பட்டமாம் இது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் மிஸ்டூரிசம் அழகிப் போட்டியில் அவருக்கு மிஸ். சாரிட்டி பட்டம் கிடைத்ததாம்.

இதற்கிடையே மரியா மோடன் பாகிஸ்தானின் பிரதிநிதியாக எந்த அழகிப்போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவர் எங்கள் நாட்டுப் பிரதிநிதியும் அல்ல,நீச்சலுடையில் வெளியில் தோன்றிய அவரை எங்கள் நாட்டினராக கருதவும் இல்லைஎன்று கூறிவிட்டது பாகிஸ்தான் அரசு.

இதனால் இனிமேல் போட்டிகளில் பாகிஸ்தானின் பெயரைச் சொல்லிக் கொண்டுமோடன் களமிறங்குவதற்கு சிக்கல் உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X