மீராவின் கண்டிஷன்! இதுவரை எந்தப் படத்திலும் செய்யாத அளவுக்கு திருமகன் படத்தில் நடிக்க குண்டக்கமண்டக்க கண்டிஷன்களைப் போட்டுள்ளாராம் மீரா ஜாஸ்மின்.எஸ்.ஜே.சூர்யா நடிக்க, ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் படம்தான் திருமகன்.இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வருமாறு முன்னணி ஹீரோயின்கள்அத்தனை பேரையும் கேட்டுள்ளனர். ஆனால் எஸ்.ஜே.சூர்யா என்றதுமே அத்தனைபேரும் ஓடிப் போய்விட்டனர்.தாய்லாந்தில் நயனதாராவுக்கு சூர்யாவால் ஏற்பட்ட அனுபவம் மற்றும்எஸ்.ஜே.சூர்யாவின் ஆகாகா இமேஜ்தான் இந்தப் பயத்திற்குக் காரணம். இதனால்ஹீரோயினே இல்லாமல் படத்தை எடுக்க வேண்டி வருமோ என்று சூர்யாவும்,ரத்னகுமாரும் பீதியடைந்தனர். ஆனால் ஆபாத்பாந்தவளாக வந்து சேர்ந்தார் மீரா ஜாஸ்மின். அவரிடம் ரத்னகுமார்கதையைச் சொன்னதும் நடிக்கிறேன் என்று கூறிய மீரா, ஹீரோ யார் என்றுகேட்டுள்ளார். ரொம்பத் தயங்கியபடியே எஸ்.ஜே.சூர்யா என்று இழுத்துள்ளார்ரத்னகுமார்.அப்படியே கிளம்புவதற்கு வசதியாக எழுந்திருக்கவும் செய்துள்ளார். ஆனால் இன்பஅதிர்ச்சியாக, நோ பிராப்ளம் என்று மீரா கூறவே, சந்தோஷத்தில் ஜெர்க் அடித்துசூர்யாவிடம் போய் மேட்டரையும் போட்டு அவரையும் சேர்த்து குஷிப்படுத்தினார்.படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதோடு நிற்கவில்லை மீரா. ஏகப்பட்டகண்டிஷன்களையும் போட்டுள்ளாராம். எஸ்.ஜே. சூர்யா என்னைத் தேவையில்லாமல்தொடுவது போல காட்சிகளை வைக்கக் கூடாது. மிக நெருக்கமான காட்சிகள் கூடவேகூடாது, கிளாமர் காட்சிகள் அறவே கூடாது.ஓவரான கட்டிப்புடி காட்சிகளுக்கும் தடா. டபுள், டிரிபிள் அர்த்த வசனங்கள் சுத்தமாகஇருக்கக் கூடாது என ஏகப்பட்ட கூடாதுகளைப் போட்டு ரத்னகுமாரை திணறடித்துவிட்டாராம்.இதுகுறித்து சூர்யாவிடம் அவர் கூறியபோது, முன்னமி ஹீரோயின் கிடைத்ததேபெரிய விஷயம், மீரா ஜாஸ்மின் சொன்னதெல்லாம் ரொம்ப சின்ன மேட்டர்தான்.எனவே அதைப் பற்றிக் கவலைப்படாமல் வேலையை ஆரம்பிப்போம் என்றுகூறினாராம் சூர்யா.இப்படித்தான் சூர்யாவுடன், மீரா ஜாஸ்மின் நடிக்க சம்மதித்துள்ளாராம். அதன்படியேகாட்சிகளையும் அமைத்துள்ளார்களாம். அதேசமயம், கிளாமர் சைடை பேலன்ஸ்செய்வதற்காக வேறு ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளார்களாம். இப்படியாக திருமகன் ஒரு வழியாக வளரத் தொடங்கியுள்ளான்.அவன் திருமகனாக இருப்பானா அல்லது தெருமகனாக இருப்பனா என்பதை படம்வந்த பின்தான் தெரிந்து கொள்ள முடியும்.
எஸ்.ஜே.சூர்யா நடிக்க, ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் படம்தான் திருமகன்.இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வருமாறு முன்னணி ஹீரோயின்கள்அத்தனை பேரையும் கேட்டுள்ளனர். ஆனால் எஸ்.ஜே.சூர்யா என்றதுமே அத்தனைபேரும் ஓடிப் போய்விட்டனர்.
தாய்லாந்தில் நயனதாராவுக்கு சூர்யாவால் ஏற்பட்ட அனுபவம் மற்றும்எஸ்.ஜே.சூர்யாவின் ஆகாகா இமேஜ்தான் இந்தப் பயத்திற்குக் காரணம். இதனால்ஹீரோயினே இல்லாமல் படத்தை எடுக்க வேண்டி வருமோ என்று சூர்யாவும்,ரத்னகுமாரும் பீதியடைந்தனர்.
அப்படியே கிளம்புவதற்கு வசதியாக எழுந்திருக்கவும் செய்துள்ளார். ஆனால் இன்பஅதிர்ச்சியாக, நோ பிராப்ளம் என்று மீரா கூறவே, சந்தோஷத்தில் ஜெர்க் அடித்துசூர்யாவிடம் போய் மேட்டரையும் போட்டு அவரையும் சேர்த்து குஷிப்படுத்தினார்.
படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதோடு நிற்கவில்லை மீரா. ஏகப்பட்டகண்டிஷன்களையும் போட்டுள்ளாராம். எஸ்.ஜே. சூர்யா என்னைத் தேவையில்லாமல்தொடுவது போல காட்சிகளை வைக்கக் கூடாது. மிக நெருக்கமான காட்சிகள் கூடவேகூடாது, கிளாமர் காட்சிகள் அறவே கூடாது.
இதுகுறித்து சூர்யாவிடம் அவர் கூறியபோது, முன்னமி ஹீரோயின் கிடைத்ததேபெரிய விஷயம், மீரா ஜாஸ்மின் சொன்னதெல்லாம் ரொம்ப சின்ன மேட்டர்தான்.எனவே அதைப் பற்றிக் கவலைப்படாமல் வேலையை ஆரம்பிப்போம் என்றுகூறினாராம் சூர்யா.
இப்படித்தான் சூர்யாவுடன், மீரா ஜாஸ்மின் நடிக்க சம்மதித்துள்ளாராம். அதன்படியேகாட்சிகளையும் அமைத்துள்ளார்களாம். அதேசமயம், கிளாமர் சைடை பேலன்ஸ்செய்வதற்காக வேறு ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளார்களாம்.
இப்படியாக திருமகன் ஒரு வழியாக வளரத் தொடங்கியுள்ளான்.
அவன் திருமகனாக இருப்பானா அல்லது தெருமகனாக இருப்பனா என்பதை படம்வந்த பின்தான் தெரிந்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications