தங்கர் படத்தில் மீரா? ஒளி ஓவியர் தங்கர்பச்சானின் பள்ளிக் கூடம் படத்தின் ஷூட்டிங் விரைவில்தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கக் கூடும்என்கிறார்கள். தங்கர்பச்சான் ஆரம்பத்தில் கேமராமேனாக இருந்தவர். பின்னர் இயக்குநராகஉருவெடுத்தார். இவரது இயக்கத்தில் உருவான முதல் படம் அழகி. தொடர்ந்துதென்றல் என்ற படத்தையும் இயக்கினார்.இயக்கத்திலிருந்து சற்றே மாறி நடிகராகவும் மாறிய தங்கர், சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமி படம் மூலம் ஹீரோவாகவும் உயர்ந்தார். இதில் தங்கருக்கு ஜோடியாகநடித்த நவ்யா நாயர் படத்தின் கடைசிக் கட்டத்தில் சில சிக்கல்களில் சிக்கினார்.தங்கருக்கும், நவ்யாவுக்கும் சண்டையும் மூண்டது. எல்லாம்முடிந்து ஒரு வழியாகபடம் வெளியாகி நல்ல வெற்றியையும் பெற்றது.அதற்கு முன்பு சில படங்களில் நவ்யா நடித்திருந்தாலும, சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமிதான் அவர் ஒரு நல்ல நடிகை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டஉதவியது. இப்போது தனது அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறார் தங்கர். பள்ளிக்கூடம் என்றுஇப்படத்திற்கு பெயர் வைத்துள்ளார். படத்தை ரொம்ப நாட்களுக்கு முன்பாகவேதங்கர் ரெடி செய்து விட்டாலும் கூட ஹீரோயின் கிடைக்காமல் அவஸ்தைதப் பட்டுவந்தார்.நவ்யாவை அணுகியபோது, பழைய பிரச்சினைகளை நினைத்துப் பார்த்த நவ்யாமறுத்து விட்டார். இருந்தும் விடாத தங்கர், தனது நண்பரும், நவ்யாவுக்கு ஜோடியாகஇரு படங்களில் நடித்து வருபவருமான இயககுநர் சேரன் மூலமாகவும் நவ்யாவைஅணுகினார். ஆனால் நவ்யா பிடிவாதமாக இருந்து விட்டார். இதனால் நவ்யாவை விட்டு விட்டுவேறு நாயகிகளை முயற்சித்தார் தங்கர். கடைசியில் இப்போது மீரா ஜாஸ்மின் நடிக்கஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தங்கரைப் போலவே, இயக்குநர்எஸ்.ஜே.சூர்யாவும், தனது திருமகன் படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல்சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.கடைசியில் அவருக்கு கைகொடுத்தவரும் மீரா தான். ஏகப்பட்ட கண்டிஷன்களோடுதான் சூர்யாவுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் மீரா. அதேபோல தங்கர் படத்திலும்நடிக்க சில கண்டிஷன்களை அவர் போட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிபந்தனைகள்,தங்கரின் கொள்கைகளுக்கு முரணாக இல்லாததால் அவர் ஓ.கே.சொல்லி விட்டார்என்றும் கூறப்படுகிறது.ஒரு வழியாக ஹீரோயின் முடிவாகியுள்ளதால், படப்பிடிப்பை விரைவில் தொடங்கதிட்டமிட்டுள்ளாராம் தங்கர். இப்படத்தில் தங்கர் மட்டும் ஹீரோ கிடையாதாம்.மேலும் இருவரும் இருக்கிறார்கள்.சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், இன்னொருவர் இயக்குநர் சீமான். மூன்று பேரையும்மையமாக வைத்தே கதை நகர்கிறதாம். ஹீரோயினுக்கும் நடிப்புக்கு அருமையானவாய்ப்புகள் இருக்கிறதாம்.சீக்கிரமா பெல் அடிங்க வாத்யாரே!

By Staff

ஒளி ஓவியர் தங்கர்பச்சானின் பள்ளிக் கூடம் படத்தின் ஷூட்டிங் விரைவில்தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கக் கூடும்என்கிறார்கள்.

தங்கர்பச்சான் ஆரம்பத்தில் கேமராமேனாக இருந்தவர். பின்னர் இயக்குநராகஉருவெடுத்தார். இவரது இயக்கத்தில் உருவான முதல் படம் அழகி. தொடர்ந்துதென்றல் என்ற படத்தையும் இயக்கினார்.

இயக்கத்திலிருந்து சற்றே மாறி நடிகராகவும் மாறிய தங்கர், சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமி படம் மூலம் ஹீரோவாகவும் உயர்ந்தார். இதில் தங்கருக்கு ஜோடியாகநடித்த நவ்யா நாயர் படத்தின் கடைசிக் கட்டத்தில் சில சிக்கல்களில் சிக்கினார்.தங்கருக்கும், நவ்யாவுக்கும் சண்டையும் மூண்டது. எல்லாம்முடிந்து ஒரு வழியாகபடம் வெளியாகி நல்ல வெற்றியையும் பெற்றது.

அதற்கு முன்பு சில படங்களில் நவ்யா நடித்திருந்தாலும, சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமிதான் அவர் ஒரு நல்ல நடிகை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டஉதவியது.

இப்போது தனது அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறார் தங்கர். பள்ளிக்கூடம் என்றுஇப்படத்திற்கு பெயர் வைத்துள்ளார். படத்தை ரொம்ப நாட்களுக்கு முன்பாகவேதங்கர் ரெடி செய்து விட்டாலும் கூட ஹீரோயின் கிடைக்காமல் அவஸ்தைதப் பட்டுவந்தார்.

நவ்யாவை அணுகியபோது, பழைய பிரச்சினைகளை நினைத்துப் பார்த்த நவ்யாமறுத்து விட்டார். இருந்தும் விடாத தங்கர், தனது நண்பரும், நவ்யாவுக்கு ஜோடியாகஇரு படங்களில் நடித்து வருபவருமான இயககுநர் சேரன் மூலமாகவும் நவ்யாவைஅணுகினார்.

ஆனால் நவ்யா பிடிவாதமாக இருந்து விட்டார். இதனால் நவ்யாவை விட்டு விட்டுவேறு நாயகிகளை முயற்சித்தார் தங்கர். கடைசியில் இப்போது மீரா ஜாஸ்மின் நடிக்கஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தங்கரைப் போலவே, இயக்குநர்எஸ்.ஜே.சூர்யாவும், தனது திருமகன் படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல்சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

கடைசியில் அவருக்கு கைகொடுத்தவரும் மீரா தான். ஏகப்பட்ட கண்டிஷன்களோடுதான் சூர்யாவுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் மீரா. அதேபோல தங்கர் படத்திலும்நடிக்க சில கண்டிஷன்களை அவர் போட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிபந்தனைகள்,தங்கரின் கொள்கைகளுக்கு முரணாக இல்லாததால் அவர் ஓ.கே.சொல்லி விட்டார்என்றும் கூறப்படுகிறது.

ஒரு வழியாக ஹீரோயின் முடிவாகியுள்ளதால், படப்பிடிப்பை விரைவில் தொடங்கதிட்டமிட்டுள்ளாராம் தங்கர். இப்படத்தில் தங்கர் மட்டும் ஹீரோ கிடையாதாம்.மேலும் இருவரும் இருக்கிறார்கள்.சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், இன்னொருவர் இயக்குநர் சீமான். மூன்று பேரையும்மையமாக வைத்தே கதை நகர்கிறதாம். ஹீரோயினுக்கும் நடிப்புக்கு அருமையானவாய்ப்புகள் இருக்கிறதாம்.

சீக்கிரமா பெல் அடிங்க வாத்யாரே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X