சீதா, மீரா, டிவி ஓரிரண்டு படங்களில் நடித்தும், எடுபடாமல் வெறுத்துப் போய் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டமுன்னாள் மாடலான மீரா வாதேவன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஆனால் சினிமாவில் அல்ல டிவியில்.விளம்பரங்களில் வந்து போய்க் கொண்டிருந்த மீரா வாசுதேவனை எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் சரண்,தான் சொந்தமாக தயாரித்த உன்னைச் சரணடைந்தேன் படத்தின் மூலம் சினிமாவுக்கு இழுத்து வந்தார். படம்ஓரளவு பேசப்பட்டது. மீராவும் கவனிக்கப்பட்டார்.ஆனால் முரளி போன்றவர்களுடன் நடிக்கவே வாய்ப்பு வந்தது. அவையும் கூட கிளாமர் காட்டும் ரோல்கள்.வருவது வரட்டும் என்று துணிந்து கிளாமருக்கு பச்சைக் கொடி காட்டினார் மீரா.அறிவுமணி படத்தில் கவர்ச்சியில் எல்லையைக் கூட தாண்டினார். கூட நடித்த முரளியே வியர்த்துப் போகும்அளவுக்கு விளையாடியிருந்தார். என்ன புண்ணியம்? படம் படுத்துக் கொண்டது. மீராவும் வெறுத்துப் போனார்.இந் நிலையில், கேமராமேன் அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும், மீராவுக்கும் காதல் வைரஸ் தாக்கியது. காதல்ஜூரத்தின் வேகம் தாங்காமல் இருவரும் சீக்கிரத்திலேயே கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.இரு வீட்டாரும் சேர்ந்து பேசி திருமணம் நடந்தது. திருமணம் செய்து கொண்டாலும் கூட தான் ஒப்புக் கொண்டசில படங்களை தட்டாமல் முடித்துத் தந்தார் மீரா. அதில் குறிப்பிடத்தக்க படம் ஜெர்ரி. விசேஷம் என்னவென்றால்இப்படத்தில் மீரா படு கிளாமராக நடித்துள்ளது தான்.திருமணத்திற்குப் பிறகு நடந்த ஷூட்டிங்கின்போது தயக்கப்படாமல் கிளாமராக நடித்து யூனிட்டாரை கதி கலங்கவைத்தார். சொன்ன சொல் மீறாதவராம் மீரா.தொடர்ந்து நடிக்கும் ஆசை மீராவிடம் இருந்தும் சரியான படங்கள் கிடைக்கவில்லை. இதனால் டிவி பக்கம் போகமுடிவெடுத்து விட்டார் மீரா. பெரிய திரை கைவிட்ட நடிகைகளுக்கெல்லாம் இப்போது சின்னத்திரைதான்சொர்க்கம்.நளினி, சீதா, தேவயாணி, ராதிகா, கெளசல்யா, குஷ்பு என ஏகப்பட்ட நடிகைகள் சின்னத் திரையில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் மீராவும் சேர்ந்து விட்டார்.அதே போல தெலுஙகில் அம்மா கேரக்டர்களில் அசத்தி வரும் சீதாவும் டிவியில் நடிக்கிறார். மீராவும், சீதாவும் சேர்ந்து நடித்துள்ள ஒரு மெகா தொடர் விரைவில் சன் டிவியில் வரவிருக்கிறது. பெண் என்றுபெயரிடப்பட்டுள்ள இத்தொடரில், சீதாவின் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக நடிக்கிறாராம் மீரா வாசுதேவன்.சித்தி, அண்ணாமலை, மனைவி என பிரபலமான தொடர்களை இயக்கிய சி.ஜே.பாஸ்கர் இத்தொடரைஇயக்கவுள்ளார். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி இரவு 10 மணிக்கு இத்தொடர்ஒளிபரப்பாகிறதாம்.மீரா, சீதாவைப் பார்த்து அழத் தயாராகுகள்...

By Staff

ஓரிரண்டு படங்களில் நடித்தும், எடுபடாமல் வெறுத்துப் போய் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டமுன்னாள் மாடலான மீரா வாதேவன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஆனால் சினிமாவில் அல்ல டிவியில்.

விளம்பரங்களில் வந்து போய்க் கொண்டிருந்த மீரா வாசுதேவனை எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் சரண்,தான் சொந்தமாக தயாரித்த உன்னைச் சரணடைந்தேன் படத்தின் மூலம் சினிமாவுக்கு இழுத்து வந்தார். படம்ஓரளவு பேசப்பட்டது. மீராவும் கவனிக்கப்பட்டார்.

ஆனால் முரளி போன்றவர்களுடன் நடிக்கவே வாய்ப்பு வந்தது. அவையும் கூட கிளாமர் காட்டும் ரோல்கள்.வருவது வரட்டும் என்று துணிந்து கிளாமருக்கு பச்சைக் கொடி காட்டினார் மீரா.

அறிவுமணி படத்தில் கவர்ச்சியில் எல்லையைக் கூட தாண்டினார். கூட நடித்த முரளியே வியர்த்துப் போகும்அளவுக்கு விளையாடியிருந்தார். என்ன புண்ணியம்? படம் படுத்துக் கொண்டது. மீராவும் வெறுத்துப் போனார்.


இந் நிலையில், கேமராமேன் அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும், மீராவுக்கும் காதல் வைரஸ் தாக்கியது. காதல்ஜூரத்தின் வேகம் தாங்காமல் இருவரும் சீக்கிரத்திலேயே கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.

இரு வீட்டாரும் சேர்ந்து பேசி திருமணம் நடந்தது. திருமணம் செய்து கொண்டாலும் கூட தான் ஒப்புக் கொண்டசில படங்களை தட்டாமல் முடித்துத் தந்தார் மீரா. அதில் குறிப்பிடத்தக்க படம் ஜெர்ரி. விசேஷம் என்னவென்றால்இப்படத்தில் மீரா படு கிளாமராக நடித்துள்ளது தான்.

திருமணத்திற்குப் பிறகு நடந்த ஷூட்டிங்கின்போது தயக்கப்படாமல் கிளாமராக நடித்து யூனிட்டாரை கதி கலங்கவைத்தார். சொன்ன சொல் மீறாதவராம் மீரா.

தொடர்ந்து நடிக்கும் ஆசை மீராவிடம் இருந்தும் சரியான படங்கள் கிடைக்கவில்லை. இதனால் டிவி பக்கம் போகமுடிவெடுத்து விட்டார் மீரா. பெரிய திரை கைவிட்ட நடிகைகளுக்கெல்லாம் இப்போது சின்னத்திரைதான்சொர்க்கம்.


நளினி, சீதா, தேவயாணி, ராதிகா, கெளசல்யா, குஷ்பு என ஏகப்பட்ட நடிகைகள் சின்னத் திரையில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் மீராவும் சேர்ந்து விட்டார்.

அதே போல தெலுஙகில் அம்மா கேரக்டர்களில் அசத்தி வரும் சீதாவும் டிவியில் நடிக்கிறார்.

மீராவும், சீதாவும் சேர்ந்து நடித்துள்ள ஒரு மெகா தொடர் விரைவில் சன் டிவியில் வரவிருக்கிறது. பெண் என்றுபெயரிடப்பட்டுள்ள இத்தொடரில், சீதாவின் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக நடிக்கிறாராம் மீரா வாசுதேவன்.

சித்தி, அண்ணாமலை, மனைவி என பிரபலமான தொடர்களை இயக்கிய சி.ஜே.பாஸ்கர் இத்தொடரைஇயக்கவுள்ளார். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி இரவு 10 மணிக்கு இத்தொடர்ஒளிபரப்பாகிறதாம்.

மீரா, சீதாவைப் பார்த்து அழத் தயாராகுகள்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X