Don't Miss!
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆபாச மெயில்கள்-மாடல் நடாஷா போலீசில் புகார்!
இதுகுறித்து நடாஷாவின் பிஆர்ஓ ப்ளைன் ரெமடியஸ் கூறுகையில், "இரண்டு வருடங்களுக்கு முன் நடாஷாவுக்கும் ஒரு டெல்லி இளைஞருக்கும் நிச்சயமானது. ஆனால் அந்த இளைஞனின் கொடுமையான மறுபக்கம் தெரிந்துவிட்டதால், நிச்சதார்த்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், தொடர்ந்து ஆபாச மெயில்கள், கெட்ட வார்த்தைகளால் எழுதப்பட்ட கடிதங்களை நடாஷா மாடலிங் செய்யும் நிறுவனங்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வருகிறான். தனியே ஒரு பிளாக் ஆரம்பித்து அதில் நடாஷா குறித்து மிகக் கேவலமாக எழுதியுள்ளான். நடாஷா ஒரு பிராட் என்றும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் பொய்ச் செய்தியைப் பரப்பியுள்ளான். இதற்கு அவன் ஒரு போலியான இமெயில் முகவரியைப் பயன்படுத்தியுள்ளான்..." என்றார்.
சம்பந்தப்பட்ட பிளாக் மற்றும் மின்னஞ்சலின் ஐபி முகவரியைக் கண்டுபிடித்து அந்த இளைஞனைக் கைது செய்யும் பணியில் இறங்கியுள்ளது மும்பை சைபர் கிரைம் பிரிவு.