'2 ஜி ஸ்பெக்ட்ரம்'.... நாட்டை உலுக்கிய ஊழல் சினிமாவாகிறது!

அந்த வகையில் இப்போது நாட்டையே உலுக்கி வரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திரைப்படமாகிறது.
பொதுவாக இந்தமாதிரிப் படங்கள் இந்தியில்தான் தயாராகும். இந்த முறை தமிழ் சினிமாக்காரர்கள் முந்திக் கொண்டார்கள்.
படத்துக்கு, '2ஜி ஸ்பெக்ட்ரம்' என்றே பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த படத்தை ஜான் மனோகர் என்பவர் இயக்குகிறார். ஈரோடு ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.
இதுகுறித்து ஜான் மனோகர் கூறுகையில், "நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை மையப்படுத்தி, நடந்த நிகழ்வுகள், அதன் பின்னணி போன்றவற்றை முழுமையாக சொல்ல இந்தப் படத்தை உருவாக்குகிறோம்.
இதில் லட்சுமி ராய், புதுமுகம் சாந்தினி, ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சத்யராஜை ஹீரோவாக நடிக்க வைக்க பேசி வருகிறோம்," என்றார்.
Comments


Click it and Unblock the Notifications