Don't Miss!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தம்பி AR ரகுமான் என் பாட்ட வச்சிக்க மாட்டாருன்னு நெனச்சேன்... MSV-ஐ ஆச்சர்யப் பட வைத்த ARR
சென்னை: இசையமைப்பாளர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர் மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் அவர்கள். 1950-களில் தொடங்கி 80-கள் வரை பிசியாக இருந்தவர்.
MGR, சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று அப்போதைய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வந்தார். கவிஞர் கண்ணதாசனுடன் சேர்ந்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர் இராமமூர்த்தி அவர்களுடன் சேர்ந்து திரைப்பயணத்தை தொடங்கியவர், பின்னர் தனித்து இசையமைத்து வெற்றிக் கொடி நாட்டினார்.
அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிடும் விக்னேஷ் சிவன்.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
MS விஸ்வநாதன் - இளையராஜா
இளையராஜா அவர்களின் வருகைக்கு பின்னர், MS விஸ்வநாதன் அவர்களுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இளையராஜா உச்சத்தில் இருந்தபோது, MS விஸ்வநாதனுடன் சேர்ந்து பணியாற்றினார். மெல்ல திறந்தது கதவு, இரும்பு பூக்கள், செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன், விஷ்வ துளசி ஆகிய ஐந்து படங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து இசையமைத்துள்ளனர். தில்லு முல்லு படத்தின் ரீமேக்கில் யுவன் சங்கர் ராஜாவுடனும் பணிபுரிந்துள்ளார்.
சங்கமத்தில் ARR-உடன் சங்கமம்
ராமமூர்த்தி, இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து இசையமைத்துள்ள MSV அவர்கள், இசையமைப்பாளர் AR ரகுமானின் இசையில் பாடியுள்ளார். MSV பாடல்களுக்கு கீபோர்ட் பிளேயராக பணியாற்றியுள்ள ரகுமான், மழைத்துளி பாடலை கம்போஸ் செய்ததும் MSV-ஐ பாட அழைத்துள்ளார். பாடலை சொல்லித் தரும்படி MSV கேட்க, உங்களுக்கு எப்படிண்ணே நா சொல்லித் தர்றது என்று ARR கூறியுள்ளார். பின்னர் MSV-யின் வேண்டுகோளுக்கு இணங்க, ரகுமான் பல விதமாக பாடச் சொல்லி ரெக்கார்ட் செய்துள்ளார்.
ஆலாலகண்டா ஆடலுக்கு தகப்பா...
பாடி முடித்ததும் போட்டுக் காண்பிக்க சொல்லியிருக்கிறார் MSV. அதற்கு இன்னும் எடிட்டிங் பணிகள் இருக்குண்ணே என்று சொல்லி நல்ல சம்பளத்தையும் கொடுத்து அனுப்பியுள்ளாராம் ரகுமான். MSV அவர்களுக்கோ, தான் பாடியது ரகுமானுக்கு பிடிக்கவில்லை போலும். அதனால்தான் போட்டுக் காட்டாமல், அதிக பணமும் கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாராம். அதன் பின்னர் ஒரு நாள் ரேடியோவில் அந்தப் பாட்டைக் கேட்டதும், தான் பாடிய பாடலா என்று ஆச்சர்யப்பட்டாராம்.
பாடகர் MSV
சங்கமம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அந்த "மழைத்துளி மழைத்துளி" பாடல் அப்போது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆண்டு விழாக்களில் மாணவர்களால் அதிகம் ஆடப்பட்ட பாடல் என்கிற பெருமையை பெற்றது. MSV அவர்கள், நடிகர் ரஜினிகாந்திற்கு மூன்று முடிச்சு திரைப்படத்தில் "வசந்த கால நதியினிலே" பாடலில் வில்லத்தனமாக பின்னணி பாடியிருப்பார் என்பது கூடுதல் தகவல்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க