Don't Miss!
- Sports புதிய விதியால் எல்லா டீம்க்கும் தலைவலி தான்.. கடைசி 2 ஓவரில் சொதப்பிவிட்டோம்.. குஜராம் கேப்டன் கில்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பேருந்தில் பிறந்த கவியரசர் கண்ணதாசன்: ஒரு பிளாஷ்பேக்
சென்னை: காலத்தால் அழியாத பாடல்களை எழுதிய கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாள் இன்று.
17 வயதில் எழுதத் துவங்கியவர் கவியரசர் கண்ணதாசன். சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 8வது பிள்ளையாக பிறந்தவர் முத்தையா. கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
8வது பிள்ளையாக பிறந்த அவர் 8ம் வகுப்பு வரையே படித்தார். ஆரம்ப காலத்தில் பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதி வந்த கண்ணதாசன் மாடர்ன் தியேட்டர்ஸார் மூலம் சினிமா உலகிற்கு வந்தார்.
இயக்குனர் ராம்நாத்தின் கன்னியின் காதலி படத்தில் கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்பது தான் கண்ணதாசன் எழுதிய முதல் பாடல் ஆகும்.
திருமகள் பத்திரிகைக்கு பேருந்தில் செல்லும்போது தம்மை முத்தையா என்றா அறிமுகம் செய்வது என அவர் யோசித்தார். கண்ணன் 8வது பிள்ளையாக பிறந்தார் நானும் எட்டாவது அதனால் கண்ணன் என்ற பெயரை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார் முத்தையா.
வெறும் கண்ணன் நன்றாக இல்லையே என்று நினைத்த அவர் தாசனை சேர்த்து கண்ணதாசன் ஆனார். பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போதே முத்தையா கண்ணதாசன் ஆகிவிட்டார்.