Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அசின் மீது நடவடிக்கை என்ன... நாளை முடிவு செய்கிறது நடிகர் சங்கம்!
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் செயற்குழு கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் மனோரமா, விஜயகுமார், பொருளாளர் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
செயற்குழுவில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அசின் பிரச்சினை பற்றியும் பேச உள்ளனர்.
திரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி அசின் இலங்கை சென்று ரெட் இந்திப் படப்பிடிப்பில் பங்கேற்றதாலும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகப் பேசியதாலும் சர்ச்சை ஏற்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன.
நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராதாரவி கூறினார்.
ஆனால் அசின் இதுவரை நடிகர் சங்கத்துக்கு விளக்கம் அளித்து கடிதம் அனுப்பவில்லை. இதனால் சங்க நிர்வாகிகள் கோபத்தில் உள்ளனர்.
அசின் தற்போது விஜய்யுடன் காவலன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். அசின் விவகாரம் பற்றி ஒரு வாரத்தில் பேசி முடிவு செய்யப்படும் என்று பிலிம்சேம்பர் அறிவித்து உள்ளது.
அசின் மீது என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க கூட்டுக்குழு கூட்டத்தில் கருத்து தெரிவிப்பது என செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.