twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நதியா டைவர்ஸ்? மீண்டும் நடிக்க வந்திருக்கும் நதியாவின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியுள்ளதாம். விரைவில்கணவரை நதியா விவாகரத்து செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.ஒரு காலத்தில் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் நதியா. அவரது பெயரில் வளையல், ரிப்பன், சேலை, ஜாக்கெட்என ஏகப்பட்ட ஐட்டங்களை போட்டு விற்றார்கள் தமிழ்நாட்டு வியாபாரிகள். அந்த அளவுக்கு நதியாவுக்கு தமிழ்நாட்டு பெண்களிடையே பயங்கர கிரேஸ் இருந்தது.காலப் போக்கில் பல்வேறு புதுமுகங்களின் வரவால் சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குஇடம் பெயர்ந்தார் நதியா. திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு செட்டிலானார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி என்ற படம் மூலம் நதியா மீண்டும் நடிக்கவந்தார். இப்படத்தில் நதியாவின் கேரக்டர் வெகுவாக பேசப்பட்டதால் அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள்வந்தன.ஆனால் வருகிற வாய்ப்புகளையெல்லாம் நதியா ஒப்புக் கொள்ளாமல் தட்டிக் கழித்தார். காரணம் கேட்டதயாரிப்பாளர்களிடம், நிறைய சம்பளம் கேட்ட நதியா, ஹீரோ, ஹீரோயினுக்கு இணையாக எனது ரோலும்இருந்தால் தான் நடிப்பேன் என்றும் நிபந்தனை விதித்தார்.இதனால் நதியாவைத் தேடி வந்த பல வாய்ப்புகள் அப்படியே வேறு நடிகைகளுக்குத் திரும்பின. இதனால் ஆடிப்போன நதியா இப்போது வெகுவாக இறங்கி வந்துள்ளார். அவரது திடீர் மாற்றத்திற்கு குடும்ப வாழ்க்கையில்ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.நதியா மீண்டும் நடிக்க வந்ததில் அவரது கணவருக்கு சுத்தமாக விருப்பம் இல்லையாம். கணவரின்குடும்பத்தாரும் இதை விரும்பவில்லையாம். ஆனால் நதியாதான் விடாப்பிடியாக மீண்டும் நடித்தே தீருவேன்என்று பிடிவாதமாக நடிக்க வந்தாராம்.இதன் காரணமாக அவருக்கும், கணவருக்கும் இடையே பெரிய மனத்தாங்கல் ஏற்பட்ட விட்டதாம். இருவரும்சரியாக பேசிக் கொள்வது கூட கிடையாதாம். பிரச்சினை பெரிதாகிக் கொண்டே வருவதால், விரைவில் கணவரைநதியா டைவர்ஸ் செய்து விடுவார் என்று பேசிக் கொள்கிறார்கள்.இதற்கிடையே, தனது நண்பர்களில் ஒருவரான ஆக்ஷன் கிங் அர்ஜூனை சந்தித்துப் பேசிய நதியா, தனக்காகதயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம் நதியா.அர்ஜூனும், தான் நடித்து வரும் படங்கள், தெலுங்கு திரையுலகில் உள்ள தனது நண்பர்களிடம் நதியாவின்பெயரை சிபாரிசு செய்கிறாராம். நதியாவின் பி.ஆர்.ஓ. போல அர்ஜூன் செயல்படுவதாக கூறுகிறார்கள்.தனது குடும்பத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை என்று மலையாள பத்திரிக்கைகள் சிலவற்றில் மறுத்துள்ளார்நதியா. ஆனாலும் பிரச்சினை பெரிதாகி வருவதை இனியும் நதியாவால் மறைக்க முடியாது என்கிறார்கள்.நல்லா இருந்த குடும்பத்தில இப்படி ஒரு குழப்பமா?

    By Staff
    |
    மீண்டும் நடிக்க வந்திருக்கும் நதியாவின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியுள்ளதாம். விரைவில்கணவரை நதியா விவாகரத்து செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

    ஒரு காலத்தில் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் நதியா. அவரது பெயரில் வளையல், ரிப்பன், சேலை, ஜாக்கெட்என ஏகப்பட்ட ஐட்டங்களை போட்டு விற்றார்கள் தமிழ்நாட்டு வியாபாரிகள். அந்த அளவுக்கு நதியாவுக்கு தமிழ்நாட்டு பெண்களிடையே பயங்கர கிரேஸ் இருந்தது.

    காலப் போக்கில் பல்வேறு புதுமுகங்களின் வரவால் சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குஇடம் பெயர்ந்தார் நதியா. திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு செட்டிலானார்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி என்ற படம் மூலம் நதியா மீண்டும் நடிக்கவந்தார். இப்படத்தில் நதியாவின் கேரக்டர் வெகுவாக பேசப்பட்டதால் அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள்வந்தன.

    ஆனால் வருகிற வாய்ப்புகளையெல்லாம் நதியா ஒப்புக் கொள்ளாமல் தட்டிக் கழித்தார். காரணம் கேட்டதயாரிப்பாளர்களிடம், நிறைய சம்பளம் கேட்ட நதியா, ஹீரோ, ஹீரோயினுக்கு இணையாக எனது ரோலும்இருந்தால் தான் நடிப்பேன் என்றும் நிபந்தனை விதித்தார்.

    இதனால் நதியாவைத் தேடி வந்த பல வாய்ப்புகள் அப்படியே வேறு நடிகைகளுக்குத் திரும்பின. இதனால் ஆடிப்போன நதியா இப்போது வெகுவாக இறங்கி வந்துள்ளார். அவரது திடீர் மாற்றத்திற்கு குடும்ப வாழ்க்கையில்ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    நதியா மீண்டும் நடிக்க வந்ததில் அவரது கணவருக்கு சுத்தமாக விருப்பம் இல்லையாம். கணவரின்குடும்பத்தாரும் இதை விரும்பவில்லையாம். ஆனால் நதியாதான் விடாப்பிடியாக மீண்டும் நடித்தே தீருவேன்என்று பிடிவாதமாக நடிக்க வந்தாராம்.

    இதன் காரணமாக அவருக்கும், கணவருக்கும் இடையே பெரிய மனத்தாங்கல் ஏற்பட்ட விட்டதாம். இருவரும்சரியாக பேசிக் கொள்வது கூட கிடையாதாம். பிரச்சினை பெரிதாகிக் கொண்டே வருவதால், விரைவில் கணவரைநதியா டைவர்ஸ் செய்து விடுவார் என்று பேசிக் கொள்கிறார்கள்.

    இதற்கிடையே, தனது நண்பர்களில் ஒருவரான ஆக்ஷன் கிங் அர்ஜூனை சந்தித்துப் பேசிய நதியா, தனக்காகதயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம் நதியா.

    அர்ஜூனும், தான் நடித்து வரும் படங்கள், தெலுங்கு திரையுலகில் உள்ள தனது நண்பர்களிடம் நதியாவின்பெயரை சிபாரிசு செய்கிறாராம். நதியாவின் பி.ஆர்.ஓ. போல அர்ஜூன் செயல்படுவதாக கூறுகிறார்கள்.

    தனது குடும்பத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை என்று மலையாள பத்திரிக்கைகள் சிலவற்றில் மறுத்துள்ளார்நதியா. ஆனாலும் பிரச்சினை பெரிதாகி வருவதை இனியும் நதியாவால் மறைக்க முடியாது என்கிறார்கள்.

    நல்லா இருந்த குடும்பத்தில இப்படி ஒரு குழப்பமா?

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X