நாகேஷ் சுயசரிதை சிரித்து வாழ வேண்டும்: சோ வெளியிட்டார் நகைச்சுவை நடிகர் நாகேஷின் சுயசரிதையான சிரித்து வாழ வேண்டும் நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதைபத்திரிகையாளர் சோ வெளியிட்டார். நகைச்சுவை, குணச்சித்திரம், ஹீரோ என பல்வேறு கேரக்டர்களில் நடித்தவரான நாகேஷ் தனது சுயசரிதையை சிரித்து வாழவேண்டும் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். இந்த நூலை வானதி பதிப்பகம் சார்பில் சந்திரமெளலி தொகுத்து எழுதியுள்ளார்.சிரித்து வாழ வேண்டும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. துக்ளக் பத்திரிக்கை ஆசிரியரும், நாகேஷ் காலத்தில்அவரைப் போல காமடியில் சிறந்து விளங்கியவருமான சோ ராமசாமி நூலை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகைகள்மனோரமா, சரோஜா தேவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியில் கவிஞர் வாலி, நடிகர்கள் ராஜேஷ், சிவக்குமார், ஸ்ரீகாந்த், இயக்குனர் வசந்த், பின்னணிப் பாடகர்டி.எம்.செளந்தரராஜன், தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நகைச்சுவை நடிகர் நாகேஷின் சுயசரிதையான சிரித்து வாழ வேண்டும் நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதைபத்திரிகையாளர் சோ வெளியிட்டார்.
நகைச்சுவை, குணச்சித்திரம், ஹீரோ என பல்வேறு கேரக்டர்களில் நடித்தவரான நாகேஷ் தனது சுயசரிதையை சிரித்து வாழவேண்டும் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். இந்த நூலை வானதி பதிப்பகம் சார்பில் சந்திரமெளலி தொகுத்து எழுதியுள்ளார்.
சிரித்து வாழ வேண்டும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. துக்ளக் பத்திரிக்கை ஆசிரியரும், நாகேஷ் காலத்தில்அவரைப் போல காமடியில் சிறந்து விளங்கியவருமான சோ ராமசாமி நூலை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகைகள்மனோரமா, சரோஜா தேவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவிஞர் வாலி, நடிகர்கள் ராஜேஷ், சிவக்குமார், ஸ்ரீகாந்த், இயக்குனர் வசந்த், பின்னணிப் பாடகர்டி.எம்.செளந்தரராஜன், தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications