Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நக்மா, ஜோ: அப்பப்பா... தமிழ் சினிமாவையும், சரத்குமாரையும், பின்னர் செளரவ் கங்குலியையும் ஒரு கலக்குகலக்கிய நக்மா, இப்போது தனது குடும்ப சரித்திரத்தை விலாவாரியாக விளக்கி புதியபரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பரபரப்பும், நக்மாவும் உடன் பிறந்தவர்கள். நடித்தபோது சரத்குமாருடன் இணைத்துப்பேசப்பட்டார். சரத்தின் சொத்துக்களை எழுதி வாங்கி விட்டதாகக் கூட செய்திகள்வந்தன.சொத்துக்களை சரத் திருப்பிக் கேட்டபோது, மும்பை தாதாக்களை வைத்து அவரைமிரட்டியதாகக் கூட செய்திகள் கிளம்பின.அடுத்து கங்குலியுடன் இணைத்துப் பேசப்பட்டார். ஆரம்பத்தில் இதை நக்மாமறுத்தாலும் கூட இருவரும் பல இடங்களில் ஜோடி போட்டு உலா வந்ததைபத்திரிக்கைகள் புட்டுப் புட்டு வைத்தன.திடீரென மும்பை தாதா தாவூத் இப்ராகிம் கும்பலுக்கும், நக்மாவுக்கும் நெருங்கியதொடர்பு இருப்பதாக வெளியான செய்திதான், நக்மா குறித்த மிகப் பெரிய பரபரப்புச்செய்தி.ஏராளமான பணம் தாவூத் கும்பலிடமிருந்து நக்மாவுக்கு கைமாறியதாக ஜம்போ என்றதாதா வாக்குமூலம் அளித்து நக்மாவை அலற வைத்தார்.இந்த சலசலப்புகள் கொஞ்சம் போல அடங்கியுள்ள நிலையில் நக்மாவே புதுசர்ச்சையை கிளப்பியுள்ளார்.இந்த மறை அவரது குடும்ப சரித்திரத்தை தனது வாயாலேயே சொல்லியுள்ளார்.நக்மாவும், ஜோதிகாவும் அக்கா, தங்கச்சி என்பது செவ்வாய் கிரகம் வரைக்கும்தெரிந்த விஷயம். ஆனால் இவர்களது அப்பாக்கள் குறித்து தெளிவான வரலாறுயாருக்கும் தெரியாது.இதை நக்மா சமீபத்தில் மும்பை பத்திரிக்கை ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.நக்மாவின் அம்மா பெயர் சீமா. இவர் ஒரு நடிகையும் கூட. அவரது முதல் கணவர்அவரது பெயர் அரவிந்த் பிரதாப் சிங் மொரார்ஜி. அவருக்குப் பிறந்த பெண்தான்நக்மா.பிரதாப் சிங் மிகப் பெரிய ஜவுளி அதிபராம்.1972ம் ஆண்டு சீமாவும், மொரார்ஜியும்மும்பை, கொலாபா பகுதியில் உள்ள ரேடியோ கிளப்பில் முறைப்படி திருமணம்செய்து கொண்டனராம்.நக்மாவுக்கு, மொரார்ஜி, சீமா தம்பதியினர் வைத்த பெயர் நந்திதா. பின்னர்அரவிந்தும், சீமாவும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். இருவரும் பின்னர்தனித் தனியாக புது வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.சீமா பின்னர் சந்தர் சாதனா என்வரை திருமணம் செய்து கொண்டார். அவருக்குப்பிறந்தவர்தான் ஜோதிகாவாம்.நக்மாவின் அப்பா மொரார்ஜி சமீபத்தில் மும்பையில் காலமானார். இதுதொடர்பாகபத்திரிகைகளில் இரங்கல் விளம்பரமும் வந்தது.அதில் நக்மாவின் பெயரும் (நந்திதா என்று) குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வளவு பெரிய பிரமுகரான உங்களோட அப்பா ஏன் உங்க அம்மாவைவிவகாரத்து செய்யணும் என்ற கேள்விக்கு, சில குடும்பப் பிரச்சினைகள் காரணமாகஇருவரும் பிரிந்து விட்டனர். அது அவர்களோட பெர்சனல் விஷயம் என்றுகூறியுள்ளார் நக்மா.இன்னும் பல குடும்ப விவகாரங்களையும் போட்டு உடைத்துள்ளார்.சிவக்குமார் என்ன நினைப்பார்னு தெரியலியே...
தமிழ் சினிமாவையும், சரத்குமாரையும், பின்னர் செளரவ் கங்குலியையும் ஒரு கலக்குகலக்கிய நக்மா, இப்போது தனது குடும்ப சரித்திரத்தை விலாவாரியாக விளக்கி புதியபரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பரபரப்பும், நக்மாவும் உடன் பிறந்தவர்கள். நடித்தபோது சரத்குமாருடன் இணைத்துப்பேசப்பட்டார். சரத்தின் சொத்துக்களை எழுதி வாங்கி விட்டதாகக் கூட செய்திகள்வந்தன.
சொத்துக்களை சரத் திருப்பிக் கேட்டபோது, மும்பை தாதாக்களை வைத்து அவரைமிரட்டியதாகக் கூட செய்திகள் கிளம்பின.
அடுத்து கங்குலியுடன் இணைத்துப் பேசப்பட்டார். ஆரம்பத்தில் இதை நக்மாமறுத்தாலும் கூட இருவரும் பல இடங்களில் ஜோடி போட்டு உலா வந்ததைபத்திரிக்கைகள் புட்டுப் புட்டு வைத்தன.
திடீரென மும்பை தாதா தாவூத் இப்ராகிம் கும்பலுக்கும், நக்மாவுக்கும் நெருங்கியதொடர்பு இருப்பதாக வெளியான செய்திதான், நக்மா குறித்த மிகப் பெரிய பரபரப்புச்செய்தி.
ஏராளமான பணம் தாவூத் கும்பலிடமிருந்து நக்மாவுக்கு கைமாறியதாக ஜம்போ என்றதாதா வாக்குமூலம் அளித்து நக்மாவை அலற வைத்தார்.
இந்த சலசலப்புகள் கொஞ்சம் போல அடங்கியுள்ள நிலையில் நக்மாவே புதுசர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இந்த மறை அவரது குடும்ப சரித்திரத்தை தனது வாயாலேயே சொல்லியுள்ளார்.
நக்மாவும், ஜோதிகாவும் அக்கா, தங்கச்சி என்பது செவ்வாய் கிரகம் வரைக்கும்தெரிந்த விஷயம். ஆனால் இவர்களது அப்பாக்கள் குறித்து தெளிவான வரலாறுயாருக்கும் தெரியாது.
இதை நக்மா சமீபத்தில் மும்பை பத்திரிக்கை ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.
நக்மாவின் அம்மா பெயர் சீமா. இவர் ஒரு நடிகையும் கூட. அவரது முதல் கணவர்அவரது பெயர் அரவிந்த் பிரதாப் சிங் மொரார்ஜி. அவருக்குப் பிறந்த பெண்தான்நக்மா.
பிரதாப் சிங் மிகப் பெரிய ஜவுளி அதிபராம்.1972ம் ஆண்டு சீமாவும், மொரார்ஜியும்மும்பை, கொலாபா பகுதியில் உள்ள ரேடியோ கிளப்பில் முறைப்படி திருமணம்செய்து கொண்டனராம்.
நக்மாவுக்கு, மொரார்ஜி, சீமா தம்பதியினர் வைத்த பெயர் நந்திதா. பின்னர்அரவிந்தும், சீமாவும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். இருவரும் பின்னர்தனித் தனியாக புது வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
சீமா பின்னர் சந்தர் சாதனா என்வரை திருமணம் செய்து கொண்டார். அவருக்குப்பிறந்தவர்தான் ஜோதிகாவாம்.
நக்மாவின் அப்பா மொரார்ஜி சமீபத்தில் மும்பையில் காலமானார். இதுதொடர்பாகபத்திரிகைகளில் இரங்கல் விளம்பரமும் வந்தது.
அதில் நக்மாவின் பெயரும் (நந்திதா என்று) குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய பிரமுகரான உங்களோட அப்பா ஏன் உங்க அம்மாவைவிவகாரத்து செய்யணும் என்ற கேள்விக்கு, சில குடும்பப் பிரச்சினைகள் காரணமாகஇருவரும் பிரிந்து விட்டனர். அது அவர்களோட பெர்சனல் விஷயம் என்றுகூறியுள்ளார் நக்மா.
இன்னும் பல குடும்ப விவகாரங்களையும் போட்டு உடைத்துள்ளார்.
சிவக்குமார் என்ன நினைப்பார்னு தெரியலியே...