Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நமிதா குழந்தை மாதிரி.. சாக்லேட் திருடுவா - வளைகாப்பில் ஸ்ரீகாந்த் சொன்ன தகவல்
சென்னை: நடிகை நமிதாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் திரை நட்சத்திரங்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலா மாஸ்டர், நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி, நடிகர் ஆரவ், இயக்குநர் பாக்கியராஜ் குடும்பத்தினர் எனப் பலர் கலந்து கொண்டு நமிதாவை வாழ்த்தினர்.
விஜே பார்வதி மேடையில் தொகுத்து வழங்க இந்நிகழ்ச்சி கலகலப்பாக நடைபெற்றது.
நமிதா குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் பேசுகையில், "நமிதாவைப் பல ஆண்டுகளாக எனக்கு தெரியும். அவளும், நானும் நிறைய படங்களில் பணியாற்றியிருக்கிறோம். நமிதா ஒரு குழந்தை மாதிரி. இப்போது அவளுக்கே ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. எல்லோரும் நமிதா ஒரு டாமினண்ட் பர்சன் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அவ ஒரு குழந்தை மாதிரி. அவ சாக்லேட் திருடி கூட நான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை லங்காவியில் ஒரு கிலோ சாக்லேட் வாங்கினாள். நமிதா என்ன இது ஒரு கிலோ சாக்லேட் ? என்று கேட்டேன். "ஆமா டா, சாப்பிட வேணும்ல?" என்று குழந்தை போல் சொன்னாள். அது தான் நமிதா" என ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார்.
ஆஜானுபாகுவான உயரம், அதற்கேற்ற வளைவு நெளிவோடு உடலமைப்பு என ஆரம்பக் காலங்களில் நமிதா சினிமாவில் அறிமுகமான போது, இளைஞர்களின் மனதை அப்படியே அலேக்காக அள்ளினார். ஒருகாலத்தில் சில்க் ஸ்மிதாவிற்காகவே ரசிகர்கள் படம் பார்க்க வந்தது போல், நமிதாவின் கவர்ச்சிக்காகவே ரசிகர்கள் படம் பார்க்க வரத் தொடங்கினர். 'ஏய்' திரைப்படத்தில் 'அர்ஜூனா.. அர்ஜூனா' பாடல் கவர்ச்சியின் உச்சம். அதுமட்டுமல்ல பொதுவெளிகளில் அனைவரையும், 'ஹாய் மச்சான்ஸ்' என குழந்தை போல் அவர் அழைப்பதும் டிரெண்ட் ஆனது அந்தக் காலத்தில். நமிதாவிற்கு கோயில் கட்டும் அளவிற்கும், அவரை கடத்திச் செல்லும் அளவிற்கும் அவரது ரசிகர்கள், வெறியர்களாக மாறினர்.
சாப்பாட்டுப் பிரியையான நமிதா, வகை வகையாக சாப்பிடக் கூடியவர். இதனால் அவரது உடல் எடை கூடத் தொடங்கியது. படங்களில் ஃபிட்டாக இருந்த நமிதா அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உப்பத் தொடங்கினார் என்றாலும், முதலில் அவரது உயரத்திற்கு அது அவ்வளவு விகாரமாய் தெரியவில்லை. அப்போதும் கவர்ச்சி அவருடன் ஒட்டிக் கொண்டே இருந்தது. ஆனால், தொடர்ந்து எடை கூடிக் கொண்டே போனார். ஒருகட்டத்தில், சரத்குமார், சத்யராஜ் போன்ற கட்டுமஸ்தான நடிகர்களே நமிதா பக்கத்தில் நின்றால் கோழிக்குஞ்சு போல் தெரியும் அளவிற்கு எடை போட்டார் நமிதா. விடாப்பிடியாக, சினிமாவும், அவரது கவர்ச்சிக்காகவே, போலீஸ் கதாப்பாத்திரம், வில்லி என கொடுத்துப் பார்த்தது. ஒருகட்டத்தில், நமிதாவின் மீதான கிரேஸ் ரசிகர்களிடத்தில் குறையவே அதோடு சினிமாவிலிருந்து விலகினார்.