பீமாவிலிருந்து விலகிய நானா விக்ரம் நடிக்கும் பீமா படத்திலிருந்து நானா படேகர் விலகி விட்டாராம்.ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, விக்ரம் நடிப்பில் உருவாகும் படம் பீமா. நீண்டதாமதத்திற்குப் பிறகு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதில் விக்ரமுக்குஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.வில்லன் கேரக்டருக்காக மம்முட்டி, மோகன்லால் என பலரையும் முயற்சித்தனர்.அனைவரும் மறுத்து விட்டதால் இந்திக்குப் போய் நானா படேகரை கேட்டனர்.கதையைக் கேட்ட நானா நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். ஆனால்,சம்பளமாக ரூ. 1.5 கோடி வரை கேட்டார். இந்தியில் அவர் ரூ. 2 கோடி வரைசம்பளமாக பெறுகிறார்.சம்பளம் மிக அதிகமாகக் கேட்டதால் முதலில் யோசித்த பீமா தரப்பு பின்னர் ரூ. 1.2கோடிக்கு அவரை சம்மதிக்க வைத்தது.வித்தியாசமான கதை என்பதால் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு நடிக்கசம்மதித்தார் நானா. இதையடுத்து படப்பிடிப்பு வேகமாக தொடங்கியது.இந் நிலையில் பீமாவிலிருந்து விலகுவதாக நானா கூறிவிட்டாராம்.எல்லாம் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கும், சம்பளப் பிரச்சினையும்தான் காரணமாம்.பீமா படம் தமிழில் மட்டுமே தயாரிக்கப்படுவதாக நானா படேகர் நினைத்துள்ளார்.ஆனால் தமிழ் தவிர இந்தி, தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்படவுள்ளதாககேள்விப்பட்ட நானா, அப்படியானால் எனது சம்பளத்தை 2 கோடியாக உயர்த்தவேண்டும் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தைக் கூப்பிட்டுக் கூறியுள்ளார்.வில்லனாக நடிப்பவருக்கு அவ்வளவு சம்பளம் தர முடியாதே என்று கூறியுள்ளார்ரத்னம். அப்படியானால் நான் விலகிக் கொள்கிறேன் என்று பட்டென்று கூறிவிட்டாராம் நானா. அட்வான்ஸையும் திருப்பித் தந்துவிட்டாராம்.இதனால் பீமாவில் நானா நடிக்கவில்லை. நானா விலகியுள்ளதால் அவருக்குப் பதில்பிரகாஷ் ராஜை நடிக்க வைக்கலாம் என்று விக்ரம் யோசனை தெரிவித்துள்ளாராம்.இதனால் பிரகாஷ் ராஜைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார் ரத்னம்.நடிக்கவே தெரியாத, காட்ட மட்டும் தெரிந்த மும்பை நடிகைகளுக்கு என்றால்நம்மவர்கள் எம்புட்டு வேண்டுமானாலும் தருவார்கள்.

By Staff
விக்ரம் நடிக்கும் பீமா படத்திலிருந்து நானா படேகர் விலகி விட்டாராம்.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, விக்ரம் நடிப்பில் உருவாகும் படம் பீமா. நீண்டதாமதத்திற்குப் பிறகு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதில் விக்ரமுக்குஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

வில்லன் கேரக்டருக்காக மம்முட்டி, மோகன்லால் என பலரையும் முயற்சித்தனர்.அனைவரும் மறுத்து விட்டதால் இந்திக்குப் போய் நானா படேகரை கேட்டனர்.

கதையைக் கேட்ட நானா நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். ஆனால்,சம்பளமாக ரூ. 1.5 கோடி வரை கேட்டார். இந்தியில் அவர் ரூ. 2 கோடி வரைசம்பளமாக பெறுகிறார்.

சம்பளம் மிக அதிகமாகக் கேட்டதால் முதலில் யோசித்த பீமா தரப்பு பின்னர் ரூ. 1.2கோடிக்கு அவரை சம்மதிக்க வைத்தது.

வித்தியாசமான கதை என்பதால் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு நடிக்கசம்மதித்தார் நானா. இதையடுத்து படப்பிடிப்பு வேகமாக தொடங்கியது.

இந் நிலையில் பீமாவிலிருந்து விலகுவதாக நானா கூறிவிட்டாராம்.

எல்லாம் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கும், சம்பளப் பிரச்சினையும்தான் காரணமாம்.

பீமா படம் தமிழில் மட்டுமே தயாரிக்கப்படுவதாக நானா படேகர் நினைத்துள்ளார்.ஆனால் தமிழ் தவிர இந்தி, தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்படவுள்ளதாககேள்விப்பட்ட நானா, அப்படியானால் எனது சம்பளத்தை 2 கோடியாக உயர்த்தவேண்டும் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தைக் கூப்பிட்டுக் கூறியுள்ளார்.

வில்லனாக நடிப்பவருக்கு அவ்வளவு சம்பளம் தர முடியாதே என்று கூறியுள்ளார்ரத்னம். அப்படியானால் நான் விலகிக் கொள்கிறேன் என்று பட்டென்று கூறிவிட்டாராம் நானா. அட்வான்ஸையும் திருப்பித் தந்துவிட்டாராம்.

இதனால் பீமாவில் நானா நடிக்கவில்லை. நானா விலகியுள்ளதால் அவருக்குப் பதில்பிரகாஷ் ராஜை நடிக்க வைக்கலாம் என்று விக்ரம் யோசனை தெரிவித்துள்ளாராம்.இதனால் பிரகாஷ் ராஜைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார் ரத்னம்.

நடிக்கவே தெரியாத, காட்ட மட்டும் தெரிந்த மும்பை நடிகைகளுக்கு என்றால்நம்மவர்கள் எம்புட்டு வேண்டுமானாலும் தருவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X