நந்திதா ஒரு வழியாய்... நந்திதாவுக்கு வசந்தம் வருவது போலத் தெரிகிறதாம். அடுத்தடுத்து படங்கள் வரஆரம்பித்துள்ளதால் சந்தோஷ களியாடுகிறார்.பாரதிராஜாவின் ஈர நிலம் மூலம் அறிமுகமானவர் நந்திதா. ஆனாலும்போணியாகாமல் செகண்ட் ஹீரோயினாகவும், குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடும்வாய்ப்புகளுமே வந்து கொண்டிருந்தது. இதனால் கவலையோடு இருந்து வந்தார்நந்திதா.வருகிற வாய்ப்புகளை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம் என பயந்த நந்திதா, கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார்.இம்சை அரசினில் ஒருபாட்டுக்கு கும்பலோடு கும்பலாக வந்து ஆடிப் போனார்நந்திதா. ஆனால் காத்திருப்புக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. சில புதுப் படங்கள் அவரைத் தேடி வந்துள்ளதாம். அதில், வசந்தம் வந்தாச்சு படத்தில்ஹீரோயினாகவே நடித்து வருகிறார். கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபுதான் நாயகன். இதில் நந்திதாவின் நடிப்பும்,கிளாமரும் ரயில்வே தண்டவாளம் போல கைகோர்த்து செல்கிறதாம். படத்தில் எனக்கு நல்ல கேரக்டர், பேசப்படுவேன், மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன்என்று நம்பிக்கையாக சொல்கிறார் நந்திதா. மயிலாடுதுறை அருகே சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்ததாம். அப்போதுநந்திதாவைப் பார்த்த பலரும் இம்சை அரசனில் நடித்தவர்தானே நீங்கள் என்று கேட்டஆட்டோகிராப் வாங்கினார்களாம்.எந்தப் படம் கொடுக்காத பிரேக்கை இம்சை அரசன் எனக்கு கொடுத்துள்ளது.சந்தோஷமாக இருக்கிறது. சின்ன ரோலாக இருந்தாலும் ரசிகர்களைக் கவர முடியும்என்ற நம்பிக்கையை இம்சை அரசன் எனக்குக் கொடுத்துள்ளது என குதூகலிக்கிறார்.குதூகலம் தொடரட்டும்...

By Staff
நந்திதாவுக்கு வசந்தம் வருவது போலத் தெரிகிறதாம். அடுத்தடுத்து படங்கள் வரஆரம்பித்துள்ளதால் சந்தோஷ களியாடுகிறார்.

பாரதிராஜாவின் ஈர நிலம் மூலம் அறிமுகமானவர் நந்திதா. ஆனாலும்போணியாகாமல் செகண்ட் ஹீரோயினாகவும், குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடும்வாய்ப்புகளுமே வந்து கொண்டிருந்தது. இதனால் கவலையோடு இருந்து வந்தார்நந்திதா.

வருகிற வாய்ப்புகளை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம் என பயந்த நந்திதா, கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார்.

இம்சை அரசினில் ஒருபாட்டுக்கு கும்பலோடு கும்பலாக வந்து ஆடிப் போனார்நந்திதா. ஆனால் காத்திருப்புக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.


சில புதுப் படங்கள் அவரைத் தேடி வந்துள்ளதாம். அதில், வசந்தம் வந்தாச்சு படத்தில்ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.

கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபுதான் நாயகன். இதில் நந்திதாவின் நடிப்பும்,கிளாமரும் ரயில்வே தண்டவாளம் போல கைகோர்த்து செல்கிறதாம்.

படத்தில் எனக்கு நல்ல கேரக்டர், பேசப்படுவேன், மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன்என்று நம்பிக்கையாக சொல்கிறார் நந்திதா.

மயிலாடுதுறை அருகே சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்ததாம். அப்போதுநந்திதாவைப் பார்த்த பலரும் இம்சை அரசனில் நடித்தவர்தானே நீங்கள் என்று கேட்டஆட்டோகிராப் வாங்கினார்களாம்.

எந்தப் படம் கொடுக்காத பிரேக்கை இம்சை அரசன் எனக்கு கொடுத்துள்ளது.சந்தோஷமாக இருக்கிறது. சின்ன ரோலாக இருந்தாலும் ரசிகர்களைக் கவர முடியும்என்ற நம்பிக்கையை இம்சை அரசன் எனக்குக் கொடுத்துள்ளது என குதூகலிக்கிறார்.குதூகலம் தொடரட்டும்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X