twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நவ்யாவுக்கு எச்.ஆர்.ஏ! இதுவரை ஹோட்டலில் தங்கி இருந்த நவ்யா நாயர் இப்போது வாடகைக்கு ஒரு பிளாட்டை எடுத்து விட்டார். அங்கிருந்துதான்ஷூட்டிங்குக்கு போய் வருகிராராம்.மலையாளத்திலிருந்து அலை அலையாக சென்னைக்கு வந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் நடிகைகள் பலருக்கும்சென்னையில் வீடு கிடையாது. ஹோட்டலிலோ அல்லது வாடகை வீட்டிலோதான் இவர்கள் தங்கி நடித்து வருகிறார்கள். ரொம்பஅரிதாக ஒரு சிலர் சொந்த வீடு வைத்திருக்கிறார்கள்.நயனதாரா, நவ்யா நாயர், மீரா ஜாஸ்மின், கோபிகா எல்லாம் ஹோட்டலிலும், வாடகை வீட்டிலும் தங்கித்தான் நடித்துவருகிறார்கள். இவர்களில் நவ்யா நாயர் ரொம்ப காலமாக ஹோட்டலில் தங்கி நடித்துக் கொடுத்து வந்தார். ஆனால் இப்போதுதிடீரென ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துள்ளார்.அவர் திடீரென ஹோட்டலிருந்து வீட்டுக்குத் தாவ முக்கிய காரணம், மனம் கவர்ந்த இயக்குநர்தான் என்று ஒரு ரூமர் உலாவருகிறது. அடிக்கடி ஹோட்டலில் சந்தித்துப் பேசுவது சரியாக இல்லை என்பதால் தான் வீட்டை வாடகைக்குப் பிடித்துக்கொடுத்துள்ளாராம் அந்த இயக்குநர்.இந்த வீட்டுக்கான வாடகையையும் கூட அந்த இயக்குநரே தான் கொடுப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள். நவ்யா வசம்தற்போது தமிழில் உள்ள ஒரே படம் மாயக்கண்ணாடி மட்டுமே. அந்தப் படம் கூட முடியப் போகிறது. அதன் பிறகுமலையாளத்தில் சில படங்களில் அவர் நடிக்கப் போகிறாராம்.மலையாளத்தில் நடிக்கப் போனாலும் கூட அடிக்கடி சென்னைக்கும் வருவாராம். தமிழ்ப் படங்களிலும் நிறைய நடிக்கஆசையாக உள்ளார் நவ்யா. மாயக்கண்ணாடி முடிந்ததும் புதிய தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவிருக்கிறாராம்.இப்படி நடிகைகளுக்கு வீட்டு வாடகைப் படியை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கொடுப்பது சினிமாவில் புதிதில்லைஎன்றாலும் கூட நவ்யா வீடு பார்த்து குடிபோனது கோலிவுட்டில் பல தலைகளுக்கு குழப்பத்தைக் கொடுத்துள்ளதாம்.

    By Staff
    |
    இதுவரை ஹோட்டலில் தங்கி இருந்த நவ்யா நாயர் இப்போது வாடகைக்கு ஒரு பிளாட்டை எடுத்து விட்டார். அங்கிருந்துதான்ஷூட்டிங்குக்கு போய் வருகிராராம்.

    மலையாளத்திலிருந்து அலை அலையாக சென்னைக்கு வந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் நடிகைகள் பலருக்கும்சென்னையில் வீடு கிடையாது. ஹோட்டலிலோ அல்லது வாடகை வீட்டிலோதான் இவர்கள் தங்கி நடித்து வருகிறார்கள். ரொம்பஅரிதாக ஒரு சிலர் சொந்த வீடு வைத்திருக்கிறார்கள்.

    நயனதாரா, நவ்யா நாயர், மீரா ஜாஸ்மின், கோபிகா எல்லாம் ஹோட்டலிலும், வாடகை வீட்டிலும் தங்கித்தான் நடித்துவருகிறார்கள். இவர்களில் நவ்யா நாயர் ரொம்ப காலமாக ஹோட்டலில் தங்கி நடித்துக் கொடுத்து வந்தார். ஆனால் இப்போதுதிடீரென ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துள்ளார்.

    அவர் திடீரென ஹோட்டலிருந்து வீட்டுக்குத் தாவ முக்கிய காரணம், மனம் கவர்ந்த இயக்குநர்தான் என்று ஒரு ரூமர் உலாவருகிறது. அடிக்கடி ஹோட்டலில் சந்தித்துப் பேசுவது சரியாக இல்லை என்பதால் தான் வீட்டை வாடகைக்குப் பிடித்துக்கொடுத்துள்ளாராம் அந்த இயக்குநர்.

    இந்த வீட்டுக்கான வாடகையையும் கூட அந்த இயக்குநரே தான் கொடுப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள். நவ்யா வசம்தற்போது தமிழில் உள்ள ஒரே படம் மாயக்கண்ணாடி மட்டுமே. அந்தப் படம் கூட முடியப் போகிறது. அதன் பிறகுமலையாளத்தில் சில படங்களில் அவர் நடிக்கப் போகிறாராம்.

    மலையாளத்தில் நடிக்கப் போனாலும் கூட அடிக்கடி சென்னைக்கும் வருவாராம். தமிழ்ப் படங்களிலும் நிறைய நடிக்கஆசையாக உள்ளார் நவ்யா. மாயக்கண்ணாடி முடிந்ததும் புதிய தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவிருக்கிறாராம்.

    இப்படி நடிகைகளுக்கு வீட்டு வாடகைப் படியை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கொடுப்பது சினிமாவில் புதிதில்லைஎன்றாலும் கூட நவ்யா வீடு பார்த்து குடிபோனது கோலிவுட்டில் பல தலைகளுக்கு குழப்பத்தைக் கொடுத்துள்ளதாம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X