வாங்கறது இங்கே, கொட்றது அங்கே! தமிழ் சினிமாவில் நடித்து நல்ல துட்டு பார்க்கும் பிற மொழி நடிகைகள் எல்லோருமே ரொம்பவே விவரமானவர்கள்.இந்தியத் திரையுலகிலேயே நடிகர், நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் சினிமாவாக ஆந்திரா இருந்தாலும் கூட,டப்புடன், புகழையும் கொட்டித் தரும் துறையாக தமிழ் சினிமா உள்ளது. இதனால்தான் எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும்இங்கே வந்து பெயரையும், துட்டையும் சேர்த்து அள்ளிச் செல்கிறார்கள்.இவர்களில் சிலர் பரவாயில்லை, நன்றியோடு இருக்கிறார்கள். ஆனால் பலரோ துட்டைப் பார்த்தோமா, சொத்துக்களை வாங்கிக்குவித்தோமா, கல்யாணம் செய்தோமா, செட்டில் ஆனோமா என்று போய்க் கொண்டே இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட நடிகைகள் பட்டியல் ரொம்பப் பெரிசு. அத்தனை பேரைப் பத்தியும் சொல்ல வேண்டுமானால் ஒரு வெப்சைட்பத்தாது. ஒரே ஒரு சாம்பிள் மட்டும் சொல்கிறோம்.மலையாளத்தில் கொஞ்சம் படங்களில் நடித்துள்ள நவ்யா நாயர் தமிழிலும் அவ்வப்போது தலை காட்டுவார். அழகிய தீயே படம்மூலம்தான் நவ்யா நாயர் தமிழுக்கு வந்தார் (இவரால்தான் தங்கர்பச்சான் பெரும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டார்). அந்தப்படம் நன்றாக ஓடியும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்பிப்போனார்.போன அவரைக் கூப்பிட்டு தனது சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் வாய்ப்பு கொடுத்தார் இயக்குநர் தங்கர்பச்சான்.படத்தில் நவ்யாவுக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. அவரும் அருமையாகவே நடித்துள்ளாராம். படம் மொத்தமும் அட்டகாசமாகவந்திருக்கிறதாம். குறிப்பாக பாடல்களும், இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் பிரமாமதாக உள்ளதாககூறுகிறார்கள்.நிற்க! நவ்யா நாயர் இப்போது புதுப் படக் கம்பெனியை ஆரம்பித்துள்ளாராம். இதன் மூலம் சொந்தமாக படங்களைத் தயாரிக்கப்போகிறாராம். ஆனால் கம்பெனிக்காக ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளாராம். அதாவது தாய் மொழியான மலையாளத்தில்மட்டுமே படம் தயாரிப்பது என்பதுதான் அந்த கொள்கை முடிவு.வேறு மொழிப் படங்களைத் தயாரிப்பதில்லை என்று அவர் தீர்மானித்துள்ளார். சரி, படத் தயாரிப்புக்குப் பணம்? தமிழில்இனிமேல் அதிகப் படங்களில் நடிக்கப் போகிறாராம். என்ன ரோல் கிடைத்தாலும் அதில் நடித்து, சம்பாதித்து அந்தப் பணத்தைக்கொண்டு மலையாளத்தில் படம் எடுத்து அசத்தப் போகிறாராம். இதெப்படி இருக்கு?துட்டைச் சுரண்ட மட்டும் தமிழ் சினிமாவா? நவ்யா நாயர் போன்றவர்கைளப் பொருத்தவரை அப்படித்தான் போலும். தனதுகம்பெனி குறித்து நவ்யா நாயர் கூறுகையில், இப்போதைக்கு மலையாளத்தில் மட்டுமே படம் எடுக்கப் போகிறேன். தமிழ்படங்கள் தயாரிப்பது குறித்து இப்பேதைக்கு யோசனை இல்லை. பிறகு பார்க்கலாம் என்கிறார்.என்னத்தச் சொல்ல!

By Staff

தமிழ் சினிமாவில் நடித்து நல்ல துட்டு பார்க்கும் பிற மொழி நடிகைகள் எல்லோருமே ரொம்பவே விவரமானவர்கள்.

இந்தியத் திரையுலகிலேயே நடிகர், நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் சினிமாவாக ஆந்திரா இருந்தாலும் கூட,டப்புடன், புகழையும் கொட்டித் தரும் துறையாக தமிழ் சினிமா உள்ளது. இதனால்தான் எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும்இங்கே வந்து பெயரையும், துட்டையும் சேர்த்து அள்ளிச் செல்கிறார்கள்.

இவர்களில் சிலர் பரவாயில்லை, நன்றியோடு இருக்கிறார்கள். ஆனால் பலரோ துட்டைப் பார்த்தோமா, சொத்துக்களை வாங்கிக்குவித்தோமா, கல்யாணம் செய்தோமா, செட்டில் ஆனோமா என்று போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நடிகைகள் பட்டியல் ரொம்பப் பெரிசு. அத்தனை பேரைப் பத்தியும் சொல்ல வேண்டுமானால் ஒரு வெப்சைட்பத்தாது. ஒரே ஒரு சாம்பிள் மட்டும் சொல்கிறோம்.


மலையாளத்தில் கொஞ்சம் படங்களில் நடித்துள்ள நவ்யா நாயர் தமிழிலும் அவ்வப்போது தலை காட்டுவார். அழகிய தீயே படம்மூலம்தான் நவ்யா நாயர் தமிழுக்கு வந்தார் (இவரால்தான் தங்கர்பச்சான் பெரும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டார்). அந்தப்படம் நன்றாக ஓடியும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்பிப்போனார்.

போன அவரைக் கூப்பிட்டு தனது சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் வாய்ப்பு கொடுத்தார் இயக்குநர் தங்கர்பச்சான்.படத்தில் நவ்யாவுக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. அவரும் அருமையாகவே நடித்துள்ளாராம். படம் மொத்தமும் அட்டகாசமாகவந்திருக்கிறதாம். குறிப்பாக பாடல்களும், இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் பிரமாமதாக உள்ளதாககூறுகிறார்கள்.

நிற்க! நவ்யா நாயர் இப்போது புதுப் படக் கம்பெனியை ஆரம்பித்துள்ளாராம். இதன் மூலம் சொந்தமாக படங்களைத் தயாரிக்கப்போகிறாராம். ஆனால் கம்பெனிக்காக ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளாராம். அதாவது தாய் மொழியான மலையாளத்தில்மட்டுமே படம் தயாரிப்பது என்பதுதான் அந்த கொள்கை முடிவு.


வேறு மொழிப் படங்களைத் தயாரிப்பதில்லை என்று அவர் தீர்மானித்துள்ளார். சரி, படத் தயாரிப்புக்குப் பணம்? தமிழில்இனிமேல் அதிகப் படங்களில் நடிக்கப் போகிறாராம். என்ன ரோல் கிடைத்தாலும் அதில் நடித்து, சம்பாதித்து அந்தப் பணத்தைக்கொண்டு மலையாளத்தில் படம் எடுத்து அசத்தப் போகிறாராம். இதெப்படி இருக்கு?

துட்டைச் சுரண்ட மட்டும் தமிழ் சினிமாவா? நவ்யா நாயர் போன்றவர்கைளப் பொருத்தவரை அப்படித்தான் போலும். தனதுகம்பெனி குறித்து நவ்யா நாயர் கூறுகையில், இப்போதைக்கு மலையாளத்தில் மட்டுமே படம் எடுக்கப் போகிறேன். தமிழ்படங்கள் தயாரிப்பது குறித்து இப்பேதைக்கு யோசனை இல்லை. பிறகு பார்க்கலாம் என்கிறார்.

என்னத்தச் சொல்ல!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X