twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டயானா மரியம் கொரியன்? தண்ணீர் கேட்கும் ஏ பெண்ணே தாகம் தணிந்ததா.. என்று கிணற்றடி மறைவில் அப்டி போய் விட்டு அப்டிக்கா எழுந்து வாயைத்தடவியபடி கமல் கேட்க, அம்பிகா நாணிக்கோண, அந்த சகலகலாவல்லவன் பாடலை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விடமுடியாது.அந்த பாப்புலர் நிலா காயுத, நேரம் நல்ல நேரம் பாடல் மீண்டும் அரங்கேறுகிறது ரீ-மிக்ஸாக.தமிழ் சினிமாவில் இப்போது பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் காலம். துள்ளுவதோ இளமை, தொட்டால் பூ மலரும், தங்கப்பதகத்தத்தின் மேல என புகழ் பெற்ற பல பாடல்கள் உல்டா செய்யப்பட்டு மீண்டும் பாப்புலர் ஆகியுள்ளன. அந்த வரிசையில், இப்போது நிலா மீண்டும் காயப் போகிறது.கமல்ஹாசன் மற்றும் இளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்றான நிலா காயுதுவை கள்வனின் காதலிக்காக வில்லங்கஎஸ்.ஜே.சூர்யா, அட்டாக் நயனதாரா ஆடிப் பாடும் வகையில் ரீ மிக்ஸ் செய்திருக்கிறார்கள்.இப் பாடலுக்காக கிணற்றடிப் பக்கமாய் ஓடி விளையாடி சூடாக நடித்திருக்கிறார்கள் சூர்யாவும், நயனதாராவும். இந்த மூன்காய்ச்சல் பாட்டு மீண்டும் ரசிகர்களை காய வைக்குமாம்.சூர்யாவின் ரசனை மற்றும் இந்தக் கால இளசுகளின் டேஸ்ட்டுக்கேற்ப பாடலுக்கு புது மெருகு கொடுத்துள்ளதாக இயக்குனர்தமிழ்வாணன் கூறுகிறார்.இந்தப் பாட்டிலும் கிணத்து மேடு தவிர, கயித்துக் கட்டில், வாய் துடைப்பு, நாணிக் கோணல் எல்லாம் கீதா? என்று கேட்டால்தமிழ்வாணன் அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார்.அம்பிகாவுக்கு ஈக்வலாக நயனதாரா, வெட்கப்பட்டிருப்பாரா என்று தெரியாது, ஆனால் நிச்சயம் சூர்யா, சூப்பராகஅசத்தியிருப்பார் என இப்போதே கூறி விடலாம்.ரசிகர்கள் இதை ரொம்பவே ரசிப்பார்கள், அவ்வளவு புதுமையாக இதை ஷூட் செய்துள்ளோம் என்று கூறுகிறார் தமிழ்வாணன்.ஆ..ஆ..ஆ..ஆ..ஆஆஆஆஆஆபிட்டீஸ் 1:விஜய் நடிக்க சூர்யா இயக்கவிருந்த புலி டிராப் ஆகிவிட்டதால், அடுத்ததாக இசை என்ற படத்தில் நடிக்கப் போகிறாராம் சூர்யா.பிட்டீஸ் 2:நயனதாராவின் இயற் பெயர் என்ன?டயானா மரியம் கொரிய. (இப்படித்தான் சொல்கிறது அவர் வைத்திருக்கும் டிரைவிங் லைசென்ஸ்). சொந்த பெயரிலேயேலைசென்ஸை எடுத்துள்ள நயன்ஸ், காரை படு வேகமாக ஓட்டுவதில் கில்லாடியாகிவிட்டார்.

    By Staff
    |

    தண்ணீர் கேட்கும் ஏ பெண்ணே தாகம் தணிந்ததா.. என்று கிணற்றடி மறைவில் அப்டி போய் விட்டு அப்டிக்கா எழுந்து வாயைத்தடவியபடி கமல் கேட்க, அம்பிகா நாணிக்கோண, அந்த சகலகலாவல்லவன் பாடலை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விடமுடியாது.

    அந்த பாப்புலர் நிலா காயுத, நேரம் நல்ல நேரம் பாடல் மீண்டும் அரங்கேறுகிறது ரீ-மிக்ஸாக.

    தமிழ் சினிமாவில் இப்போது பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் காலம். துள்ளுவதோ இளமை, தொட்டால் பூ மலரும், தங்கப்பதகத்தத்தின் மேல என புகழ் பெற்ற பல பாடல்கள் உல்டா செய்யப்பட்டு மீண்டும் பாப்புலர் ஆகியுள்ளன.

    அந்த வரிசையில், இப்போது நிலா மீண்டும் காயப் போகிறது.


    கமல்ஹாசன் மற்றும் இளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்றான நிலா காயுதுவை கள்வனின் காதலிக்காக வில்லங்கஎஸ்.ஜே.சூர்யா, அட்டாக் நயனதாரா ஆடிப் பாடும் வகையில் ரீ மிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

    இப் பாடலுக்காக கிணற்றடிப் பக்கமாய் ஓடி விளையாடி சூடாக நடித்திருக்கிறார்கள் சூர்யாவும், நயனதாராவும். இந்த மூன்காய்ச்சல் பாட்டு மீண்டும் ரசிகர்களை காய வைக்குமாம்.

    சூர்யாவின் ரசனை மற்றும் இந்தக் கால இளசுகளின் டேஸ்ட்டுக்கேற்ப பாடலுக்கு புது மெருகு கொடுத்துள்ளதாக இயக்குனர்தமிழ்வாணன் கூறுகிறார்.


    இந்தப் பாட்டிலும் கிணத்து மேடு தவிர, கயித்துக் கட்டில், வாய் துடைப்பு, நாணிக் கோணல் எல்லாம் கீதா? என்று கேட்டால்தமிழ்வாணன் அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார்.

    அம்பிகாவுக்கு ஈக்வலாக நயனதாரா, வெட்கப்பட்டிருப்பாரா என்று தெரியாது, ஆனால் நிச்சயம் சூர்யா, சூப்பராகஅசத்தியிருப்பார் என இப்போதே கூறி விடலாம்.

    ரசிகர்கள் இதை ரொம்பவே ரசிப்பார்கள், அவ்வளவு புதுமையாக இதை ஷூட் செய்துள்ளோம் என்று கூறுகிறார் தமிழ்வாணன்.

    ஆ..ஆ..ஆ..ஆ..ஆஆஆஆஆஆ

    பிட்டீஸ் 1:

    விஜய் நடிக்க சூர்யா இயக்கவிருந்த புலி டிராப் ஆகிவிட்டதால், அடுத்ததாக இசை என்ற படத்தில் நடிக்கப் போகிறாராம் சூர்யா.


    பிட்டீஸ் 2:

    நயனதாராவின் இயற் பெயர் என்ன?

    டயானா மரியம் கொரிய. (இப்படித்தான் சொல்கிறது அவர் வைத்திருக்கும் டிரைவிங் லைசென்ஸ்). சொந்த பெயரிலேயேலைசென்ஸை எடுத்துள்ள நயன்ஸ், காரை படு வேகமாக ஓட்டுவதில் கில்லாடியாகிவிட்டார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X