கட்டம் கட்டப்பட்ட நயன் நயனதாராவை தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட கட்டம் கட்டி ஒதுக்கியேவிட்டார்களாம். கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாக் இதுதான்.ஐயாவில் அறிமுகமாகியபோது நயனதாராவை அத்தனை பேரும் ஆச்சரியமாகபார்த்தார்கள். சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தபோது உச்சத்திற்குப்போவார் என்று கட்டியம் கூறினார்கள்.ஆனால் நயனதாராவின் பாதை திடீரென மாறியது. கிளாமருக்குத் தாவினார். குத்துப்பாட்டில் கலக்கினார். தொடர்ந்து குண்டக்க மண்டக்க ரோல்களை செலக்ட் செய்துசீக்கிரமே பிசியான நடிகை ஆனார். உயரத்திற்குப் போகப் போக சர்ச்சைகளும்அவரைத் தொடர்ந்து ஓடோடி வந்தன.சிம்புவுடன் காதல் என்ற செய்தியால் நயனதாராவின் மார்க்கெட் ஆட்டம் காணஆரம்பித்தது. அவரைத் தேடி வந்த தயாரிப்பாளர்கள் குறையத் தொடங்கினார்.எப்போதும் சிம்புவுடன் ரவுண்ட் அடிக்க ஆரம்பித்ததால் அவரது கால்ஷீட் கேட்டுரவுண்ட் அடித்தவர்கள் குறையத் தொடங்கினர்.தமிழில் சுத்தமாக வாய்ப்புகள் இல்லை என்ற நிலை உருவானபோதுதான் சுதாரித்தார்நயனா. ஆனால் அதற்குள் காலம் கடந்து போயிருந்தது. இப்போது நயனதாராவின்கையில் வல்லவனைத் தவிர புதுப் படம் எதுவும் இல்லையாம்.தெலுங்கிலும் சிம்பு ஃபேக்டர் நயனாவின் பெயருக்கு டேமேஜை ஏற்படுத்திவிட்டதாம்.இதனால் அம்மணி கையில் 2 படங்கள் மட்டுமே தெலுங்கில் உள்ளதாம். புதுசாகஎதுவும் வரவில்லையாம். அச்சச்சோ மோசம் போயிரும் போலிருக்குமே என்றுபயந்து போன நயனதாரா, நான் சிம்புவைக் காதலிக்கவில்லை, இரண்டு பேரும்நண்பர்கள்தான் என்று உட்டாலங்கடி பேட்டி கொடுத்துப் பார்த்தார்.ஆனால் அதற்கும் பலன் இல்லை. இதனால் என்ன செய்வது என்று யோசித்துப் பார்த்தநயனதாரா மீண்டும் தாயகத்திற்கேத் திரும்ப முடிவு செய்து மலையாளத்திற்கு நூல்விட்டுப் பார்த்தார். அவரது நல்ல நேரம் அங்கு ஒரு படம் கிடைத்துவிட்டது.ஆனால், இப்போது அதிலும் ஒரு குழப்பம். அந்தப் படத்தில் நயனதாரா இருக்கிறாரா,இல்லையா என்பதுதான் அந்த பெரும் குழப்பம்.முதலில் நடிப்பதாக ஒத்துக் கொண்ட நயனதாரா இப்போது நடிப்பதா, வேண்டாமாஎன்று யோசிக்கிறாராம். காரணம் அதில் ஏற்கனவே கார்த்திகா, கோபிகா என இரண்டுஹீரோயின்கள் உள்ளதால்.கூட்டத்தோடு கும்பலாகப் போனால் தேற முடியாதே என்ற யோசனைதான்அப்படத்தில் நடிக்க நயனதாரவுக்கு தயக்கத்தைக் கொடுத்துள்ளதாம்.இப்படியாக ஆட்டமோ ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது நயனதாராவின் சினிமாமார்க்கெட்.
ஐயாவில் அறிமுகமாகியபோது நயனதாராவை அத்தனை பேரும் ஆச்சரியமாகபார்த்தார்கள். சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தபோது உச்சத்திற்குப்போவார் என்று கட்டியம் கூறினார்கள்.
ஆனால் நயனதாராவின் பாதை திடீரென மாறியது. கிளாமருக்குத் தாவினார். குத்துப்பாட்டில் கலக்கினார். தொடர்ந்து குண்டக்க மண்டக்க ரோல்களை செலக்ட் செய்துசீக்கிரமே பிசியான நடிகை ஆனார். உயரத்திற்குப் போகப் போக சர்ச்சைகளும்அவரைத் தொடர்ந்து ஓடோடி வந்தன.
தமிழில் சுத்தமாக வாய்ப்புகள் இல்லை என்ற நிலை உருவானபோதுதான் சுதாரித்தார்நயனா. ஆனால் அதற்குள் காலம் கடந்து போயிருந்தது. இப்போது நயனதாராவின்கையில் வல்லவனைத் தவிர புதுப் படம் எதுவும் இல்லையாம்.
தெலுங்கிலும் சிம்பு ஃபேக்டர் நயனாவின் பெயருக்கு டேமேஜை ஏற்படுத்திவிட்டதாம்.
ஆனால் அதற்கும் பலன் இல்லை. இதனால் என்ன செய்வது என்று யோசித்துப் பார்த்தநயனதாரா மீண்டும் தாயகத்திற்கேத் திரும்ப முடிவு செய்து மலையாளத்திற்கு நூல்விட்டுப் பார்த்தார். அவரது நல்ல நேரம் அங்கு ஒரு படம் கிடைத்துவிட்டது.
ஆனால், இப்போது அதிலும் ஒரு குழப்பம். அந்தப் படத்தில் நயனதாரா இருக்கிறாரா,இல்லையா என்பதுதான் அந்த பெரும் குழப்பம்.
முதலில் நடிப்பதாக ஒத்துக் கொண்ட நயனதாரா இப்போது நடிப்பதா, வேண்டாமாஎன்று யோசிக்கிறாராம். காரணம் அதில் ஏற்கனவே கார்த்திகா, கோபிகா என இரண்டுஹீரோயின்கள் உள்ளதால்.
இப்படியாக ஆட்டமோ ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது நயனதாராவின் சினிமாமார்க்கெட்.


Click it and Unblock the Notifications