Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வல்லவன் முத்தத்தில் அருவருப்பில்லை- நயன்தாரா வல்லவனின் முத்தக்காட்சி ஒரு புறம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க அதில் நடித்த நயன்தாரா என்ன சொல்கிறார்தெரியுமா? அந்த முத்தக்காட்சியில் அவருக்கு அருவருப்பே ஏற்படவில்லையாம்.சிம்புவின் படம் என்றாலே இப்போது ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. மன்மதனுக்குப் பிறகு அவரதுஅடுத்த படமான வல்லவன் படப்பிடிப்பு தொடங்குவதற்குள்ளாகவே பரபரப்பு வேகமாக வளர ஆரம்பித்து விட்டது.வல்லவனுக்காக நயன்தாரா உதட்டை சிம்பு கடிப்பது போல சமீபத்தில் சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.இந்த போஸ்டர் சென்னை நகரையே கலக்கி விட்டது. மிகவும் ஆபாசமாக இருப்பதாக புகார் மேல் புகார் போகவே உடனடியாகஅந்த போஸ்டர்களை போலீஸாரே அகற்றினார்கள்.இந்த போஸ்டர் விவகாரம் நடிகர் சிம்புவை மிகவும் உஷ்ணப்படுத்தி விட்டது. அந்த சூட்டோடு சூடாக அவர் என்ன சொல்கிறார்என்பதை கேட்போமா?காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வது காலம் காலமாக நடந்து வரும் விஷயம் தான். காலம் மாற மாற காதலின் தன்மையும் மாறிவருகிறது. ஒரு காதல் ஜோடியின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் தான் வல்லவன் படத் தொடக்க விழாவுக்காக அப்படிஒரு காட்சியை அமைத்தேன்.கதைக்கு தேவையான போது கமல் உட்பட பல கதாநாயகர்களும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுள்ளார்கள். அதைமனதில் வைத்துத் தான் நயன்தாராவிடம் அனுமதி பெற்று அவரது உதட்டை கடிப்பது போன்ற முத்தக் காட்சியை எடுத்தேன். அதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.இந்த தலைமுறை முன்னால் செல்லத் துடிக்கும் ஆர்வம் உள்ள தலைமுறை. அவர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்பதைமனதில் வைத்து தான் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறேன். உலகில் நடப்தை தான் நான் யோசிக்கிறேன். இல்லாததை நான் நினைக்கவில்லை. காலம் மாறி விட்டது. காதலர் தினத்தைஇப்போது மிகவும் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.எல்லோருடைய மனதில் இருக்கும் செக்ஸ் உணர்வு தான் என் படத்திலும் இருக்கும். அது முகத்தை சுளிக்கும் அருவருப்பானவிதத்தில் இருக்காது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தொடக்க விழாவுக்காக எடுக்கப்பட்டு போஸ்டரில் வந்த அந்தகாட்சி படத்தில் நிச்சயம் இருக்காது (தமிழ் ரசிகர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்).எனக்கென்று தனி பாணி இருக்கிறது. போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்புக்காக நான் பயப்பட மாட்டேன். என் வளர்ச்சியை கண்டுபொறாமைப்படுகிறவர்கள் தான் இதை பெரிது படுத்துகிறார்கள். இந்த போஸ்டர் யாருடைய மனதையாவதுபுண்படுத்தியிருந்தால் அதற்கா மன்னிப்பு கேட்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார் சிம்பு மிகவும் தெளிவாக.சரி, இது குறித்து நம்ம நயன்தாரா என்ன சொல்கிறார் தெரியுமா? ஒரு நடிகை என்ற முறையில் நடிப்புக்காக கொடுத்த போஸ்தான் அது. சில நிமிடங்களில் எடுக்கப்பட்ட அந்த காட்சியில் அருவருப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை (அதுக்காக நாள்பூராவுமா ஒரு முத்தக் காட்சியை எடுப்பார்கள்).எடுக்கப்பட்ட காட்சிகளில் எதை போஸ்டரில் போடவேண்டும் என்பதை டைரக்டரும், தயாரிப்பாளரும் தான் முடிவுசெய்வார்கள். இதில் என் தவறு எதுவும் இல்லை என்று நழுவினார் நயன்தாரா.ஆசை காட்டி ரசிகர்களை ஏமாத்திடாதீங்கப்பா!
வல்லவனின் முத்தக்காட்சி ஒரு புறம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க அதில் நடித்த நயன்தாரா என்ன சொல்கிறார்தெரியுமா? அந்த முத்தக்காட்சியில் அவருக்கு அருவருப்பே ஏற்படவில்லையாம்.
சிம்புவின் படம் என்றாலே இப்போது ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. மன்மதனுக்குப் பிறகு அவரதுஅடுத்த படமான வல்லவன் படப்பிடிப்பு தொடங்குவதற்குள்ளாகவே பரபரப்பு வேகமாக வளர ஆரம்பித்து விட்டது.
வல்லவனுக்காக நயன்தாரா உதட்டை சிம்பு கடிப்பது போல சமீபத்தில் சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.இந்த போஸ்டர் சென்னை நகரையே கலக்கி விட்டது. மிகவும் ஆபாசமாக இருப்பதாக புகார் மேல் புகார் போகவே உடனடியாகஅந்த போஸ்டர்களை போலீஸாரே அகற்றினார்கள்.
இந்த போஸ்டர் விவகாரம் நடிகர் சிம்புவை மிகவும் உஷ்ணப்படுத்தி விட்டது. அந்த சூட்டோடு சூடாக அவர் என்ன சொல்கிறார்என்பதை கேட்போமா?
காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வது காலம் காலமாக நடந்து வரும் விஷயம் தான். காலம் மாற மாற காதலின் தன்மையும் மாறிவருகிறது. ஒரு காதல் ஜோடியின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் தான் வல்லவன் படத் தொடக்க விழாவுக்காக அப்படிஒரு காட்சியை அமைத்தேன்.
கதைக்கு தேவையான போது கமல் உட்பட பல கதாநாயகர்களும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுள்ளார்கள். அதைமனதில் வைத்துத் தான் நயன்தாராவிடம் அனுமதி பெற்று அவரது உதட்டை கடிப்பது போன்ற முத்தக் காட்சியை எடுத்தேன். அதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
இந்த தலைமுறை முன்னால் செல்லத் துடிக்கும் ஆர்வம் உள்ள தலைமுறை. அவர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்பதைமனதில் வைத்து தான் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறேன்.
உலகில் நடப்தை தான் நான் யோசிக்கிறேன். இல்லாததை நான் நினைக்கவில்லை. காலம் மாறி விட்டது. காதலர் தினத்தைஇப்போது மிகவும் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லோருடைய மனதில் இருக்கும் செக்ஸ் உணர்வு தான் என் படத்திலும் இருக்கும். அது முகத்தை சுளிக்கும் அருவருப்பானவிதத்தில் இருக்காது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தொடக்க விழாவுக்காக எடுக்கப்பட்டு போஸ்டரில் வந்த அந்தகாட்சி படத்தில் நிச்சயம் இருக்காது (தமிழ் ரசிகர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்).
எனக்கென்று தனி பாணி இருக்கிறது. போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்புக்காக நான் பயப்பட மாட்டேன். என் வளர்ச்சியை கண்டுபொறாமைப்படுகிறவர்கள் தான் இதை பெரிது படுத்துகிறார்கள். இந்த போஸ்டர் யாருடைய மனதையாவதுபுண்படுத்தியிருந்தால் அதற்கா மன்னிப்பு கேட்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார் சிம்பு மிகவும் தெளிவாக.
சரி, இது குறித்து நம்ம நயன்தாரா என்ன சொல்கிறார் தெரியுமா? ஒரு நடிகை என்ற முறையில் நடிப்புக்காக கொடுத்த போஸ்தான் அது. சில நிமிடங்களில் எடுக்கப்பட்ட அந்த காட்சியில் அருவருப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை (அதுக்காக நாள்பூராவுமா ஒரு முத்தக் காட்சியை எடுப்பார்கள்).
எடுக்கப்பட்ட காட்சிகளில் எதை போஸ்டரில் போடவேண்டும் என்பதை டைரக்டரும், தயாரிப்பாளரும் தான் முடிவுசெய்வார்கள். இதில் என் தவறு எதுவும் இல்லை என்று நழுவினார் நயன்தாரா.
ஆசை காட்டி ரசிகர்களை ஏமாத்திடாதீங்கப்பா!