Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜாகையை மாற்றிய நயனதாரா சென்னையில் ஆண்களும் பெண்களும் கட்டி, உருண்டு உற்சாக நடனம் ஆடிய அந்த ஸ்டார் ஹோட்டலில் தான் நயனதாராதங்கியிருந்தாராம். அந்த கச்சா முச்சா விவகாரத்துக்குப் பின் அங்கிருந்து ஜாகையை மாற்றிவிட்டாராம் அம்மணி.தயாரிப்பாளர்களின் செலவில் அந்த ஸ்டார் ஹோட்டலில் அதிக செலவு மிக்க சூப்பர் டீலக்ஸ் ரூமில் தங்கியிருந்தார் நயன்.ஆனால், ஆபாச ஆட்டம், போலீஸ் கேஸ் என்று ஆகிப் போனதால், எதற்கு வம்பு என்று நயனதாராவே இடம் மாற்றிக் கொண்டுபோய்விட்டாராம்.இப்போது தி.நகரில் ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டலில் தான் தங்கியிருக்கிறாராம்.கையில் கை கொள்ளாத அளவுக்கு பல படங்களுடன் இருக்கும் நயனதாராவால் விஜய், அஜீத்துக்குக் கூட கால்ஷீட் தர முடியாதஅளவுக்கு டேட்ஸ் சிக்கலாம்.பரமசிவன் படத்திற்காக முதலில் நயனைத்தான் நாடியுள்ளது அஜீத் தரப்பு. ஆனால் கால்ஷீட் இல்லாததால், லைலாவைப் போட்டுவிட்டனர்.அதேபோல திருப்பதியிலும் நயனதாராவைக் கேட்டார்களாம். அதற்கும் வாய்ப்பு இல்லாததால், சதாவை புக் செய்தார்களாம்.அதே போல இப்போது விஜய் நடிக்கும் புலி படத்தில் நடிக்க நயனதாராவை ஒப்பந்தம் செய்யப் போனார்களாம். அவர்களிடம்டேட்ஸ் இல்லையே என்று கைரிவித்துவிட்டாராம் நயன்ஸ்.ஆனால், எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து கொண்டு கால்ஷீட் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். வேண்டுமானால்சம்பளத்தைக் கூட சில லகரங்கள் கூட்டுவார்களாம்.இரவு பகலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஓடி ஓடி நடித்துக் கொண்டிருக்கும் நயனதாராவை சமீபத்தில் இப்படித்தான்நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக புக் செய்ய ஒரு தயாரிப்பாளர் வந்தாராம்.கால்ஷீட் இல்லை என நயனதாரா கூற, சம்பளத்தை ரூ. 15 லட்சம் உயர்த்தி ஒரே பேமண்டாக ரூ. 40 லட்சத்துக்கு செக் எழுதித்தந்தாராம் அந்தத் தயாரிப்பாளர். அப்புறம் என்ன?, அட்ஜஸ்ட் செய்து கொண்டு டேட்ஸ் கொடுத்துவிட்டாராம் நயனதாரா.விரைவில் தெலுங்கில் இவரது சம்பளம் அரை கோடியைத் தாண்டிவிடுமாம். அதே போல தமிழிலும் ஜோதிகா, த்ரிஷாவுக்குஇணையாக அரையைத் தொட்டுவிடுவார் என்கிறார்கள்.கஜினியை முடித்து விட்ட நயன்தாரா தற்போது வல்லவன், கள்வனின் காதலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்துசரத்குமாருக்கு ஜோடியாக தலைமகன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதவிர தெலுங்கில் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ்ஜோடியாக தலா ஒரு படத்தில் திறமை காட்டி வருகிறார்.
சென்னையில் ஆண்களும் பெண்களும் கட்டி, உருண்டு உற்சாக நடனம் ஆடிய அந்த ஸ்டார் ஹோட்டலில் தான் நயனதாராதங்கியிருந்தாராம். அந்த கச்சா முச்சா விவகாரத்துக்குப் பின் அங்கிருந்து ஜாகையை மாற்றிவிட்டாராம் அம்மணி.
தயாரிப்பாளர்களின் செலவில் அந்த ஸ்டார் ஹோட்டலில் அதிக செலவு மிக்க சூப்பர் டீலக்ஸ் ரூமில் தங்கியிருந்தார் நயன்.ஆனால், ஆபாச ஆட்டம், போலீஸ் கேஸ் என்று ஆகிப் போனதால், எதற்கு வம்பு என்று நயனதாராவே இடம் மாற்றிக் கொண்டுபோய்விட்டாராம்.
இப்போது தி.நகரில் ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டலில் தான் தங்கியிருக்கிறாராம்.
கையில் கை கொள்ளாத அளவுக்கு பல படங்களுடன் இருக்கும் நயனதாராவால் விஜய், அஜீத்துக்குக் கூட கால்ஷீட் தர முடியாதஅளவுக்கு டேட்ஸ் சிக்கலாம்.
பரமசிவன் படத்திற்காக முதலில் நயனைத்தான் நாடியுள்ளது அஜீத் தரப்பு. ஆனால் கால்ஷீட் இல்லாததால், லைலாவைப் போட்டுவிட்டனர்.
அதேபோல திருப்பதியிலும் நயனதாராவைக் கேட்டார்களாம். அதற்கும் வாய்ப்பு இல்லாததால், சதாவை புக் செய்தார்களாம்.
அதே போல இப்போது விஜய் நடிக்கும் புலி படத்தில் நடிக்க நயனதாராவை ஒப்பந்தம் செய்யப் போனார்களாம். அவர்களிடம்டேட்ஸ் இல்லையே என்று கைரிவித்துவிட்டாராம் நயன்ஸ்.
ஆனால், எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து கொண்டு கால்ஷீட் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். வேண்டுமானால்சம்பளத்தைக் கூட சில லகரங்கள் கூட்டுவார்களாம்.
இரவு பகலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஓடி ஓடி நடித்துக் கொண்டிருக்கும் நயனதாராவை சமீபத்தில் இப்படித்தான்நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக புக் செய்ய ஒரு தயாரிப்பாளர் வந்தாராம்.
கால்ஷீட் இல்லை என நயனதாரா கூற, சம்பளத்தை ரூ. 15 லட்சம் உயர்த்தி ஒரே பேமண்டாக ரூ. 40 லட்சத்துக்கு செக் எழுதித்தந்தாராம் அந்தத் தயாரிப்பாளர். அப்புறம் என்ன?, அட்ஜஸ்ட் செய்து கொண்டு டேட்ஸ் கொடுத்துவிட்டாராம் நயனதாரா.
விரைவில் தெலுங்கில் இவரது சம்பளம் அரை கோடியைத் தாண்டிவிடுமாம். அதே போல தமிழிலும் ஜோதிகா, த்ரிஷாவுக்குஇணையாக அரையைத் தொட்டுவிடுவார் என்கிறார்கள்.
கஜினியை முடித்து விட்ட நயன்தாரா தற்போது வல்லவன், கள்வனின் காதலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்துசரத்குமாருக்கு ஜோடியாக தலைமகன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதவிர தெலுங்கில் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ்ஜோடியாக தலா ஒரு படத்தில் திறமை காட்டி வருகிறார்.