Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நயன்தாரா ரொம்ப ஒழுக்கமானவர்!- சான்றிதழ் தரும் இயக்குநர்
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த நயன்தாரா மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. கவர்ச்சியாக நடிக்க மறுக்கிறார். படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார். இயக்குனர்கள் சீன்களை எடுக்கும் போது பிரபுதேவாவுடன் டெலிபோனில் பேசிக்கொண்டே இருக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின.
இதனால் புதுப்படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதாக கூறப்பட்டது.
இது குறித்து பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
நயன்தாரா படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார். ஓயாமல் போனில் பேசுகிறார் என்பதெல்லாம் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள். நயன்தாரா ரொம்ப ஒழுக்கமானவர். படப்பிடிப்புகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே மேக்கப்புடன் வருவார். படப்பிடிப்பு நடக்கும் போது அவர் போனில் பேசுவது இல்லை. எங்களுடன் கதை விவாதத்தில் கூட கலந்து கொண்டார். மிகுந்த ஒத்துழைப்பு தரும் நடிகை அவர்.
பாஸ் என்கிற பாஸ்கரன் நடத்தர குடும்பத்தை பற்றிய கதை. யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா நடிப்பை பார்த்து இப்படத்துக்கு தேர்ந்தெடுத்தேன்..."என்றார்.