மிஸ் செளத் இந்தியா நீலிமா நாயுடுவிபச்சார வழக்கில் கைது

By Staff

சென்னை:தென் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலிமா நாயுடுவும், டிவி நடிகை மீனாட்சியும் விபச்சாரத்தில்ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

சென்னை விபச்சாரத் தடுப்பு பிரிவுக்கு சில தினங்களுக்கு முன் அண்ணா நகரில் ஒரு அபார்ட்மெண்டில்நடிகைகள் சிலர் விபச்சாரத்தில்ல ஈடுபட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி கமிஷ்னர் சங்கரபாண்டியன் தலைமையில் போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாய்நுழைந்தனர்.

அப்போது ஒரு அறையில் ஹைதராபாத்தை சேர்ந்த நீலிமா நாயுடு என்ற மாடல் அழகி ஒரு வாலிபருடன்நிர்வாணமாகக் கிடந்தார். இவர் 2006ம் ஆண்டுக்கான தென்னிந்தியாவின் சிறந்த அழகிப் பட்டத்தை பெற்றவர்என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு அறையில் டிவி நடிகையான மீனாட்சி ஒரு ஆணுடன் உருண்டு கொண்டிருந்தார். இவர் பல டிவிவிளம்பரங்களில் நடித்தவர் ஆவார்.

நீலிமாவுடன் உல்லாசமாக இருந்தவர் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாவார். மீனாட்சியுடன்இருந்தவர் தனியார் தொலைக்காட்சியின் ஊழியர்.

இவர்களோடு புரோக்கர் சரவணன் என்பவரும் மாட்டினார்.

நீலிமாவிடம் போலீசார் விசாரித்தபோது,

நான் விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். ஹைதராபத்தில் மாடலிங் செய்து வந்தேன். அதில் தான் சரவணன்அறிமுகமானார். வாரத்துக்கு ஒரு முறை சில தொழிலதிபர்களை சரவணன் அழைத்து வந்து என்னுடன் இருக்கச்செய்வார்.

அப்படித் தான் சினிமா தயாரிப்பு நிர்வாகியும் பழக்கமானார். சென்னைக்கு வந்தால் சினிமாவில் சான்ஸ் வாங்கித்தருகிறேன் என்றார். இதற்காக மேக்-அப் டெஸ்ட் எடுக்க அண்ணா நகர் பிளாட்டுக்கு வரச் சொன்னார்.

நான் இங்கு வந்த சிறிது நேரத்தில் டிவி நடிகை மீனாட்சியும் வந்தார். அப்போது தயாரிப்பு நிர்வாகியையும்தனியார் தொலைக்காட்சி ஊழியரையும் சரவணன் அழைத்து வந்தார்.

மீனாட்சியை தொலைக்காட்சி ஊழியர் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டார்.

என்னை படத் தயாரிப்பு நிர்வாகி அறைக்குள் அழைத்துச் சென்று சிறிய ஆடைகளை தந்து அணியச் சொல்லிமேக்-அப் டெஸ்ட் எடுத்தார். ஒரு கட்டத்தில் நெருக்கமாக நடிப்பது எப்படி என்று ஒத்திகை பார்ப்பதாக சொல்லிஎன்னை கட்டி அணைத்தார்.

அவர் பிடியில் என்னை இழந்தேன். அப்புறம் தான் என்னை சரவணன் விபச்சாரத்தில் தள்ளிவிட்டது தெரிந்தது.இதையடுத்து தப்பிச் செல்ல முயன்றேன். ஆனாலும் என்னை பலவந்தமாக அவர் படுக்கையில் தள்ளிவிட்டார்என்றார் நீலிமா.

ஆனால், சரவணனும் போலீசாரிடம் கூறுகையிஸ், சினிமா சான்ஸ் கிடைக்கும் என்று தயாரிப்பு நிர்வாகியோடுநீலிமா விரும்பித் தான் படுக்கையை பகிர்ந்து கொண்டார் என்றார்.

இதையடுத்து நீலிமா நாயுடுவும் மீனாட்சியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X