நிலாவின் கொலஸ்ட்ரால்! நிலாவுக்கு குசும்பு ஜாஸ்தியாகி விட்டது. இல்லாவிட்டால் தனக்கு அடையாளம்கொடுத்த தமிழ் ரசிகர்கள் மீது தனது துவேஷத்தைக் காட்டுவாரா? அம்மாவைப் போலவே மனைவி வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்தபிள்ளையாரைப்போல, தனது அன்பே ஆருயிரே படத்தில் சிம்ரன் நடிக்க மறுத்ததால்,அவரைப் போலவே ஒரு ஹீரோயின் வேண்டும் என்று வேண்டி, விரும்பி,டெல்லிக்குப் போய் அங்கிருந்து பஞ்சாபுக்குப் போய் நிலாவைப் பிடித்து வந்தார்எஸ்.ஜே.சூர்யா.படம் சுமாராக ஓடி விட்டதால், நிலாவுக்கு ஏறி விட்டது. தன்னைத் தேடி வந்ததயாரிப்பாளர்களிடம் குண்டக்க மண்டக்க பந்தா காட்ட ஆரம்பித்தார். இதனால் வந்தபடங்கள் எல்லாம் ஜகா வாங்கிக் கொள்ள இப்போது நிலாவின் கையில் ஜாம்பவான்படம் மட்டுமே.இந்தப் படத்திலும் கூட ஆரம்பத்தில் கிராக்கி செய்து கொண்டு குற்றாலத்தில்ஷூட்டிங்கிலிருந்து வெளியேறி ஹைதராபாத்துக்கு ஓடிப் போனார்.பின்பு சமரசம் செய்து அவரை திரும்பக் கூட்டி வந்தார்கள். இருந்தாலும் இன்னும் கூடநிலாவுக்கு கொலஸ்டிரால் குறையவில்லையாம்.தமிழர்களுக்கு நடிகைகளுக்கு எப்படி மரியாதை கொடுக்கத் தெரியவிலலை என்றுஇப்போது பொறுமியுள்ளாராம் நிலா.ஜாம்பவான் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இப்படித் துப்பியுள்ளார் நிலா.தமிழ் ரசிகர்களுககு நடிகைகளை மதிக்கவே தெரியவில்லை. மரியாதை என்றால்என்னவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை.இனிமேல் தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்து நான் யோசிக்கப் போகிறேன்.நல்ல படங்களில் தான் இனிமேல் நடிப்பேன். தமிழில் எனக்கேற்ற நல்ல படஙகள்வரவில்லை. அதனால்தான நான் எதிலும் புக் ஆகவில்லை. பணத்திற்காக நான்இனிமேல் நடிக்க மாட்டேன். அது எனது எய்மும் இல்லை.கிளாமர் மட்டும்தான் காட்ட வேண்டும் என்று என்னிடம் யாராவது வந்தால்அவ்வளவுதான். வான் ஒரு கோடீஸ்வர வீட்டுப் பொண்ணு. எனவே கிளாமர்காட்டித்தான் நான் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை.பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் என்னிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டதால்தான்ஜாம்பவான் படத்தில் மீண்டும் நடிக்க வந்தேன். எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பின்னர் நான்தமிழ்நாட்டில் சந்தித்த இரண்டாவது ஜென்டில்மேன் இவர் மட்டுமே.எஸ்.ஜே.சூர்யாவையும், என்னையும் இணைத்து ஏகப்பட்ட வதந்திகளைக் கிளப்பிவிடடு விட்டார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்க முடியும்.அதனால்தான் எனக்கு அந்த ஊர் என்றாலே இப்போது கோபம் வருகிறது என்றுதமிழையும்,தமிழ் ரசிகர்களையும், சினிமாக்காரர்களையும் போட்டு தாக்கியுள்ளார்நிலா.ஜாம்பவான் அனுபவத்தால் தமிழ் மீது கோபம் கொண்டுள்ள நிலா, தனது பெயரையும்மீரா சோப்ரா என்று ஒரிஜினல் பெயருக்கே மாற்றி விட்டார். இனிமேல் இந்தப்பெயருடன் தான் நடிப்பாராம்.கோவில் கட்டும், பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களே இனிமேலாவதுதிருந்துங்கப்பா!

By Staff

நிலாவுக்கு குசும்பு ஜாஸ்தியாகி விட்டது. இல்லாவிட்டால் தனக்கு அடையாளம்கொடுத்த தமிழ் ரசிகர்கள் மீது தனது துவேஷத்தைக் காட்டுவாரா?

அம்மாவைப் போலவே மனைவி வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்தபிள்ளையாரைப்போல, தனது அன்பே ஆருயிரே படத்தில் சிம்ரன் நடிக்க மறுத்ததால்,அவரைப் போலவே ஒரு ஹீரோயின் வேண்டும் என்று வேண்டி, விரும்பி,டெல்லிக்குப் போய் அங்கிருந்து பஞ்சாபுக்குப் போய் நிலாவைப் பிடித்து வந்தார்எஸ்.ஜே.சூர்யா.

படம் சுமாராக ஓடி விட்டதால், நிலாவுக்கு ஏறி விட்டது. தன்னைத் தேடி வந்ததயாரிப்பாளர்களிடம் குண்டக்க மண்டக்க பந்தா காட்ட ஆரம்பித்தார். இதனால் வந்தபடங்கள் எல்லாம் ஜகா வாங்கிக் கொள்ள இப்போது நிலாவின் கையில் ஜாம்பவான்படம் மட்டுமே.

இந்தப் படத்திலும் கூட ஆரம்பத்தில் கிராக்கி செய்து கொண்டு குற்றாலத்தில்ஷூட்டிங்கிலிருந்து வெளியேறி ஹைதராபாத்துக்கு ஓடிப் போனார்.

பின்பு சமரசம் செய்து அவரை திரும்பக் கூட்டி வந்தார்கள். இருந்தாலும் இன்னும் கூடநிலாவுக்கு கொலஸ்டிரால் குறையவில்லையாம்.

தமிழர்களுக்கு நடிகைகளுக்கு எப்படி மரியாதை கொடுக்கத் தெரியவிலலை என்றுஇப்போது பொறுமியுள்ளாராம் நிலா.ஜாம்பவான் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இப்படித் துப்பியுள்ளார் நிலா.

தமிழ் ரசிகர்களுககு நடிகைகளை மதிக்கவே தெரியவில்லை. மரியாதை என்றால்என்னவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை.இனிமேல் தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்து நான் யோசிக்கப் போகிறேன்.

நல்ல படங்களில் தான் இனிமேல் நடிப்பேன். தமிழில் எனக்கேற்ற நல்ல படஙகள்வரவில்லை. அதனால்தான நான் எதிலும் புக் ஆகவில்லை. பணத்திற்காக நான்இனிமேல் நடிக்க மாட்டேன். அது எனது எய்மும் இல்லை.கிளாமர் மட்டும்தான் காட்ட வேண்டும் என்று என்னிடம் யாராவது வந்தால்அவ்வளவுதான். வான் ஒரு கோடீஸ்வர வீட்டுப் பொண்ணு. எனவே கிளாமர்காட்டித்தான் நான் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை.

பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் என்னிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டதால்தான்ஜாம்பவான் படத்தில் மீண்டும் நடிக்க வந்தேன். எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பின்னர் நான்தமிழ்நாட்டில் சந்தித்த இரண்டாவது ஜென்டில்மேன் இவர் மட்டுமே.

எஸ்.ஜே.சூர்யாவையும், என்னையும் இணைத்து ஏகப்பட்ட வதந்திகளைக் கிளப்பிவிடடு விட்டார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்க முடியும்.அதனால்தான் எனக்கு அந்த ஊர் என்றாலே இப்போது கோபம் வருகிறது என்றுதமிழையும்,தமிழ் ரசிகர்களையும், சினிமாக்காரர்களையும் போட்டு தாக்கியுள்ளார்நிலா.

ஜாம்பவான் அனுபவத்தால் தமிழ் மீது கோபம் கொண்டுள்ள நிலா, தனது பெயரையும்மீரா சோப்ரா என்று ஒரிஜினல் பெயருக்கே மாற்றி விட்டார். இனிமேல் இந்தப்பெயருடன் தான் நடிப்பாராம்.

கோவில் கட்டும், பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களே இனிமேலாவதுதிருந்துங்கப்பா!

Read more about: nila blasts at tamil cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X