twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிலா நிலா, லொள் லொள்! மினரல் வாட்டர் பஞ்சாயத்தில், ஓடிப் போன நிலாவை தேடி ஜாம்பவான்தயாரிப்பாளரும், இயக்குனரும் டெல்லிக்கு காவடி எடுத்து ஓடினர். இப்போதுநிலாவையே சில பார்ட்டிகள் ஓட ஓட விரட்டி நிலாவுக்கு டென்ஷனைகொடுத்துள்ளனவாம். குளிக்க கூவம் தண்ணீர் கணக்காக தொட்டியில் ரொப்பி வைத்து குளிம்மா என்றுஜாம்பவான் இயக்குனர் கூற, கடுப்பாகிப் போன நிலா, மதுரைக்கு ஓடி அங்கிருந்துசென்னைக்கு எஸ்கேப் ஆகி, அங்கிருந்து ஹைதராபாத்துக்கு ஜகா வாங்கி, அங்கும்இருந்து டெல்லிக்கே போய் விட்டார்.நிலா போனால் என்ன என்று முதலில் கித்தாப்பாக இருந்தது ஜாம்பவான் யூனிட்.ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல நிலைமை மாற, பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனும், தயாரிப்பாளரும், இயக்குனரும் டெல்லிக்கு காவடி தூக்கி நிலாவைகுளிர்வித்துகூட்டி வந்து மிச்ச சொச்ச காட்சிகளை சுட்டு முடித்தார்கள்.இது பழைய மேட்டர். புது மேட்டர் என்னன்னா, சமீபத்தில் நிலா நடித்து வரும், லீபடத்தின் படப்பிடிப்பு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் நடந்துகொண்டிருந்தது.நிலா ஓடி வருவதைப் போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குனர்பிரபுசாலமன்.நிலாவும் ஓட ஆரம்பித்தார். காட்சி ஓ.கே. ஆனது. டைரக்டர் கட் சொன்ன பிறகும்நிலா நிற்காமல் ஓடினார். இதனால்குழப்பமடைந்த யூனிட் ஆட்கள், ஆத்தாவுக்குஎன்னாச்சு, நிக்காம ஓடிக்கிட்டிருக்கு என்று குழம்பிப் பாய் பார்த்தபோதுதான்தெரிந்தது, நிலாவுக்கு பின்னால் ஒரு சொறி நாய் துரத்தி வந்து கொண்டிருந்தது.நம்ம நிலாவை நாய் துரத்துவதா என்று ஆவேசம் அடைந்த, யூனிட்டார் கல்லக்கொண்டு எறிந்து நாயை விரட்டி நிலவுக்கு களங்கம் ஏதும் ஏற்படாமல்காப்பாற்றினார்களாம்.வந்து சேர்ந்த நிலா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கொஞ்சம் நேரம் அப்படியேஉட்கார்ந்து விட்டாராம். நிலாவை ஆசுவாசபபடுத்தி விட்டு அப்புறம் மீதக்காட்சியை எடுத்து முடித்தார்களாம்.நல்ல வேளை, யூனிட் ஆட்கள்தான் நாயை ஏவி துரத்த விட்டார்களோ என்றுகோபித்துக் கொண்டு அப்படியே சொந்த ஊருக்கு ஓடிப்போகாமல் இருந்தாரே நிலா.

    By Staff
    |

    மினரல் வாட்டர் பஞ்சாயத்தில், ஓடிப் போன நிலாவை தேடி ஜாம்பவான்தயாரிப்பாளரும், இயக்குனரும் டெல்லிக்கு காவடி எடுத்து ஓடினர். இப்போதுநிலாவையே சில பார்ட்டிகள் ஓட ஓட விரட்டி நிலாவுக்கு டென்ஷனைகொடுத்துள்ளனவாம்.

    குளிக்க கூவம் தண்ணீர் கணக்காக தொட்டியில் ரொப்பி வைத்து குளிம்மா என்றுஜாம்பவான் இயக்குனர் கூற, கடுப்பாகிப் போன நிலா, மதுரைக்கு ஓடி அங்கிருந்துசென்னைக்கு எஸ்கேப் ஆகி, அங்கிருந்து ஹைதராபாத்துக்கு ஜகா வாங்கி, அங்கும்இருந்து டெல்லிக்கே போய் விட்டார்.

    நிலா போனால் என்ன என்று முதலில் கித்தாப்பாக இருந்தது ஜாம்பவான் யூனிட்.ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல நிலைமை மாற, பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனும், தயாரிப்பாளரும், இயக்குனரும் டெல்லிக்கு காவடி தூக்கி நிலாவைகுளிர்வித்துகூட்டி வந்து மிச்ச சொச்ச காட்சிகளை சுட்டு முடித்தார்கள்.

    இது பழைய மேட்டர். புது மேட்டர் என்னன்னா, சமீபத்தில் நிலா நடித்து வரும், லீபடத்தின் படப்பிடிப்பு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் நடந்துகொண்டிருந்தது.

    நிலா ஓடி வருவதைப் போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குனர்பிரபுசாலமன்.

    நிலாவும் ஓட ஆரம்பித்தார். காட்சி ஓ.கே. ஆனது. டைரக்டர் கட் சொன்ன பிறகும்நிலா நிற்காமல் ஓடினார். இதனால்குழப்பமடைந்த யூனிட் ஆட்கள், ஆத்தாவுக்குஎன்னாச்சு, நிக்காம ஓடிக்கிட்டிருக்கு என்று குழம்பிப் பாய் பார்த்தபோதுதான்தெரிந்தது, நிலாவுக்கு பின்னால் ஒரு சொறி நாய் துரத்தி வந்து கொண்டிருந்தது.

    நம்ம நிலாவை நாய் துரத்துவதா என்று ஆவேசம் அடைந்த, யூனிட்டார் கல்லக்கொண்டு எறிந்து நாயை விரட்டி நிலவுக்கு களங்கம் ஏதும் ஏற்படாமல்காப்பாற்றினார்களாம்.

    வந்து சேர்ந்த நிலா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கொஞ்சம் நேரம் அப்படியேஉட்கார்ந்து விட்டாராம். நிலாவை ஆசுவாசபபடுத்தி விட்டு அப்புறம் மீதக்காட்சியை எடுத்து முடித்தார்களாம்.

    நல்ல வேளை, யூனிட் ஆட்கள்தான் நாயை ஏவி துரத்த விட்டார்களோ என்றுகோபித்துக் கொண்டு அப்படியே சொந்த ஊருக்கு ஓடிப்போகாமல் இருந்தாரே நிலா.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X