Don't Miss!
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஏழைகளுக்கு இலவச மருந்து கேட்டு மத்திய அரசு மீது ஜேசுதாஸ் வழக்கு!
இதை ஏற்றுக் கொண்ட கேரள நீதிமன்றம், மத்திய - மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏழைகளுக்கு இலவச மருந்து என்ற திட்டம் நடைமுறையில் இருந்தாலும், அது பெருமளவு மக்களுக்கு பயனளிப்பதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதன் அடிப்படையில், சமீபத்தில் கேரள ஐகோர்ட்டில் பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் ஒரு பொது நல ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகளுக்கு உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்க உத்தரவிட வேண்டும்.
மற்ற பிரிவினருக்கு, இந்த மருந்துகளை நியாயமான விலையில் அளிக்க வேண்டும். தேசிய மருந்து கொள்கை, தேசிய சுகாதார கொள்கை ஆகியவற்றில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இம்மனுவை, தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பன்னுர்மத் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.